search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poonam Pandey"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக செய்தி வெளியானது.
    • பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியானது.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.


    சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பின்னர் அடுத்த நாளே நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "நான் இருக்கிறேன்" - உயிருடன். ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை; ஆனால், இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது.


    கர்ப்பப்பை புற்றுநோய், பிற புற்றுநோய்களை போல் அல்ல; முற்றிலும் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) தடுப்பூசி மற்றும் முன்னரே கண்டறிதல் சோதனைகள் ஆகியவற்றில் இதற்கு தீர்வு உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் நடிகை பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் வலம் வந்தது.

    இந்நிலையில், மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது.
    • இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

    நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.


    நடிகை பூனம் பாண்டே கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அதில், "உங்கள் அனைவருடனும் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளும் நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன்.


    ஆம், "நான் இருக்கிறேன்" - உயிருடன். ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை; ஆனால், இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது.

    கர்ப்பப்பை புற்றுநோய், பிற புற்றுநோய்களை போல் அல்ல; முற்றிலும் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) தடுப்பூசி மற்றும் முன்னரே கண்டறிதல் சோதனைகள் ஆகியவற்றில் இதற்கு தீர்வு உள்ளது. இந்நோயினால் இனி வரும் காலங்களில் எவரும் உயிரிழக்காமல் இருக்க நம்மிடையே இன்று மருத்துவ வழிமுறைகள் உள்ளன. நாம் ஒன்றிணைந்து, பெண்ணினத்தின் மீது இந்த கொடிய உயிர்கொல்லி நோய் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு முடிவை கொண்டு வருவோம்" என்று கூறினார்.


    • நடிகை பூனம் பாண்டே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
    • இவர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.


    நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த நடிகை பூனம் பாண்டே, தனது 32 வயதில் இன்று உயிரிழந்தார். அதாவது, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை பூனம் பாண்டே மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    நடிகை பூனம் பாண்டே கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.

    கணவர் சரமாரியாகத் தாக்கியதில் பிரபல நடிகை படுகாயம் அடைந்த சம்பவம், பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் கடந்தாண்டு சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பை புறநகர் பகுதியில் வசித்து வந்தனர். 

    இந்நிலையில், நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது சாம் பாம்பே சரமாரியாகத் தாக்கியதில், நடிகை பூனம் பாண்டே பலத்த காயம் அடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    கணவருடன் பூனம் பாண்டே
    கணவருடன் பூனம் பாண்டே

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகை பூனம் பாண்டே தன் கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாம் பாம்பேவைக் கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, தனது முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #PoonamPandey
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். தமிழில் நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கியுள்ளார்கள். 

    இந்நிலையில், பிரபல மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #PoonamPandey
    ×