என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindutva"

    • விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.

    கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.

    முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்

    • பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார்.
    • பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத். இவரின் நரகத்தில் சொர்க்கம் (Narkatla Swarg) என்ற புத்தகத்தை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிடுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சியை கிண்டல் செய்யும் வகையில் சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, இந்துத்துவாவை கைவிட்ட பிறகு நரகத்தில் விழுந்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "அவர்கள் {சிவசேனா (UBT)} பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருந்திருந்தால், நரகத்தில் விழுந்து இன்று சொர்க்கத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

    பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். குஜராத் மற்றும் தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பணியை பாலாசாகேப் அங்கீகரித்தார்.

    தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, பாலாசாகேப்பின் கொள்கைகளைக் கைவிட்ட நபர்கள் (உத்தவ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல்), அவரது முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ({சிவசேனா (UBT)}) பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்." எனத் தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதல்வரானார். பின்னர் சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கைப்பற்றினார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) என்ற கட்சியை தொடங்கினார்.

    நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது.

    • நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?
    • என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான் என்றார் சித்தராமையா.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்காமல், இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மென்மையான இந்துத்துவம் என்ற அரசியல் தந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    மென்மையான இந்துத்துவம் என்றால் என்ன? கடுமையான இந்துத்துவம் என்றால் என்ன? என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான்.

    நான் ஒரு இந்து. இந்துத்துவம் என்பது வேறு, இந்து என்பது வேறு. நாம் ராமரை வணங்குவதில்லையா? பா.ஜ.க.வினர் மட்டும்தான் ராமருக்கு கோவில் கட்டுகிறார்களா? நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?

    டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் பஜனைப் பாடல்கள் பாடுவார்கள். எங்கள் கிராமத்தில் நான் அந்தப் பாரம்பரிய நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். மற்ற கிராமங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. பா.ஜ.க.வினர் மட்டும்தான் இந்துக்களா, நாம் இந்துக்கள் இல்லையா என தெரிவித்துள்ளார்.

    • ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
    • கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா.

    பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். அவர் இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கரசேவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததாக இருக்கட்டும். கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அது தவறு என துணிச்சலாக கண்டித்தவர் அவர்.

    ராமர் கோவில் தேவை என தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பியவர் அவர். கோவில்களில் அன்னதானம் போட்டவர். ராமசேது பாலத்தை திராவிட காட்சிகள் எதிர்த்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் அவர்,

    ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபாட்டு ராமர் கோவில் குறித்த கனவு நிறைவேறியிருக்கிறது என்று பேசியிருப்பார். பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், நல்ல நேரம் பார்த்து தான் வேட்புமனு தாக்கல் செய்வார்.

    ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல நாங்கள் விரும்புகிறோம். அவரை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். கர சேவகர்களை ஜெயலலிதா ஆதரித்தபோது இப்போதுள்ள அதிமுக தலைவர்கள் எதிர்க்காதது ஏன்? என்று அவர் பேசியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், இன்று மீண்டும் அதே கருத்தை தமிழிசை சவுந்தராஜனும் பேசியுள்ளார்.

    • 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு படேல் தடை விதித்தார்
    • பிரதமர் வாஜ் பாய் தலைமையிலான பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்கவில்லை

    அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

     

     

    சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1966 வாக்கில் பசுக்கொலைகளுக்கு போராடுகிறோம் என்று வெகுஜன ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு திரட்டி போராட்டம் நடந்தத் துவங்கியது. இதன் உச்சமாக பாராளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார். இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக ஆட்சி அமைந்த போதும் பிரதமர் வாஜ் பாய் ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்காத நிலையில் தற்போது 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தியில்  இருப்பது  சமீப காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. இந்த விரிசலை சரி செய்யவே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கதசிகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த தடை நீக்கம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன.
    • நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.

    காங்கிரஸ் திருவனநாதபுர எம்.பி. சசி தரூர் இந்து மதத்துக்கும், இந்துத்துவாவுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய விழாவில், எழுத்தாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் பேசுகையில், "ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன. ஞான யோகம் இருக்கிறது, அது வாசிப்பு மற்றும் அறிவு மூலம் கிடைப்பது, ஆன்மீகக் கருத்துக்களைப் பற்றி நீங்கள் படித்துணர்வது. அதை தான் நான் முயற்சிக்கிறேன்.

    பக்தி யோகம் இருக்கிறது, அதுதான் பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். பின்னர் ராஜ யோகம் இருக்கிறது, உள்நிலை, தியானம், உங்களுக்குள் உண்மையைத் தேடுவது அது.

    இறுதியாக மகாத்மா காந்தி கடைபிடித்த கர்ம யோகம், அதாவது உங்கள் சக மனிதர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்து அதன்மூலம் மூலம் கடவுளை வணங்குவது.

    இந்து ஒருபோதும் வெறுப்பு என்னும் தீயை பற்றவைக்க மாட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம்முடையது [ இந்து மதம் ] மட்டுமே ஒரே வழி என்று சொல்வதற்கு இடமில்லை.

    துரதிர்ஷ்டவசமாக இந்து மதத்தை சிலர், ஒரு அடாவடியான பிரிட்டிஷ் கால்பந்து குழு போன்ற சிறு அடையாளமாக குறைக்கிறார்கள். மேலும் அவர்கள், நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.

    நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லவில்லையானால் உங்களை சவுக்கால் அடிக்க போகிறேன் என்று மிரட்டுகிறார்கள். அது இந்து மதம் இல்லை. அதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார். 

    ×