search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindutva"

    • 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு படேல் தடை விதித்தார்
    • பிரதமர் வாஜ் பாய் தலைமையிலான பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்கவில்லை

    அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

     

     

    சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1966 வாக்கில் பசுக்கொலைகளுக்கு போராடுகிறோம் என்று வெகுஜன ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு திரட்டி போராட்டம் நடந்தத் துவங்கியது. இதன் உச்சமாக பாராளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார். இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக ஆட்சி அமைந்த போதும் பிரதமர் வாஜ் பாய் ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்காத நிலையில் தற்போது 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தியில்  இருப்பது  சமீப காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. இந்த விரிசலை சரி செய்யவே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கதசிகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த தடை நீக்கம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
    • கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா.

    பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். அவர் இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கரசேவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததாக இருக்கட்டும். கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அது தவறு என துணிச்சலாக கண்டித்தவர் அவர்.

    ராமர் கோவில் தேவை என தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பியவர் அவர். கோவில்களில் அன்னதானம் போட்டவர். ராமசேது பாலத்தை திராவிட காட்சிகள் எதிர்த்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் அவர்,

    ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபாட்டு ராமர் கோவில் குறித்த கனவு நிறைவேறியிருக்கிறது என்று பேசியிருப்பார். பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், நல்ல நேரம் பார்த்து தான் வேட்புமனு தாக்கல் செய்வார்.

    ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல நாங்கள் விரும்புகிறோம். அவரை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். கர சேவகர்களை ஜெயலலிதா ஆதரித்தபோது இப்போதுள்ள அதிமுக தலைவர்கள் எதிர்க்காதது ஏன்? என்று அவர் பேசியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், இன்று மீண்டும் அதே கருத்தை தமிழிசை சவுந்தராஜனும் பேசியுள்ளார்.

    • நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?
    • என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான் என்றார் சித்தராமையா.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்காமல், இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மென்மையான இந்துத்துவம் என்ற அரசியல் தந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    மென்மையான இந்துத்துவம் என்றால் என்ன? கடுமையான இந்துத்துவம் என்றால் என்ன? என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான்.

    நான் ஒரு இந்து. இந்துத்துவம் என்பது வேறு, இந்து என்பது வேறு. நாம் ராமரை வணங்குவதில்லையா? பா.ஜ.க.வினர் மட்டும்தான் ராமருக்கு கோவில் கட்டுகிறார்களா? நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?

    டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் பஜனைப் பாடல்கள் பாடுவார்கள். எங்கள் கிராமத்தில் நான் அந்தப் பாரம்பரிய நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். மற்ற கிராமங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. பா.ஜ.க.வினர் மட்டும்தான் இந்துக்களா, நாம் இந்துக்கள் இல்லையா என தெரிவித்துள்ளார்.

    ×