என் மலர்
நீங்கள் தேடியது "உத்தவ் தாக்ரே"
- பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார்.
- பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத். இவரின் நரகத்தில் சொர்க்கம் (Narkatla Swarg) என்ற புத்தகத்தை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிடுகிறார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சியை கிண்டல் செய்யும் வகையில் சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, இந்துத்துவாவை கைவிட்ட பிறகு நரகத்தில் விழுந்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "அவர்கள் {சிவசேனா (UBT)} பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருந்திருந்தால், நரகத்தில் விழுந்து இன்று சொர்க்கத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.
பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். குஜராத் மற்றும் தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பணியை பாலாசாகேப் அங்கீகரித்தார்.
தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, பாலாசாகேப்பின் கொள்கைகளைக் கைவிட்ட நபர்கள் (உத்தவ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல்), அவரது முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ({சிவசேனா (UBT)}) பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்." எனத் தெரிவித்தார்.
சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதல்வரானார். பின்னர் சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கைப்பற்றினார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) என்ற கட்சியை தொடங்கினார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது.
- தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்திய 3வது கட்டாய மொழி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் இந்தி 3ஆவது கட்டாய மொழி என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என்பதை அனுமதிக்க மாட்டோம் என சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியிண் தொழிலாளர்கள் பிரிவான பாரதிய கம்கார் சேனா நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பேசும்போது "சிவசேனாவுக்கு (UBT) இந்தி மொழி மீது எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
- மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
- மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன
மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.
ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.






