search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uddhav Thackeray"

    • சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
    • இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்று ஆய்வு செய்யப்படும்.

    மும்பை:

    மராட்டிய மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவியது.

    மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் அந்த கூட்டணிக்கு வெறும் 58 இடங்கள்தான் கிடைத்தன. இந்த தோல்வி காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சிகளை கொடுத்துள்ளது.

    குறிப்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இந்த தோல்வியை இன்னமும் ஜீரணிக்க முடியாத நிலையில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தவறான முடிவுகளால் தான் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பதாக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் கருதுகிறார்கள்.

    இதனால் காங்கிரஸ் உடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் பலரும் போர்க் கொடி தூக்கி உள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இனியும் தொடர கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கூடாது என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா முக்கிய கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    இதை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வந்துள்ளனர். எனவே மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "தேர்தல் தோல்வி எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. காங்கிரஸ் சரியான ஒருங்கிணைப்பு கொடுக்கவில்லை என்ற எண்ணம் எங்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

    எனவே இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்று ஆய்வு செய்யப்படும். அதற்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஒரு போதும் விலகி செல்ல மாட்டோம்" என்றார்.

    • உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வி நான் எதிர்பார்ததுதான்
    • கங்கனா ரனாவத் பங்களாவி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது என்று மாநகராட்சி இடித்தது

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.பி. ஆனவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

    பொதுவெளியில் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கண்டனத்துக்கு உள்ளாகும் எம்.பி. கங்கனா பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய பஞ்சாப், அரியானா விவசாயிகளைப் பயங்கரவாதி என கூறி சர்ச்சை செய்தார்.

    இதற்காக அரியானா விமான நிலையத்தில் வைத்து சிஎஸ்ஐஎப் பெண் அதிகாரி குல்விந்தர் கவுர் என்ற பெண்ணிடம் கங்கானா கன்னத்தில் அரை வாங்கிய சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் நடந்து முடித்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த இந்தியா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறித்து கங்கனா காட்டமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.

    மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வி நான் எதிர்பார்ததுதான்,பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்களா என்பதைப் பொறுத்தே ஒருவரை கடவுள் என்றும் அரக்கன் என்றும் அடையாளம் காண முடியும்.

     

    பெண்களை இழிவு செய்யும் அரக்கன் உத்தவ் தாக்கரே. சாத்தானுக்கு நேர்ந்த அதே முடிவை அவர் சந்தித்துள்ளார். பெண்களை அவமதிக்கின்றவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது. எனது வீட்டை இடித்து என்னை வார்த்தைகளால் பழித்தவர்கள் அவர்கள். வளர்ச்சிக்கு வாக்களித்த மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி, பிரதமர் மோடி மகத்தான தலைவர் என்று தெரிவித்துள்ளார்.

     பங்களா

    முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாரஷ்டிர அரசு இருந்தபோது பாந்த்ரா மேற்குபகுதியில் இருந்த கங்கனா ரனாவத் பங்களாவின் சில பகுதிகள் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் 

    288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அஜித் பவார் சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணியை சேர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    • பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.
    • கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் இந்த சூழல் ஏற்பட்டது

    288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    கூட்டணியில் பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது. 

    ஆனால் எதிரணியான மகா விகாஸ் ஆகாதி அணியை சேர்ந்த காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவார் என்சிபி 10 இடங்களிலும் என கூட்டணியே மொத்தமாக 46 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

    எனவே அமைய மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத சூழல் உருவாகி உள்ளது. மகாராஷ்டிர அரசியலில் கடந்த 57 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான சூழல் ஏற்பட்டது கிடையாது.

     

    பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10% இடங்களை பெற்று இருக்க வேண்டும். 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சியிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவரைப் பரிந்துரைக்க முடியும்.

    ஆனால் எதிர் கூட்டணியான மகா விகாஸ் அகாதியில் அதிகபட்சமான இடங்களை வென்றது உத்தவ் தாக்கரே சிவா சேனா. அதுவும் 20 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

    எனவே அவரும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது மகா விகாஸ் அகாதி கூட்டணி தேர்தலுக்கு முன்னரே உருவாகியிருந்தாலும், விதிகளின்படி, மூன்று கட்சிகளின் கூட்டு பலத்தைக் கொண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெற முடியாது என்று சட்டமன்ற முன்னாள் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற எதிர்கட்சித் தலைவர் இல்லாத சூழல் மகாராஷ்டிராவில் கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை.
    • இந்த நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கும் என பாஜக தலைவர் நட்டா கூறியிருந்தார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

    இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

    மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சறுக்கினாலும் சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் மிகப்பெரிய வெற்றி தொடர்பாக பேசிய உத்தவ் தாக்கரே, "2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றின்போது மகாராஷ்டிரா மக்கள் ஒரு குடும்பத் தலைவனாக எனது பேச்சை கேட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

    கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் ஆளும் கட்சி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்று தெரியவில்லை. பாஜக கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஏக்நாத் ஷிண்டே, இனி பட்னாவிசின் கீழ் தான் பணிபுரிய வேண்டும். மகாராஷ்டிரா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் காலி செய்ய வேண்டும்.

    இந்த நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கும் என பாஜக தலைவர் நட்டா கூறியிருந்தார். தற்போது நடப்பதை பார்க்கும்போது இந்த நாடு ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற திசையில் நகர்வது போல் தெரிகிறது. மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் 89 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

    • வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார்.
    • ஆதித்யா தாக்கரே 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 229 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 49 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

    காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்ததையொட்டி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது.

    இந்த தேர்தலில் வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார். ஆரம்பத்தில் சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிந்த் முர்ளி தியோராவிடம் பின்னடைவை சந்தித்த ஆதித்யா அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் முன்னிலை பெற்று இறுதியாக 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • பிரதமர் மோடியின் பைகளை சோதனை செய்வார்களா என்று உத்தவ் தாக்கரே காட்டம்.

    மகாராஷ்டிராவின் யவத்மாலில் ஹெலிகாப்டரில் தரை இறங்கிய சிவசேனா (உத்தவ் தாக்ரே) தலைவர் உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, அமித் ஷா தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரது பைகளை நீங்கள் சோதனை செய்வீர்களா? என்று காட்டமாக தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரே பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் பரவியது.

    இதனையடுத்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "தேர்தல் ஆணையத்தின் மீது கோபமில்லை. அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பைகளை சோதனை செய்வார்களா என்று கேட்கிறேன். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் பைகளை தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?" என்று பேசினார்.

    • சாதகமான தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியதால் தனித்து வேட்புமனு தாக்கல்.
    • வேட்புமனுவை திரும்பப்பெற மறுப்பு தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

    இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு நடைபெற்றது. அப்போது மூன்று கட்சிகளில் உள்ள தலைவர்களில் சிலர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதியில் மனுதாக்கல் செய்தனர்.

    இது கூட்டணி கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்தியது. என்றபோதிலும் இவைகள் அனைத்தும் பேசி தீர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறினர்.

    கடந்த சில நாட்களாக உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவர்களுடைய கட்சியில் எதிர்த்து மனுதாக்கல் செய்த தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல தலைவர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற சம்மதித்தனர்.

    ஆனால், சில எதிர்ப்பு தலைவர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். அப்படி திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த ஐந்து தலைவர்களை உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து விலக்கியளளார். பிவாண்டி கிழக்கு எம்.எல்.ஏ. ரூபேஷ் மத்ரே, விஷ்வாஸ் நந்தேகர், சந்திரகாந்த் குகுல், சஞ்சய் அவாரி, பிரசாத் தாக்கரே ஆகிய தலைவர்களை நீக்கியுள்ளார்.

    • பாஜக தலைவர் ஷைனா என்.சி.அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
    • போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மாகாயுதி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக இருந்தவர் ஷைனா என்.சி. திடீரென பா.ஜ.க.-வில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.

    கட்சியில் சேர்ந்த உடனே மும்பாதேவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மும்பாதேவி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "இந்த தொகுதியில் போட்டியிடும் ஷைனா என்.சி. பா.ஜ.க. வில் இருந்த போது அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார். இவரை போன்ற இறக்குமதி பொருளை ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர்த்துள்ளனர். இதனால் அவர் கட்சி வேட்பாளராகிவிட்டார்" என ஆபாசமாக விமர்சித்தார்.

    இது குறித்து நக்பாடா போலீஸ் நிலையத்தில் ஷைனா என்.சி., புகார் அளித்தார். போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. உத்தவ் தாக்கரேவின் தந்தை பாலாசாகேப் உயிருடன் இருக்கும்போது அரவிந்த் சாவந்த் இவ்வாறு பேசியிருந்தால் அவரின் வாயை பாலாசாகேப் உடைத்திருப்பார். பெண்களை மதிக்கத்தவர்களுக்கு வரும் தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
    • டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.

    மும்பை:

    உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே சமீபத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே மகனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே வெளியிட்ட தகவலில், "முழு உடல் பரிசோதனைக்காக முன்பே திட்டமிட்டதன் படி உத்தவ் தாக்கரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார்" என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஒருநாள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் தனது இல்லமான மாதோஸ்ரீக்கு வெளியே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    டாக்டர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ஆனால் ஒருவர் எவ்வளவு ஓய்வெடுக்க முடியும்? துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை எனக்கு ஓய்வே கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவசேனா உடைய காரணமாக இருந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உத்தவ் தாக்கரே துரோகிகள் என்று குறிப்பிடுவது வழக்கம்.

    • உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதய தமனிகளில் உள்ள அடைப்பை கண்டறியும் சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், இன்று காலை, "உத்தவ் தாக்கரே, சர் ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உங்கள் ஆசீர்வாதத்துடன் அவர் நன்றாக இருக்கிறார். மேலும் அவர் பணியாற்றவும் மக்களுக்கு சேவை செய்யவும் தயாராக இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    • அமித் ஷா பூட்டிய அறைக்குள் பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
    • அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஒரு கூட்டணியும் காங்கிரஸ், உத்தரவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

    காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத பவார் கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தது. இநத வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் அறுவடை செய்ய இந்த கூட்டணி விரும்புகிறது. அதேவேளையில் மக்களவையில் அடைந்த தோல்வியை சட்டமன்ற தேர்தல் வெற்றியால் சரிக்கட்ட பா.ஜ.க. கூட்டணி விரும்புகிறது.

    இந்த நிலையில் பா.ஜ.க. தலைவருக்கு அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க உத்தரவிட்டுள்ளார் என உத்தவ் தாக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் "சமீபத்திய நாக்பூர் பயணத்தின்போது, அமித் ஷா பூட்டிய அறைக்குள் பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்களை பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் என்னையும் சரத் பவாரையும் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் ஏன் பூட்டிய அறைக்குள் பேசுகிறார்? அவர் இங்கே மக்கள் முன் பேசி வேண்டும்.

    உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை ஏன் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். அப்படி என்றால்தான் பா.ஜ.க.வால் மகாராஷ்டிராவை கொள்கை அடிக்க முடியும்.

    30 வருடத்திற்கு மேலாக எங்களுடன் கூட்டணியில் இருந்த பா.ஜ.க., பிரிந்தது. எனினும், சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றது.

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் வேட்டையாடுவது (எதிர்க்கட்சி தலைவர்கள்) தொடர்பான பாஜகவின் இந்துத்துவா உடன் உடன்படுகிறாரா? என ஆச்சரியப்படுகிறேன்.

    வருகின்ற தேர்தல் அதிகாரத்தை பற்றியது அல்ல. அவை மகாராஷ்டிரா கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முக்கியமானவை.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    • 'இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது'
    • 'தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்'

    மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, இந்த அசம்பாவிதத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி எதிர்க்கட்சிகள் இன்று தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    இந்த பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, ராமர் கோவில், புதிய பாராளுமன்ற கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவது, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது என இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது. சிலை உடைந்ததற்காக மோடி கேட்ட மன்னிப்பைக் கவனித்தீர்களா? அந்த மன்னிப்பில் ஆணவம் தெரிகிறது. மோடி மன்னிப்பு கேட்டது எதற்காக?, தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதை மகாராஷ்டிர மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

     

    மாநிலத்தில் பல இடங்களில் மன்னர் சிவாஜியின் சிலை உள்ளது , ஆனால் மால்வனில் உள்ளது கீழே விழுந்துள்ளது, இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழலை மக்கள் உணர்கின்றனர். இது சிவாஜி மகாராஜ் -கு இழைக்கப்பட்ட அவமானம், சிவாஜி மன்னர் மட்டும் கிடையாது, அவர் எங்களுக்கு கடவுள், சிவாஜியை அவமதித்தவர்களை மகாவிகாஷ் கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்கும் என்று தெரிவித்தார். 

    ×