என் மலர்
இந்தியா

உத்தவ் தாக்கரே பச்சோந்தி: ஏக்நாத் ஷிண்டே கடும் தாக்கு..!
- 2019ஆம் ஆண்டு பாஜக உடனான கூட்டணியை உத்தவ் தாக்கரே முறித்துக் கொண்டார்.
- காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறைமுகமாக உத்தவ் தாக்கரேவை பச்சோந்தி என கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
2019 தேர்தலின்போது பாஜக மற்றும் பிரிக்கப்படாத சிவசேனா மெஜாரிட்டியை தக்கவைத்துக் கொள்ள உத்தவ் தாக்கரேவுக்கு 40 முதல் 50 முறை பட்நாவிஸ் போன் செய்தார். ஆனால் பாஜக தலைவரின் போனை அவர் (உத்தவ் தாக்கரே) எடுக்கவில்லை.
பச்சோந்தியை போன்று விரைவாக கலரை மாற்றிக் கொள்ளும் நபரை இதுவரை மகாராஷ்டிரா பார்த்ததில்லை. அவர் யாரை குறைவாக நினைத்தாரோ, அவர்களுடன் சென்றுவிட்டார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததை சுட்டிக் காட்டினார்.
2017 உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 84 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 82 இடங்களில் வெற்றி பெற்றது. எனது வேண்டுகோளை ஏற்று பட்நாவிஸ் மும்பை மேயர் பதவியை தர ஒப்புக்கொண்டார். 2019-ல் கூட்டணியில் இருந்து வெளியேறி பட்நாவிஸ்க்கு துரோகம் செய்தார்.
சிவசேனாவில் இருந்து பிரிந்து உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான எம்.எல்.ஏ.-க்களுடன் இருந்தபோது, டெல்லி பாஜக தலைவர்களுக்கு போன் செய்து, ஏக்நாத் ஷிண்டே பிரிவை ஆதரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ், ஆளுங்கட்சி பக்கம் வருமாறு உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் பட்நாவிஸை ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசினார். அதன்பிறகு உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.






