என் மலர்
நீங்கள் தேடியது "மும்மொழி கொள்கை"
- தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம்.
- தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி, கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆர்.டி.இ. நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். 60:40 என்ற விகிதாசாரம் இருக்கும்போது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும்?
அவர் சொல்வது அரைகுறையாக கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல உள்ளது. ஆர்.டி.இ. ஆக்ட் என்பது உச்சநீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் படிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு அரசாங்கம் வருடம் தோறும் அதற்கான நிதியை மட்டுமே வெளியிட வேண்டும். ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் சொல்வதையே கேட்காமல் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அந்த பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ஒரு வருடத்தில் 1 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். மத்திய அரசின் செயல்பாடுகளால் அந்த இணையதளத்தையே திறக்க முடியாத நிலை உள்ளது.
இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவிக்கிறார். தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம். இங்கு இரு மொழிக் கொள்கை போதுமானது. அண்ணா அந்த காலத்தில் இருந்தே கூறி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை வைத்து நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். மத்திய அரசு சொல்வதைப் போல 3 மொழிகள் மட்டுமின்றி 22 ெமாழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என நாங்களும் கூறுகிறோம். ஆனால் அதில் கட்டாயம் இருக்கக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டு 3-வது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.
2 இட்லி போதும் என்கிறோம். ஆனால் 3வது இட்லியை வாயில் திணித்தால் குழந்தைகள் வாந்திதான் எடுப்பார்கள். எங்களுக்கு தேவையென்றால் நாங்கள் படிக்கிறோம். எங்களுக்கு அறிவுதான் முக்கியம். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் ஒரு செல்போன் போதுமானது. எந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் கூகுள் மூலம் மொழி பெயர்ப்பு செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். தமிழ் என்பது அடையாளம். ஆங்கிலம் என்பது வாய்ப்புகள். தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.
உலகம் முழுவதும் எனது கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது என நாங்கள் கூறுகிறோம். ஆனால் மத்திய அரசு 3-வது மொழி என கூறி ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கின்றனர். சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் வந்து விடும். புராண கதைகளை எடுத்து கூறி மாணவர்களை அறிவியல் சார்ந்து சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பணிகளை அவர்கள் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்
- கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல; அது மக்கள் அடிப்படை உரிமை.
சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் கல்வி நிதி வழங்க முடியும் என்று பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட கருத்துகள், தமிழக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் வரலாற்றில் இல்லாத அநீதி ஆகும். "தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் ஆணவத்துடன் கூறியதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.
கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல; அது மக்கள் அடிப்படை உரிமை. ஒன்றிய அரசு, கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவிர்க்க முடியாத பாதிப்புகளுக்கு உட்படுத்துகிறது. இது அநீதியும், அதிகார வன்முறையும் கலந்த, வரலாற்றில் மிகவும் கொடிய செயல்.
எந்தவொரு நிபத்தனையையும் விதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
- இந்திய மக்கள்தொகையில் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
- உ.பி.யில் சில மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற 'திங்க் இந்தியா' மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கிறது என்று கூறுபவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்.
கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்(NEP) கீழ் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் அரசியலைத் தவிர்க்க வேண்டும்.
மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதியை தர முடியும். நிதியுதவி உள்ளிட்ட மத்திய அரசின் முயற்சிகள் மாணவர் நலன் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். இது சரியானது அல்ல. கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை திணிக்கக் கூடாது.
நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம் என பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர இத்தனை மொழிகள் கற்பிக்கப்படும்போது, மூன்றாவது மொழியால் என்ன பிரச்சனை?
நாங்கள் எந்த மொழியையும் யாரையும் மீது திணிக்கவில்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு மொழிகளும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஒரு மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு மொழிகளை மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம்.
பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது அவர்கள் விரும்பினால் தமிழைக்கூட தேர்வு செய்யலாம்.
இந்தியாவில் சுமார் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் தாய்மொழிகள் அல்லது பிராந்திய மொழிகளைப் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள். நான் ஒரு ஒடியா, எனக்கும் என் மொழி மீது அன்பு உண்டு, ஆனால் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன். மொழியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். சமூகம் அதைத் தாண்டி முன்னேறிவிட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை நிறுத்தி வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதான், "இது ஒரு அரசியல் பிரச்சினை. நான் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் பலமுறை இதைப்பற்றி பேசியுள்ளேன். நாடு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்றுக்கொண்டது. அதை நாம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை.
மத்திய அரசு பல திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளது. வயது வந்தோர் கல்வித் திட்டங்களுக்கும், பிரதமர் போஷன் (மதிய உணவு) திட்டத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசஷ் மற்றும் எம்.பி கனிமொழியை நேரில் சந்தித்தபோது RTE நிதி குறித்து மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.
மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இதில் அரசியல் நலன்களைக் கொண்டு வர வேண்டாம். நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன் " என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
- பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
- மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின்கீழ் , மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை 3-வது கட்டாய மொழியாக மாற்ற அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.
இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இணைந்து மும்பையில் நேற்று வெற்றி பேரணி நடத்தினர்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே மராத்தி மொழியை திணிக்க மராட்டியர் யாராவது முயற்சி செய்துள்ளார்களா?
தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் இந்தியை திணிக்க முயற்சி செய்து பாருங்கள்!. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்தினால், எங்கள் சக்தியைக் நாங்கள் காட்டுவோம்" என்று தெரிவித்தார்.
- மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய அரசு அறிவித்திருந்தது.
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் மராட்டிய அரசு பணிந்துள்ளது..
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், "மூன்றாம் மொழியாக இந்தியை திணிக்கும் முடிவு ரத்து. மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு. இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெறாது" என்று தெரிவித்துள்ளார்
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
- மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள மாநில அரசு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தி கட்டாயமாக இருக்காது என்றும் பொதுவாக மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், "ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் குறைந்தது 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் கற்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட மொழிக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார் அல்லது அந்த மொழி ஆன்லைனில் கற்பிக்கப்படும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் மராத்தி மொழி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிரா அரசு ஒன்றாம் வகுப்பிலிருந்து இந்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த முயன்றபோது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22 அன்று, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதா பூசே, இந்தி கட்டாயமாக்கப்படாது என்று கூறியிருந்த நிலையில் தற்போதைய உத்தரவு வந்துள்ளது.
- மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது.
- தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தோம் என்று முதல்வர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதாக பாஜக கூட்டணி அரசு அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஏற்கனவே உள்ள மராத்தி, ஆங்கிலத்துடன், இந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை இந்தி திணிப்பு என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தப்படுவதை மகாராஷ்டிரா அரசின் மொழி ஆலோசனைக் குழு வெளிப்படையாக எதிர்த்துள்ளது.
மேலும் தனது கடிதத்தில், இந்த நடவடிக்கை கல்வி ரீதியாக நியாயமானது அல்ல. மாணவர்களின் உளவியலுக்கு ஏற்றது அல்ல என்று தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது. அதற்குப் பதிலாக, மராத்தி உட்பட இரண்டு மொழிகள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
SCERT (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு குழுவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களில் பேராசிரியர்கள் மற்றும் மொழியியல் மற்றும் மொழி அறிவியலில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள் இருவரும் உள்ளனர்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குழுவின் கடிதத்தைப் படிக்கவில்லை என்றும் இந்தி, மராத்திக்கு மாற்று அல்ல என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மராத்தி கட்டாயம். ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வது கட்டாயமாகும், அவற்றில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
எனவே அமைச்சர் தலைமையிலான மொழிக் குழு தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, இந்தி கற்பிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை எங்களிடம் இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தனர்" என்று தெரிவித்தார்.
- மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது
- மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது?
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.
தற்போது மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3ஆவது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறை படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1ஆம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2, 3, 4 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடவடிக்கை இந்தி திணிப்பு என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கையை அரசு விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். அதனை கல்விக்கு கொண்டுவர வேண்டாம். மாநிலத்தில் அனைத்தையும் இந்திமயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை நவநிர்மாண் சேனா ஒருபோதும் ஏற்காது. நாங்கள் இந்துக்கள், ஆனால், இந்தி அல்ல. மாநிலத்தை இந்தி என்று சித்திரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இங்கு நிச்சயம் ஒரு போராட்டம் வெடிக்கும்.
இவற்றையெல்லாம் பார்த்தால், வேண்டுமென்றே போராட்டத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்று தோன்றுகிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மும்மொழி கொள்கையை இந்தி திணிப்பு என தமிழ்நாடு முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது.
- புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள்
மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
- மாநில சுயாட்சி தீர்மானத்தை பாஜக ஏற்காது என கூறி அக்கட்சி எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை தர மறுத்து மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ருசிகர விவாதம் நடந்துள்ளது.
மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் புதிதாக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்றுள்ள நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவையில் பேசும்போது, முதலமைச்சர் கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.
மேலும் அவர் மலையாளத்தில் எப்படி பேசினார் என நயினார் நாகேந்திரன் அமொழியில் பேசிக்காட்டினார். தனது உரையின்போது பல்வேறு மொழிகளில் நயினார் நாகேந்திரன் பேசிக்காட்டினார்.
அப்போது எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் மாறியிருக்கக்கூடிய நிலையில் அவர் பல மொழி பேசுவதை பார்த்தால் பழமொழிப் புலவர் போல இருக்கிறார். எனவே அவர் தேசிய தலைவர் ஆவதற்கு பலமான அச்சாரம் போடுகிறாரோ என்னவோ என்று கேலியாக தெரிவித்தார்.
இதை கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது. இதைத்தொடர்ந்து மாநில சுயாட்சி தீர்மானத்தை பாஜக ஏற்காது என கூறி அக்கட்சி எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
- மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதி மறுக்கப்பட்டது.
- கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை தர மறுத்து மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ருசிகர விவாதம் நடந்துள்ளது.
மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் புதிதாக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்றுள்ள நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவையில் பேசும்போது, முதலமைச்சர் கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.
அப்போது பேசத்தொடங்கிய சபாநாயகர் அப்பாவு, பிரதமர் கூட தமிழில் பேசுகிறார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது வணக்கம் என சொல்லவில்லையா, அதுபோல தான் இதுவும் என பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவையில் சிரிப்பலை பரவியது.
இதற்கிடையே எழுந்த முதல்வர் ஸ்டாலின், மலையாளத்தில் தாம் பேசியதை தமிழில் எழுதி வைத்துதான் படித்தேன் என விளக்கம் அளித்தார்.






