என் மலர்
இந்தியா

மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என்பதை அனுமதிக்க மாட்டோம்: உத்தவ் தாக்கரே
- தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்திய 3வது கட்டாய மொழி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் இந்தி 3ஆவது கட்டாய மொழி என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என்பதை அனுமதிக்க மாட்டோம் என சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியிண் தொழிலாளர்கள் பிரிவான பாரதிய கம்கார் சேனா நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பேசும்போது "சிவசேனாவுக்கு (UBT) இந்தி மொழி மீது எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
Next Story






