search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison"

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    • சங்கமத்துறை அருகே 150 க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் அமைந்துள்ளன.
    • குட்டையில் வளர்க்கப்பட்ட இறால்கள் செத்து மிதந்தன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவிரிப்பம்பட்டினம் ஊராட்சி பூம்புகார் காவிரி சங்கமத்துறை அருகே 150 க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் அமைந்துள்ளன.

    இவற்றிற்கு நடுவே மந்தகரையை சேர்ந்த தனமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 2 இறால் குட்டைகள் உள்ளன.

    இந்நிலையில் தன மூர்த்தியின் இறால் குட்டையில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து குட்டையில் வளர்க்கப்பட்ட இறால்கள் டன் கணக்கில் செத்து மிதந்தன.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தனமூர்த்தி இது குறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் அங்கு கடந்த விஷ பாட்டிலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த இரண்டு குட்டைகளிலும் விஷம் கலந்ததால் இறந்த இறால்களின் மதிப்பு ரூ 40 லட்சம் எனக் கூறப்படுகிறது.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விரும்பிய படிப்பை படிக்க முடியாததால் வேதனை
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா(வயது17).

    இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ரம்யா விவசாயம் தொடர்பான படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் அவரை அவரது பெற்றோர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து விட்டனர்.

    இதன் காரணமாக ரம்யா கடந்த சில நாட்களாக படிப்பில் நாட்டம் இல்லாமல் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று கல்லூரியில் இருந்த அவர் கழிவறைக்கு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்து எலி மருந்தை சாப்பிட்டார்.

    பின்னர் வகுப்பறையில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த பேராசிரியர்கள் உடனடியாக ரம்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் ரம்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால்
    • மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (48). விவசாயி. இவரது மனைவி தீபலட்சுமி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் மோகன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் மனைவி தோட்டத்திற்கு சென்று விட்ட நேரத்தில் தனியாக வீட்டில் இருந்த மோகன் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்.
    • மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லுர் அருகே கோட்டைமேடு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (வயது35). இவர் தனது மகன் மேசாக் (11) மகள் மேகா (9) ஆகியோரு டன் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு அலங்காநல்லுர் போலீஸ் நிலையத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தார்.

    அப்போது கண்மணி மற்றும் குழந்தைகள் திடீ ரென மயங்கி விழுந்து உள்ளனர். பின்னர் கண்மணியிடம் போலீசார் விசாரித்தபோது, தான் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமார் 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரி வித்தார். மேலும் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த சரண் ராஜ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு சுமார் 2 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வந்த தாகவும் கூறினார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணுடன் சரண் ராஜூக்கு திருமணம் ஆகி விட்டது தெரியவந்ததால் தன்னை சரண்ராஜ் ஏமாற்றிய மன வேதனையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து தானும், தனது 2 குழந்தைகளும் எலி பேஸ்டை சாப்பிட்டு விட்ட தாகவும் கூறி உள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த போலீ சார் உடனடியாக அவர்கள் 3 பேரையும் அலங்காநல்லுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக் காதலால் இளம்பெண் தனது இரு குழந்தையுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேர்மதுரைக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
    • வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    மேலப்பாளையம் சிவராஜபுரம் அன்னை நகர் தெருவை சேர்ந்தவர் சேர்ம துரை (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது மனைவி தருவை யில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து சேர்மதுரை நேற்று மாலை மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக தருவைக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியை சமாதானம் செய்ய முயன்ற போது அவர் கணவருடன் வர மறுத்து ள்ளார். இதில் வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சேர்ம துரை இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது.
    • சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (42).

    இவர் புதன் சந்தையில் கால்நடை மருந்து கடை வைத்துள்ளார். இவர் தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சேந்தமங்கலம் அடுத்த முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சுதாகரின் உறவினர்கள், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    மாலை கிடா வெட்டு விருந்து நடைபெற்றது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது. இதனால் அவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் சுதாகர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீட்டும் கிடா விருந்துக்கு திரும்பினார். இந்நிலையில் அவரை அதிகளவு விஷ வண்டுகள் கடித்ததாக தெரிகிறது.

    இதனால் உடலில் வேகமாக விஷம் பரவியதில் கிடா விருந்து பந்தலில் மீண்டும் சுதாகர் மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர் கதறி அழுதனர்.

    இதனிடையே மற்ற 11 பேரும் நாமக்கல், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிடா விருந்து நிகழ்ச்சியில் விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெற்றோர் வேறு கல்லூரியில் சேர்க்காததால் வேதனை
    • வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள டி.காளிபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.

    இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு அந்த கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை.

    எனவே அவர் தனது பெற்றோரிடம் வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். ஐ.டி. சேர்க்குமாறு கடந்த 2 மாதங்களாக கூறி வந்தார்.

    பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வந்ததால் மாணவி சேர நினைக்கும் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருந்ததால் அதே கல்லூரியிலேயே படிக்குமாறு மாணவியிடம் கூறி வந்தனர்.

    இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவே தனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுதா (வயது34) இவர் நேற்று அதிகாலை விஷம் குடித்தார். இதனையடுத்து அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
    • சம்பத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடையை அடுத்துள்ள மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையூர் துரைசாமி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி(60).இவரது மனைவி ஜெயமணி(56).

    இந்த தம்பதிக்கு விமலா(36) என்ற மகளும், சம்பத்குமார்(34) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பத் குமாருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்து காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.

    இதனையடுத்து அவரை மீட்ட ஜெயமணி 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல் காரமடை ஆர்.வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(48). இவரது மனைவி சுபிதா(37).பிரகாஷ் காரமடையை அடுத்த பெட்டதாபுரம் தண்ணீர் பந்தல் பகுதியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.

    சிப்ஸ் கடை மூலமாக போதிய வருமானம் கிடைக்காததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரி கிறது. இதனால் விரக்தி யடைந்து நேற்று காலை விஷம் குடித்து தற்கொ லைக்கு முயன்றார்.

    அவரை மீட்ட மனைவி சுபிதா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    2 தற்கொலை சம்ப வங்கள் தொடர்பாக கார மடை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
    • கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் மணி.

    இவரது வினோத் (வயது 33).

    இவர், உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    அவர் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தபால் அலுவலக மேலதிகாரிகள் அஞ்சலக கணக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    அதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

    கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார்.

    அதில், எனது மகன் வினோத், அஞ்சலக கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ேமலும் அதிகாரிகள் மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கி சென்று விட்டனர்.

    மேலும் அவர்கள் எனது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.

    இது தவிர எனது மகன் உடையாளூரை சேர்ந்த 2 பேரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக அவர்களும் வட்டியுடன் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டுவதாக எனது குடும்பத்தினரிடம் வினோத் தெரிவித்துள்ளார்.

    தபால் அதிகாரிகள் எனது மகனை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

    இதனால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து வி்ட்டார்.

    எனவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர்
    • யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ஜே. ஜே. நகரில் 20க்கும் மேறபட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான நாய்கள் சுற்றி வருகின்றன.

    அவற்றிக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10க்கும் மேற்பட்ட நாய்கள் திடிரென்று வாந்தி எடுத்தபடி உயிரிழந்த்தாக கூறப்படுகிறது. அதே போல் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் இறந்து கிடந்துள்ளன. இது அந்த பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது; -எங்கள் பகுதியில் நிறைய தெருநாய்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய்கள் அங்கேங்கே வாந்தி எடுத்தப்படி சுருண்டு விழுந்து இறந்தது. யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.

    இது குறித்து விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×