search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெரிசல்"

    • தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ் நிலையம் பகுதி, ஸ்வர்ணபுரி, ஜங்சன் மெயின் ரோடு, பேர்லேண்ட்ஸ் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் குடும்பம், குடும்ப மாக பொதுமக்கள் புத்தாடை வாங்க துணிக்கடை களுக்கு திரண்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிக ளிலும் கூட்டம் அலை மோதியது. மேலும் மதியத்திற்கு மேல் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், டி.வி.எஸ். பஸ் நிறுத்தம், 5 ரோடு, முதல் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலமும், போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாரம் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது.
    • வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

    வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.

    • அலுவலக நேரங்களில் காளவாசல், அரசரடி சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி திணறுகின்றனர்.
    • இடியாப்ப சிக்கலுக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரின் மிக முக்கிய சிக்னல்களில் ஒன்று காளவாசல். மதுரையின் நான்கு புறங்களிலும் இருந்தும் வரும் வாகனங்களின் முக்கிய சந்திப்பாக காளவாசல் சந்திப்பு உள்ளது.

    பைபாஸ் ரோட்டில் அமைந்திருப்பதால் எந்த நேரத்திலும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக மேற்கு பகுதிகளில் இருந்தும், பெங்களூர் 4 வழிச்சாலை யில் இருந்தும், அச்சம்பத்து, துவரிமான் வழியாக வரும் வாகனங்கள் காளவாசல் சந்திப்பை கடந்தே நகருக் குள் செல்ல வேண்டும்.

    மேலும் கேரளா, கம்பம், தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு காளவாசல் சிக்னலை கடந்தே செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் முடக்குச்சாலையில் இருந்து காளவாசல் சிக்னல் வரை பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் சிக்னலின் அருகிலேயே ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக ரோட்டை மறித்து நிறுத்தப்படுகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் காளவாசல் சிக்னலில் கூட்டல் குறியீடு வடிவில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு பைபாஸ் ரோட்டில் மட்டும் சிக்னலை கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பாலத்தை பயன்படுத்தும் வாகனங்களில் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் குறைவாகவே உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். சிக்னல் இருந்தபோதும் பாலத்தின் கீழ் பகுதியில் செல்வதையே வாகன ஓட்டிகள் விரும்பினர்.

    இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முடக்குச்சாலையில் இருந்து 4 வழிச்சாலைக்கு எளிதாக செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது. இதை யடுத்து காளவாசல் சிக்னலில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு பொன்மேனி பைபாஸ்ரோட்டில் இருந்து குரு தியேட்டர் வழியாக செல்லும் வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகும் பல வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருந்து பாதசாரிகள் செல்லும் பாதையில் சென்று ஆரப்பாளையம் ரோட்டிற்கு சென்று வருகின்றனர். இதனால் போக்கு வரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

    மேலும் மேற்கு பகுதியில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் காளவாசல் சிக்னலில் இருந்து இடதுபுறம் திரும்பி ஆரப்பாளையம்-செல்லூர் பாலம் வழியாகவும், மத்திய சிறைச்சாலை வழியாகவும் அரசு ஆஸ்பத்திரிக்கு எளி தாக செல்ல முடியும். ஆனால் அரசரடி சிக்னல் பகுதி குறுகியதாக இருப்பதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் ஆம்புலன்சுகள் சிக்னலை கடப்பது பெரும் சிரமமாக உள்ளது. சிக்னல் அருகே பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தை அப்புறப்படுத்தி அந்த பகுதியில் ஏற்படும் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    மேலும் போக்குவரத்து போலீசார் சிக்னலை மாற்றியோ அல்லது வாகனங்களை ஒழுங்குப்படுத்தியோ ஆம்புலன்சுகளை கடந்து செல்ல வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் காளவாசலில் இருந்து மேற்கு பகுதி நோக்கி செல்லும் வாகனங்களை பொருத்தவரை காளவாசல் பஸ் நிறுத்தத்தை வெளியூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் பயன்படுத்துகின்றன.

    ஆனால் இங்கு இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையை அகற்றி விட்டதால் பஸ்களை எங்கு நிறுத்துவது என்பதில் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது. இதனால் சிக்னல் வளைவில் (தேனி ரோட்டில்) அரசு மற்றும் தனியார் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை அங்கு போக்குவரத்தை கண்காணித்து வரும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.

    டிரைவர்கள் ஒவ்வொரு இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் எங்கு நின்று பஸ் ஏறுவது என தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் நிறுத்தும் இடங்களை மறித்து ஷேர்ஆட்டோக்கள் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காளவாசல் சிக்னலில் தனி போலீஸ் கண்காணிப்பு அறை இருந்தபோதும் 4 புறங்களிலும் வாகனங்களை கண்காணித்து ஒழுங்குப் படுத்தவேண்டி உள்ளதால் அவர்களும் சிரமத்திற் குள்ளாகின்றனர்.

    தொடர்ச்சியாக மைக்கில் அறிவிப்பு செய்தும் சிக்னல் அருகில் நின்றும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் நிலையிலும் பலர் விதிகளை மீறி சென்று போக்குவரத்து இடையூறு செய்கின்றனர்.

    தற்போது நடந்துவரும் பாலப்பணிகள் முடிவடையும் பட்சத்தில் அந்த சாலையில் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

    எனவே காளவாசல் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.   

    • 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது.
    • மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.

    விழுப்புரம்:

    சென்னை தலைநகரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாடு மற்றும் விடு முறையை கழிக்க நேற்று முன்தினம் தென் மாவட்ட த்தை நோக்கி 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது. நேற்று மதுரை மாநாடு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்ப ஆரம்பித்தன.இதனால் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.தொடர்ந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் டோல் பிளாசா வில் கூடுதலாக 9 லைன்களை திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை 39 ஆயிரம்வாகனங்கள் சென்னை திரும்பி சென்றது.

    • ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.
    • போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குனியமுத்தூர்

    கோவை உக்கடம், டவுன்ஹாலில் இருந்து காந்திபுரம் செல்லும் அனைத்து பஸ்களும் லங்கா கார்னர் பாலம் வழியாக செல்கிறது. அப்போது அந்த வாகனங்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடுகின்றனர்.

    இதனால் லங்கா கார்னர் பாலம் அருகில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் உக்கடத்தில் இருந்து லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.

    அப்படி செல்லும்போது பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லும் பயணிகளை லங்கா கார்னர் பாலம் அருகிலேயே நிறுத்தி இறக்கி விடுகின்றனர்.

    இதனால் அப்பக தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே லங்கா கார்னர் பாலம் அருகே பஸ்களை நிறுத்தாமல் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றால், அந்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும். ெரயில் நிலையம், லங்கா கார்னர் பாலத்திற்கு இடையே அதிக தூரம் இல்லை.

    எனவே பொதுமக்கள் ரயில் நிலைய ஸ்டாப்பில் இறங்கி, பெரிய ஆஸ்பத்திரிக்கு சுலபமாக நடந்து செல்லாம். இல்லையெனில் உக்கடம், டவுன்ஹாலில் இருந்து வரும் பஸ்கள் லங்கா கார்னர் பாலத்தில் இடதுபுறம் திரும்பாமல் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் சென்று வரலாம். அதன்பிறகு ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று அடையலாம்.

    பெரிய ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, திரும்ப 5 நிமிடம் ஆகும். ஆனால் பஸ் டிரைவர்கள் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் லங்கா ஹார்னர் பாலத்தில் இருந்தே இடதுபுறம் திரும்பி விடுகின்றனர். இதனால்தான் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பசுமலை முதல் பழங்காநத்தம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல் கபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் இருந்து 125 எம்.எல்.டி.குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப் பட்டு வைகை அணை அருகே உள்ள பண்ணை பட்டியில் சுத்திகரிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கி ருந்து மதுரை நகருக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மதுரை நகரில் தற்போது நடை பெற்று வருகின்றன.

    அதன்படி திருப்ப ரங்குன்றம் அருகே யுள்ள மூலக்கரையில் இருந்து பழங்காநத்தம் வரை முதற்கட்டமாக பூமிக்கடி யில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இதற்காக மூலக்கரை -பழங்காநத்தம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இரவு, பகலாக பள்ளம் ேதாண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடக்கி றது. ஆனால் இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் எந்த வித முன்னேற்பாடு நட வடிக்கைகளும் எடுக்க வில்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் சாலை யில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    இந்தநிலையில் இன்று காலை குடிநீர் திட்டப்பணி களால் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், பசுமலை, மூலக்கரை, பைக்காரா, வசந்தநகர் ஆகிய பகுதி களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ், லாரிகள், கார், ஆட்டோ போன்றவை இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்றதை காண முடிந்தது. காலை 9 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதனால் இந்த மார்க்கத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் கடும் அவதியடைந்தனர். அவசர வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் கடும் அவதி யடைந்தனர். போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை. மாறாக போக்குவரத்து பாதிப்பு அதிகமானது.

    இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் திட்டப்பணிகள் திருப்ப ரங்குன்றம் சாலையில் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாளில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.

    இனி வரும் நாட்களி லாவது மேற்கண்ட பணி களை இரவில் மேற்கொள்ள வேண்டும். போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    • பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர்.
    • ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரப் பகுதி யில் விழுப்புரம் -புதுவை சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சாலை விதிகளை முறைப் படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர். அதில் ஒரு பகுதியாக சாலையின் நடுவே வாகனங்கள் சீராகவும், முறையாகவும் ,சென்றிட சாலை நடுவே பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வது தடுக்கப்பட்டது. போக்குவரத்து முறையாகவும் செல்ல வழி வகுத்தது. அப்படி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்புகள் தற்பொழுது சிதிலமடைந்த நிலையில் சில இடங்களில் உடைந்து காணப்பட்டது. இவற்றை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் மாவட்ட புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார்கள் விழுப்புரம் எஸ்.ஏ.டி. திரையரங்கம் முதல் விழுப்புரம் சிக்னல் வரை உள்ள ரிப்ளெக்ஸ் தடுப்புகளை பழுது பார்த்து ஒழுங்குப்படுத்தி விரைவில் ஒலிக்கும் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. இப்பணியில் இரவு பகல் பாராமல் போக்குவரத்துக் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.நாளை பள்ளிகள் திறக்க இருப்பதால் அதற்கு முன்பாகவே ஒழுங்குபடுத்தும் விதமாக தற்பொழுது பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சுங்கசாவடிக்கு பணம் செலுத்த தவிர்த்து பெருந்துறை-காங்கேயம் ரோட்டில் செல்லும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ெரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த வழியே வாகனங்களில் செல்லும் அனைத்து மக்களும் ெரயில் செல்லும் வரை காத்திருந்த பின்பே செல்வார்கள்.

    ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் ெரயில்வே மேம்பாலத்திற்காக போராடினார்கள்.

    அதன்பிறகு ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்தது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மேம்பாலம் வழியாக எந்த வித தடங்களும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.

    தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட 3 இடங்களில் உள்ள சுங்க சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன.

    அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை -பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் செல்லும் ரோடு, மற்றும் குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி ஆகியவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.

    இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    நான்கு வழிச் சாலைகளில் செல்லும் கண்டெய்னர்கள் எல்லாம் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்க்க இந்த வழியில் செல்கின்றன. இதனால் இந்த ரோடு தாங்காமல் அடிக்கடி பெயர்ந்து போய்விடுகிறது. மேலும் ஒரே நேரம் 2, 3 லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் குறுகலான சாலையை கொண்ட சென்னிமலை பகுதியில் அடிக்கடி சென்னிமலை கிழக்கு ராஜா வீதி மற்றும் சென்னிமலைபாளையம் பிரிவு, மலை கணுவாய், பசுவபட்டி வெப்பிலி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் மாதம் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கோ அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்திற்கோ இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும்.

    சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லாமல் சுங்கச் சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் லாரிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    ஈங்கூர் மேம்பாலம் கட்டப்படாமல் இருந்திருந்தால் ெரயில் வரும் போது மட்டும் ஒரு பத்து நிமிடங்கள் தான் நாம் நின்று விட்டு சென்றிருப்போம். ஆனால் தற்போது இந்த லாரிகளால் ஒரே வழியாக சென்று விடும் நிலையில் உள்ளோம் என சென்னிமலை பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    சென்னிமலை டவுன் பகுதிக்குள் இந்த கனரக லாரிகள் நுழைய தடை விதித்தால் கூட போதும் என்கின்றனர். இதை தவிர்க்க சென்னிமலை நகரை சுற்றி ரிங்ரோடு பைபாஸ் அமைக்க வேண்டும் என சென்னிமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    ×