என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Traffic"
- 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
- மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 29) மாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை காலை வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் மொத்தமாக உள்ள 20 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

மழைநீர் தேக்கம் காரணமாக பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை கிண்டி, வடபழனி, போரூர், தாம்ரம், சைதாப்பேட்டை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
- கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள சிதம்பரம் சாலையில் கார்கூடலூர் அணைக்கட்டு ரோடு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஞானஜோதி - கோப்பெருந்தேவி தம்பதியர் கூரை வீடுகட்டி வசிக்கின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு 12 மணியளவில் ஞானஜோதி குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்த போது பலத்த சத்தத்துடன் பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டது. அலறியடித்து எழுந்து பார்த்தபோது இவரது வீட்டின் ஓரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் கவிழ்ந்து கிடந்தது. இதில் அவரது கூரை வீட்டின் ஒரு பகுதி சேதமானது. இதேபோல பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்தெழுந்து வெளியில் வந்தனர். கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்தவர்களை விரைவாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். அதன் மூலம் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி மக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலை யில் செல்லும் வாகனங்கள் திடீரென வழுக்கி கவிழ்கி றது. இதனால் தங்களின் வீடுகள் சேதமடைகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துகளினால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. குறிப்பாக மழை நேரத்தில் இந்த சாலை மேலும், வழு வழுப்பாகி அடிக்கடி விபத்து நடக்கிறது.
எனவே, இந்த சாலையை சொரசொரப்பாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தினர். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று போலீசாரிடம் கூறினார்கள். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் விடு முறையில் இருப்பார்கள். விருத்தாசலம் போலீசார் நாளை திங்களன்று அதி காரிகளிடம் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பர். எனவே, மறியலை கைவிடுங்கள் என்று பொதுமக்களிடம் கூறினார். இதையேற்ற அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேனில் வந்தவர்கள் யார்? இதனை ஓட்டிவந்த டிரைவர் யார்? விபத்து எவ்வாறு நடந்தது? விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்ன? என அனைத்தும் மர்மமாகவே உள்ளது. இது தொடர்பான தகவலை விருத்தாசலம் போலீசார் கூற மறுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை கொண்டு சென்ற நீண்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் அவதிக்குள்ளானார்கள்
கரூர்,
பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக நீளமான லாரியில், சுமார் 360 அடி நீளமுள்ள காற்றாலை மின்விசிறி இறக்கைகளை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை முந்திக்கொண்டு எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு நீளமானதாக இருந்தது. தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தபோது நீளமான அளவிலான காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி சென்ற லாரி செல்ல முடியாமல் நின்றது.இதனால் நீண்ட நேரம் லாரிக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள், பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப் பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.
இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும், மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல ப்பட்ட நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளா னார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு லாரி நகர்த்தப்பட்டது. இதன் காரணமாக பின்னால் நின்ற வாகனங்கள், தவிட்டுப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக கடந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஐப்பசி அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
- போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்
இந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான புண்ணிய தலங்களாக காசியும், ராமேசுவரமும் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாத அமா வாசையின் போதும் முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுப்ப தற்காக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.
தீபாவளியை ஒட்டி வரும் ஐப்பசி மாத அமா வாசையும் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் கொடுப் பதற்கு முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை இன்று மாலை வரை உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை யொட்டி விடுமுறை உள்ளதால் அதிகளவில் குடும்பத்துடன் பக்தர்கள் ராமேசுவரம் வந்தனர். பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் ராமேசுவரம் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட னர். மேலும் அக்னி தீர்த்த கரையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் குடும்பத்துடன் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி முன் ேனார்களை வழிபட்டனர்.
இதனால் அக்னி தீர்த்த கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.
- புதுக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றம்
- கடை வீதிகளில் அதிகளவு கூட்டம் காரணமாக நடவடிக்கை
புதுக்கோட்டை,
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் கடை வீதிகளில் கூட்டம் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, பால்பண்ணை ரவுண்டானா, சங்கரமடம் வீதி, வடக்கு 4-ம் வீதி வழியாக செல்லும்.
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வரும் பஸ்கள் வடக்கு 3-ம் வீதி, திலகர் திடல், பால்பண்ணை ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடையும்.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம், பேராங்குளம் வழியாக செல்லும். மேற்கண்ட தகவலை நகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
- சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக சென்னையில் இன்று பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மழை சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் சாலையில் செல்லத்தொடங்கியதால் நேரம் செல்லச்செல்ல போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் நெரிசல் காரணமாக ஊர்ந்தே சென்றன. அங்கு சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
- டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.
- சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும்.
நெல்லை:
நெல்லை டவுன் ரத வீதிகளில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதிகளில் கடை வைத்திருக்கும் வியா பாரிகளும், பொது மக்க ளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இள ங்கோ தலைமையில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.
அந்த வகையில் டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.
இதே போல் தச்சை மண்ட லத்து க்குட்பட்ட வண்ணார் பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியிலும் சுற்றி திரிந்த மாடுகளை மாநக ராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
உரிய அபராதம் செலுத்தி விட்டு இன்று மாலைக்குள் அதன் உரிமையாளர்கள் மாடு களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இனி மீண்டும் இதே போல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரியவிட்டால் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது தெரியவந்துள்ளது.
- போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரமாக காத்திருப்பதும் நெரிசலுக்கு ஒரு காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து சந்திப்புகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
இதில் சென்னை மாநகர் முழுவதும் 65 சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அது போன்ற சிக்னல்களில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இந்த 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில் சிக்னலை கடந்து நேராக செல்லும் வாகனங்கள் எத்தனை? வளைவில் திரும்பி செல்லும் வாகனங்கள் எத்தனை? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நேராக செல்லும் வாகனங்கள் அதிக அளவிலும் வளைவில் செல்லும் வாகனங்கள் குறைந்த அளவிலும் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிக்னல்களை மூடிவிட்டு யூ வளைவில் திரும்புவதை தடுத்து அந்த வாகனங்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் தி.நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போலீசார் அமல்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'கோவை மாநகரில் இதுபோன்று சிக்னல்களில் போக்குவரத்து மாற்றங்களை மேற்கொண்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அந்த முறையை சென்னையில் தற்போது அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, சென்னை மாநகர் முழுவதும் இது போன்று மேலும் பல சிக்னல்களை அணைத்து விட்டு வாகனங்களை இயக்க முடியுமா? என்பது பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த போக்குவரத்து மாற்றம் வாகனங்களுக்கு சில அசவுகரியங்களை ஏற்படுத்தினாலும் சிக்னல்களில் நேராகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதன் மூலம் சென்னை மாநகரில் விரைவில் பல்வேறு சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் அணைத்து வைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் ஆய்வு நடத்தி முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர்.
- தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரியால் செல்ல முடியவில்லை.
- போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம் பாளையம்
பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத எந்திரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது அந்த லாரியால் செல்ல முடியவில்லை.
இதனால் அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், லாரிகள், வேன்கள் என அனைத்து வாகனங்களும் பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப்பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.
இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமலும் ,அதே போல் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு நோயாளிகள் அவதிப்பட்டினர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த லாரி மெதுவாக நகர்ந்து சென்றது.இதனால் அந்த லாரியை முந்தி செல்ல முடியாமல் தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்றன.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கனமழையால் மரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
- மேலும் இதனால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை முருகசாமி தோப்பிற்கு செல்லும் பாதையில் ரயில்வே கேட் அருகாமையில் உள்ள சாலையில் கனமழையால் மரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.மேலும் இதனால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதை அறிந்த உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தீயணைப்பு வீரர்களுக்கு தெரியபடுத்தி வரவழைத்தார்.
தீயணைப்பு வீரர்கள் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் போது வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் மற்றும் ராகேஷ் உடன் இருந்தனர்.