search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic"

    • வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
    • சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    • அண்ணாசாலை. எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை. ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு
    • வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் தாமரை மாநாடு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    இதன் பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை. எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை. ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    1. மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை

    2. இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு

    3. மவுண்ட் பூன்னமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.

    4. அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு

    5. விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)

    6. அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை

    7. தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.

    • 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கி மெதுவாக நடக்கிறது.

    இந்த மேம்பால பணியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 2,437 சதுர மீட்டர் தனியார் நிலத்தையும் 194 சதுர மீட்டர் அரசு நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

    வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளம் கொண்டதாகும். 15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது.

    மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2860 சதுரமீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகி றது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் சென்னை கலெக்டரால் நியமிக்கப்பட்டு நடக்கிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அதிகாரிகள் மூலம் இவை நடத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த மேம்பாலம் கான் கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் (கிரேடர்) இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ரெயில்வே மேம்பாலங்களுக்கு இதுபோன்ற இரும்பு உத்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும்.

    இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    பிரதமர் மோடி 2 நாள் ஆன்மீக பயணமாக இன்று பிற்பகல் ராமேசுவரம் வருகை தருகிறார். இதையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமேசுவரத்தில் அனைத்து விதமான போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் ராமேசுவரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. 3,400 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த 1,200 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து பேருந்துகளில் ராமேசுவரம் வந்தனர்.

    இன்று அவர்கள் மீண்டும் மதுரைக்கு திரும்பவேண்டிய நிலையில், பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தவித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தபிறகு மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநில பக்தர்கள் பத்திரமாக மதுரைக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுற்றுலா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    • 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    கனமழையால் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் ஏரல் பஜார் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் காட்டாற்று வெள்ளத்தால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் போக்குவரத்தை தொடங்குவதற்காக ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே இருந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.

    இதற்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தற்காலி கமாக அந்த தரைமட்ட பாலம் சீரமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 7 நாட்களுக்கு பின்னர் ஏரல் தரைமட்ட பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கி உள்ளது.

    • 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
    • மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 29) மாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை காலை வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் மொத்தமாக உள்ள 20 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

     

    மழைநீர் தேக்கம் காரணமாக பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.

    சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை கிண்டி, வடபழனி, போரூர், தாம்ரம், சைதாப்பேட்டை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    • நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள சிதம்பரம் சாலையில் கார்கூடலூர் அணைக்கட்டு ரோடு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஞானஜோதி - கோப்பெருந்தேவி தம்பதியர் கூரை வீடுகட்டி வசிக்கின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு 12 மணியளவில் ஞானஜோதி குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்த போது பலத்த சத்தத்துடன் பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டது. அலறியடித்து எழுந்து பார்த்தபோது இவரது வீட்டின் ஓரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் கவிழ்ந்து கிடந்தது. இதில் அவரது கூரை வீட்டின் ஒரு பகுதி சேதமானது. இதேபோல பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்தெழுந்து வெளியில் வந்தனர். கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்தவர்களை விரைவாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். அதன் மூலம் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி மக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலை யில் செல்லும் வாகனங்கள் திடீரென வழுக்கி கவிழ்கி றது. இதனால் தங்களின் வீடுகள் சேதமடைகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துகளினால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. குறிப்பாக மழை நேரத்தில் இந்த சாலை மேலும், வழு வழுப்பாகி அடிக்கடி விபத்து நடக்கிறது.

    எனவே, இந்த சாலையை சொரசொரப்பாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தினர். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று போலீசாரிடம் கூறினார்கள். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் விடு முறையில் இருப்பார்கள். விருத்தாசலம் போலீசார் நாளை திங்களன்று அதி காரிகளிடம் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பர். எனவே, மறியலை கைவிடுங்கள் என்று பொதுமக்களிடம் கூறினார். இதையேற்ற அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேனில் வந்தவர்கள் யார்? இதனை ஓட்டிவந்த டிரைவர் யார்? விபத்து எவ்வாறு நடந்தது? விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்ன? என அனைத்தும் மர்மமாகவே உள்ளது. இது தொடர்பான தகவலை விருத்தாசலம் போலீசார் கூற மறுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை கொண்டு சென்ற நீண்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் அவதிக்குள்ளானார்கள்

    கரூர்,

    பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக நீளமான லாரியில், சுமார் 360 அடி நீளமுள்ள காற்றாலை மின்விசிறி இறக்கைகளை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை முந்திக்கொண்டு எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு நீளமானதாக இருந்தது. தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தபோது நீளமான அளவிலான காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி சென்ற லாரி செல்ல முடியாமல் நின்றது.இதனால் நீண்ட நேரம் லாரிக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள், பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப் பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.

    இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும், மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல ப்பட்ட நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளா னார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு லாரி நகர்த்தப்பட்டது. இதன் காரணமாக பின்னால் நின்ற வாகனங்கள், தவிட்டுப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக கடந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஐப்பசி அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்

    இந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான புண்ணிய தலங்களாக காசியும், ராமேசுவரமும் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாத அமா வாசையின் போதும் முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுப்ப தற்காக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.

    தீபாவளியை ஒட்டி வரும் ஐப்பசி மாத அமா வாசையும் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் கொடுப் பதற்கு முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை இன்று மாலை வரை உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை யொட்டி விடுமுறை உள்ளதால் அதிகளவில் குடும்பத்துடன் பக்தர்கள் ராமேசுவரம் வந்தனர். பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் ராமேசுவரம் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட னர். மேலும் அக்னி தீர்த்த கரையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் குடும்பத்துடன் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி முன் ேனார்களை வழிபட்டனர்.

    இதனால் அக்னி தீர்த்த கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.

    • புதுக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வாகன போக்குவரத்து மாற்றம்
    • கடை வீதிகளில் அதிகளவு கூட்டம் காரணமாக நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் கடை வீதிகளில் கூட்டம் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, பால்பண்ணை ரவுண்டானா, சங்கரமடம் வீதி, வடக்கு 4-ம் வீதி வழியாக செல்லும்.

    தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வரும் பஸ்கள் வடக்கு 3-ம் வீதி, திலகர் திடல், பால்பண்ணை ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடையும்.

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம், பேராங்குளம் வழியாக செல்லும். மேற்கண்ட தகவலை நகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
    • சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக சென்னையில் இன்று பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மழை சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் சாலையில் செல்லத்தொடங்கியதால் நேரம் செல்லச்செல்ல போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் நெரிசல் காரணமாக ஊர்ந்தே சென்றன. அங்கு சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

    • டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.
    • சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ரத வீதிகளில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதிகளில் கடை வைத்திருக்கும் வியா பாரிகளும், பொது மக்க ளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இள ங்கோ தலைமையில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.

    அந்த வகையில் டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.

    இதே போல் தச்சை மண்ட லத்து க்குட்பட்ட வண்ணார் பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியிலும் சுற்றி திரிந்த மாடுகளை மாநக ராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

    உரிய அபராதம் செலுத்தி விட்டு இன்று மாலைக்குள் அதன் உரிமையாளர்கள் மாடு களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இனி மீண்டும் இதே போல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரியவிட்டால் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×