search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congestion"

    • போலீஸ் சூப்பிரண்டிடம் வக்கீல் சசிபாலன் மனு
    • நெடுஞ்சாலையில் இரு பிரிவுகளாக பிரிக்கும் நடுப்பகுதியில் சரியான முறையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை தொகுதி சமூக சேவகர் வக்கீல் சசிபாலன் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாற னிடம் இன்று மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திராகாந்தி சிக்னல் முதல் மூலகுளம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேலை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிபடுகின்றனர். ேமலும் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது.

    நெடுஞ்சாலையில் இரு பிரிவுகளாக பிரிக்கும் நடுப்பகுதியில் சரியான முறையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

    தடுப்புக்கட்டையில் இரவில் ஒளிரும் குறியீடும் அமைக்கப்படாமல் உள்ளது. இதேபோல் பூமியா ன்பேட்டை முதல் அரும்பா ர்த்தபுரம் மேம்பாலம் வரை வேலை நாட்களில் காலை மற்றும் மாலையில் போக்கு வரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேலையில் முக்கிய சந்திப்புகளில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது.
    • மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.

    விழுப்புரம்:

    சென்னை தலைநகரில் இருந்து மதுரை அ.தி.மு.க. மாநாடு மற்றும் விடு முறையை கழிக்க நேற்று முன்தினம் தென் மாவட்ட த்தை நோக்கி 43 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளா சாவை கடந்து சென்றது. நேற்று மதுரை மாநாடு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்ப ஆரம்பித்தன.இதனால் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் மாலை 4 மணி முதல் வாகனங்கள் பிளாசாவை கடக்க அணிவகுத்து நிற்க ஆரம்பித்தன.தொடர்ந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் டோல் பிளாசா வில் கூடுதலாக 9 லைன்களை திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். நேற்று இரவு வரை 39 ஆயிரம்வாகனங்கள் சென்னை திரும்பி சென்றது.

    • பசுமலை முதல் பழங்காநத்தம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல் கபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் இருந்து 125 எம்.எல்.டி.குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப் பட்டு வைகை அணை அருகே உள்ள பண்ணை பட்டியில் சுத்திகரிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கி ருந்து மதுரை நகருக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மதுரை நகரில் தற்போது நடை பெற்று வருகின்றன.

    அதன்படி திருப்ப ரங்குன்றம் அருகே யுள்ள மூலக்கரையில் இருந்து பழங்காநத்தம் வரை முதற்கட்டமாக பூமிக்கடி யில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இதற்காக மூலக்கரை -பழங்காநத்தம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இரவு, பகலாக பள்ளம் ேதாண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடக்கி றது. ஆனால் இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் எந்த வித முன்னேற்பாடு நட வடிக்கைகளும் எடுக்க வில்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் சாலை யில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    இந்தநிலையில் இன்று காலை குடிநீர் திட்டப்பணி களால் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், பசுமலை, மூலக்கரை, பைக்காரா, வசந்தநகர் ஆகிய பகுதி களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ், லாரிகள், கார், ஆட்டோ போன்றவை இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்றதை காண முடிந்தது. காலை 9 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதனால் இந்த மார்க்கத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் கடும் அவதியடைந்தனர். அவசர வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் கடும் அவதி யடைந்தனர். போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை. மாறாக போக்குவரத்து பாதிப்பு அதிகமானது.

    இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் திட்டப்பணிகள் திருப்ப ரங்குன்றம் சாலையில் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாளில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.

    இனி வரும் நாட்களி லாவது மேற்கண்ட பணி களை இரவில் மேற்கொள்ள வேண்டும். போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    • பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர்.
    • ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரப் பகுதி யில் விழுப்புரம் -புதுவை சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சாலை விதிகளை முறைப் படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர். அதில் ஒரு பகுதியாக சாலையின் நடுவே வாகனங்கள் சீராகவும், முறையாகவும் ,சென்றிட சாலை நடுவே பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வது தடுக்கப்பட்டது. போக்குவரத்து முறையாகவும் செல்ல வழி வகுத்தது. அப்படி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்புகள் தற்பொழுது சிதிலமடைந்த நிலையில் சில இடங்களில் உடைந்து காணப்பட்டது. இவற்றை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் மாவட்ட புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார்கள் விழுப்புரம் எஸ்.ஏ.டி. திரையரங்கம் முதல் விழுப்புரம் சிக்னல் வரை உள்ள ரிப்ளெக்ஸ் தடுப்புகளை பழுது பார்த்து ஒழுங்குப்படுத்தி விரைவில் ஒலிக்கும் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. இப்பணியில் இரவு பகல் பாராமல் போக்குவரத்துக் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.நாளை பள்ளிகள் திறக்க இருப்பதால் அதற்கு முன்பாகவே ஒழுங்குபடுத்தும் விதமாக தற்பொழுது பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் 11மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தப் போக்குவரத்து தடையானது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரில் போக்கு வரத்து நெரிசல் காரணமாக விபத்துகளைத் தடுக்கவும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நேரங்களில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையிலும் சேலம் மாநகரில் முக்கிய சாலைகளில் கனரக வாக னங்கள் செல்ல காலை 7 மணி முதல் 11மணி வரை யிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையி லும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்து தடையானது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ள பகுதிகள் வருமாறு:-

    சீலநாயக்கன்பட்டி பிரதான சாலை முதல் காந்தி சிலை (திருச்சி பிர தான சாலை) வரை, நெத்தி மேடு சந்திப்பு முதல் குகை (சங்ககிரி பிரதான சாலை), 5 ரோடு முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (ஓமலூர் பிரதான சாலை), மணல் மார்க்கெட் முதல் வள்ளுவர் சிலை வரை (கமலா மருத்துவமனை, டவுன் ரெயில் நிலையம்),

    சுந்தர் லாட்ஜ் முதல் மாவட்ட கலெக்டர் அலுவ லகம் (பிரட்ஸ் சாலை), சுந்தர் லாட்ஜ் முதல் அண்ணா பார்க் (காந்தி மைதானம்) ஆகிய சாலைக ளில் கனரக வாகனங்கள் செல்ல நிரந்தர தடை விதிக் கப்பட்டுள்ளது.

    மேலும் அத்தியாவசிய (பால், தண்ணீர், மருந்து) வாக னங்களுக்கு தடை ஏதும் இல்லை. இந்த நடவ டிக்கைக்கு வாகன ஓட்டு நர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி 230 கோடி செலவில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலையின் இரு புற மும் நெடுஞ்சாலை த்துறையினர் சரியான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமலும், ஒரு சிலருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வரை வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    மேலும் கடந்த 2 மாதமாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தியும், சரியான முறையில் அளவீடு பணிகளில் சர்வேயர் ஈடுபடவில்லை என கூறி தொடர்ந்து அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று திடீரென்று கீழ்ப்பட்டாம்பாக்கம் ஸ்டேட் வங்கி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை பார்த்த ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்கதைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணி நடைபெற்று முடியவில்லை. ஆனால் இந்த பணியை தொடங்குவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று பணியில் ஈடுபட்ட வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் சட்டவிரோதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என புகார் தெரிவிப்போம் என தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் முரண்பாடான பல்வேறு தகவல்கள் தெரிவித்ததால் கடும் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.
    • குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலைபாதையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமாக செல்லும் மலைப் பாதையில் வாகனங்கள் செல்லாமல், அயோத்தியாபட்டணம் அருளே உள்ள குப்பனூர் வழியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஞாயிற்று கிழமை என்பதாலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற வாகனங்களில் ஏற்காடு வந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மலை பாதையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுபோல ஏற்காடு ரவுண்டானா மற்றும் படகு இல்லம், பஸ் நிலைய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். 

    • மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    வெளி மாவட்டங்களில் இருந்து சிதம்பரம், நாகப்பட்டினம் செல்ல க்கூடிய பெரும்பாலான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருகின்றது.இந்த நிலையில் கனரக வாகனங்கள் முழுவதும் கடலூர் ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் , விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இன்று காலை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகில் ஜவான் பவன் சாலை வழியாக செல்வதற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று லாரி பழுது ஏற்பட்டு சாலையில் நின்றது. இதனால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்று அணிவகுத்து நிற்க தொடங்கியது. இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் அதிக ஒலி எழுப்பி கொண்டிருந்தன.ஆனால் பழுதடைந்த லாரியை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.

    இதன் காரணமாக மிக முக்கிய சாலையாக கருதக்கூடிய திருப்பாதிரிப்புலியூர் சாலை முழுவதும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் பகுதி என்பதால் கூடுதலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்ததோடு வெளியூருக்கு செல்லும் பொதுமக்களும் பஸ்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தனர். இதனை தொடர்ந்து அவசர அவசரமாக மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தும் வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • சக டிரைவர்கள் மற்றும் பயணிகள் அவர்களை சமதானம் செய்து வைத்தனர்.
    • போக்கு–வரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் யார் முதலில் செல்வது என தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கும் இடையே போட்டி நிலவுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் வழித்தடத்தில் பகல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்து பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

    பட்டுக்கோட்டை-– தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் சில தனியார் பஸ்கள், அரசு பஸ்களை முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அசுர வேகத்தில் செல்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் பட்டுக்–கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வதற்கு அரசு பஸ் ஒன்று தயாராக இருந்த நேரத்தில், அதற்கு அடுத்த–தகாக தஞ்சாவூருக்கு செல்ல இருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணிகளை ஏற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக அரசு பஸ் ஓட்டுநருக்கும், தனியார் பஸ் ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சமதானம் செய்து வைத்தனர்.

    இதனால் பஸ் நிலை–யத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்த னர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பஸ்சில் ஏறினால் விரைவாக சென்றுவிடலாம் என கருதி பயணிகள் ஏறுகின்றனர்.

    ஆனால் சில தனியார் பஸ்கள் தங்கள் பஸ்சில் அதிக அளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற லாப நோக்கத்தில் செயல்பட்டு அரசு பஸ்சுக்கு பிறகு புறப்பட்டு அரசு பஸ்சை முந்தி சென்று அதிக அளவில் பயணிகளை ஏற்றுகின்றனர்.

    இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தற்காலிக உழவர் சந்தை போன்றவற்றை இருந்து வருகின்றது.

    இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் மற்றும் மாணவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மஞ்சகுப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் கூரை கொட்டகை அமைத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு உள்ள சிறு வியாபாரிகள் சாலையின் ஓரமாக காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லக்கூடிய மக்களும் வாகனங்களில் செல்லக்கூடிய மக்களும் சாலையில் நின்று கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.

    இதன் காரணமாக இவ்வழியாக வந்து செல்லக்கூடிய பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் போது அங்குள்ள போக்குவரத்து போலீசார் உடனடியாக நேரில் வந்து போக்குவரத்தை சரி செய்து அங்குள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை எச்சரிக்கை செய்து செல்கின்றனர்.

    ஆனால் தினந்தோறும் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதற்கு யார்? நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது சாலை ஓரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு உள்ளே கொண்டு சென்று விற்பனை செய்தால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டும் இன்றி சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் முன்னேறுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைவரும் இருந்தாலும் இது போன்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    • இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.

    இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே சாலை குறுகியதாக உள்ளது. அதில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றால் டூவீலர்கள் கூட போக முடியாது.

    இந்த நிலையில் சாலையோரங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களும், கடைக–ளுக்கு சரக்கு கொண்டு வரும் டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது. சரக்கு வாக–னங்கள் நகர் எல்லைக்குள் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும்.

    இதுபோல் போக்கு–வரத்திற்கு இடையூறு ஏற்ப–டுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமை–யாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • உடன்குடி 4 பஜார் சந்திப்பில் போலீசார் இல்லை என்றால் உடனேஒரு வழிப்பாதை மீறப்படுகிறது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் ரோடு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தபடுகிறது.இந்த சாலையில் எதிரே எதிரே வாகனங்கள் வந்தால் ஒன்றைஒன்று கடந்து செல்வது மிக மிக கடினம். அதனால் உடன்குடிகீழபஜார் ரோடு மட்டும் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. உடன்குடி 4 பஜார் சந்திப்பில் போலீசார் இல்லை என்றால் உடனேஒரு வழிப்பாதை மீறப்படுகிறது.

    ஏராளமான வாகனங்கள் கிழக்கு நோக்கி செல்வதால் அடிக்கடி கீழபஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.இதனால்பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே ஒரு வழிப்பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×