search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டிடம் வக்கீல் சசிபாலன் மனு அளித்த காட்சி.

    போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • போலீஸ் சூப்பிரண்டிடம் வக்கீல் சசிபாலன் மனு
    • நெடுஞ்சாலையில் இரு பிரிவுகளாக பிரிக்கும் நடுப்பகுதியில் சரியான முறையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை தொகுதி சமூக சேவகர் வக்கீல் சசிபாலன் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாற னிடம் இன்று மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திராகாந்தி சிக்னல் முதல் மூலகுளம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேலை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிபடுகின்றனர். ேமலும் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது.

    நெடுஞ்சாலையில் இரு பிரிவுகளாக பிரிக்கும் நடுப்பகுதியில் சரியான முறையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

    தடுப்புக்கட்டையில் இரவில் ஒளிரும் குறியீடும் அமைக்கப்படாமல் உள்ளது. இதேபோல் பூமியா ன்பேட்டை முதல் அரும்பா ர்த்தபுரம் மேம்பாலம் வரை வேலை நாட்களில் காலை மற்றும் மாலையில் போக்கு வரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேலையில் முக்கிய சந்திப்புகளில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    Next Story
    ×