search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suffering"

    தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் - நெல்லிக்குப் பம் சாலை அரசு ஆஸ்பத்திரி எதிரில் பாதாள சாக்கடை உள்ளது. இங்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இத னால் இவ்வழியில் செல்லும் வாகனங்கள் சாலை ஓர மாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளத்தில் தற்போது திடீரென்று மரக்கிளை வைக்கப்பட்டு, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளது

    கடலூர் - நெல்லிக்குப்பம் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், தொடர் மழை பெய்து வரும் காரணத்தி னால் தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.ஆகையால் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் கால தாமதம் இன்றி உடனடியாக திடீரென்று ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    • சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மானாமதுரை

    மானாமதுரையில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலை, சிவகங்கை சாலை, காவல் நிலையம் எதிர்புறம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன. நகர் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மாடுகளின் உரிமை யாளர்கள் வீடுகளில் இந்த மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்ப வர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மானாமதுரை நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    மானாமதுரை நகரில் சுற்றித் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அறிவிப்பை மீறி மாடுகள் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரிந்தால் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்படும் மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களி ளும், கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ளது. மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு உள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் மாடுகளை வைத்து பராமரிக்க வேண்டும். தெரு மற்றும் சாலையில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்றார்.

    • மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்‌.
    • தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளி நகரில் அதிகாலை 12.30 மணியில் இருந்து திடிர் என மின்சாரம் தடைபட்டது.

    தூறல் மழையும் குளிரிலும் தவித்த மக்கள் மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.

    மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் திருக்காட்டுபள்ளி நகர மக்கள் விடிய விடிய அவதிப்பட்டனர்.

    5மணி நேர மின்சார தடைக்கு பிறகு காலை 6 மணியளவில் மீண்டும் மின்சாரம் கிடைத்தது.

    இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க உரியவாறு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பஸ்கள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன.
    • போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி சாலையில் கற்பகம் கல்லூரி சிக்னலுக்கு அடுத்தபடியாக மலுமிச்சம்பட்டி சிக்னல் அமைந்து உள்ளது. இது நான்கு ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இதில் ஒரு ரோடு கேரளா, இன்னொரு ரோடு செட்டிபாளையம், 3-வது ரோடு கோவை, 4-வது ரோடு பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.

    மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியை சுற்றிலும் ஏராளமான சிறு-சிறு கிராமங்கள் உள்ளன.அந்த பகுதியில் வசிப்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி மலுமிச்சம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

    இதனால் கோவை-பொள்ளாச்சி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் செட்டிபாளையம்-மலுமிச்சம்பட்டி செல்லும் வாகனங்கள் ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் எண்ணற்ற பேக்கரி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.

    அந்த கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் தங்களின் வாகனங்களை அப்படி-அப்படியே நிறுத்திவிட்டு செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசும் நிலையில் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் தினமும் சிறு-சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

    மலுமிச்சம்பட்டி சிக்னலுக்கு எதிரில் புறக்காவல் நிலையம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த வாகனங்களை கண்டுகொள்வதில்லை. போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

    மேலும் அங்கு ஒருசில நேரங்களில் டபுள்பார்க்கிங் போடும் வாய்ப்பு ஏற்படுவதால் வாகனத்தை எடுக்க முடியாமல் ஒருசிலர் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மற்ற வாகனஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

    பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பஸ்கள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன. அப்போது அவை தாறுமாறாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் ஒலி எழுப்புகின்றனர். இதனால் அந்த பகுதியில் எப்போதும் நாராசமான ஒலிகளை கேட்க முடிகிறது.

    எனவே போக்குவரத்து போலீசார் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனத்தை முறைப்படுத்தி நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் போக்குவரத்து சீராகும். பிறருக்கும் இடையூறு இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பழூர் அருகே கன மழையால் சாலையில் குளம்போல் தண்ணீர தேங்கி நின்றது
    • தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் கடும் அவதி

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. விடிய விடி மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் சாலையில் குளம் போல் மழைநீர்தேங்கியது.

    தேங்கிய மழைநீர் இருபுறமும் வடிகால் வசதி அமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. சாலையில் முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

    சாலைகள் சேரும் சகதி அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர். சாலையை சரி செய்ய ஏற்கனவே அதிகாரியிடம் மனு பல முறை அளித்திருந்த நிலையில், தற்போது வரை சாலை அமைக்கப்படாததால் இரவு பெய்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    உடனடியாக தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்றி, சாலை அமைத்து நோய் தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலூர் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.என்.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 52) கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக சேகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனஉளைச்சளில் இருந்த சேகர் சம்பவத்தன்று அதே பகுதியில் விவசாய நிலத்திற்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் நடக்கிறது
    • அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள சிறிய நடைபாதையை அங்கு உள்ள பொதுமக்கள், பள்ளிகுழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் உள்ள சாக்கடைக்குழி திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சாம்சந்த் பகுதியில் பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.
    • இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான். காரணம் என்னவென்றால் தற்போதைய சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவிர்க்கும் விஷயம் என்றால் அது பழங்கள் சாப்பிடுவது தான்.

    பழங்களின் வகைகள் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகிறது. அந்தவகையில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்துக்கொள்வோம்.

    * பற்களை வலுடையச் செய்கிறது.

    * உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    * தலை வலி குறையும்.

    * கண்பார்வை மங்கல் குணமாகும்.

    * பசியை தூண்ட செய்யும்.

    * இதயத்தை பலம் பெற செய்யும்.

    * மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.

    * இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    * வாயுத் தொல்லை நீங்கும்.

    * நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

    * எலும்புகள் வலுவடையும்.

    * ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

    * நினைவாற்றல் அதிகரிக்கும்.

    * பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

    * உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.

    * வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.

    * வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

    இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.

    • மீன்சுருட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • நிதி ஒதுக்கியும் புதிய கட்டிடம் கட்ட தாமதம் ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

    அரியலூர், 

    மீன்சுருட்டியில் 2 அரசு விடுதிகள் பழுதடைந்த தால் தனியார் விடுதிக்கு மாண வர்கள் மாற்றப்ப ட்டுள்ள னர்.

    அரியலூர் மீன்சுருட்டி யில் ஆதி திராவிடர் நல ஆண்கள் மாணவர்கள் விடுதி 1996 முதல் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படி ப்பை மேற்கொண்டு வருகி ன்றனர்.இந்நிலையில் விடுதி கட்டிடம் மிகவும் பழமை யாகி, பழுதடைந்த நிலைக்கு சென்றதால், விடுதியில் தங்கி இருந்த மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 2020 டிசம்பர் மாதம் மீன் சுருட்டியில் உள்ள தனியார் கட்டிடத்தில் தங்க வைக்கப்ப ட்டு உள்ளனர்.

    மாணவர் விடுதிக்காக இந்த தனியார் கட்டிடத்திற்கு மாதம், மாதம் ரூ.9 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தனியார் கட்டிடத்தில் 30 மாணவர்கள் மட்டுமே தங்கக்கூடிய அள விற்கு இட வசதி உள்ளது.ஆனால் 60 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள தா ல், பள்ளி மாணவ ர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே, இங்கே தங்கி உள்ளனர். இதனால் பலர் தங்களது வீடுகளுக்கு அடிக்கடி செல்லும் நிலை ஏற்படுகிறது. புதிய தங்கும் விடுதி கட்டுவதற்கு மாநில அரசு ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிக ளின் மெத்தன போக்கால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதே போல மீன்சுரு ட்டில்யில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிற்படுத்தப்ப ட்டோர் நலத் துறை சார்பில் மாணவர் விடுதி பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த விடுதியில் சுமார் 50 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படிப்பை தொடர்ந்து வந்தனர். பழைய கட்டிடம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி கடந்த 2023 மார்ச் மாதம் பஞ்சாயத்து கட்டிடத்திற்கு விடுதி மாற்றப்பட்டது.

    இரண்டு விடுதிகளிலும் உள்ள மாணவர்கள் அடிப்ப டை வசதிகள் இல்லாததால் சிரமங்களை எதிர்கொள்கி ன்றனர், சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மாணவர்களின் நலன் கருதி இரண்டு புதிய விடுதிகள் கட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை.

    போதிய வசதி இல்லாத காரணத்தால் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் குளியலறை மற்றும் கழி வறை செல்வதற்கு மாணவ ர்கள் நீண்ட நேரம் காத்திரு க்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு தாமத மாக செல்லுதல் உள்ளிட்ட தேவையற்ற சிரமங்கள் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால், இரவு நேரங்களில் மாணவர்க ளுக்கு நிம்மதியான தூக்க மும் கிடைப்பதில்லை.

    மேலும் தனியார் கட்டிடத்திற்கான வாடகையை ஏப்ரல் மாதம் முதல் அரசு செலுத்தாததால் கட்டிட உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த விடுதிகளுக்கு பதிலாக புதிய விடுதிகள் கட்ட உடனே நடவடிக்கை மேற்கெர்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • அவனியாபுரத்தில் 92, 100-வது வார்டுகளில் தேங்கும் குப்பைகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள 92, 100 ஆகிய வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த வார்டுகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேபோல் மாநகராட்சி சார்பில் தினமும் மேற்கண்ட வார்டுகளில் குப்பைகள் நவீன பேட்டரி வாகன மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டன இதனால் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே மலை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் தேங்கும் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் பூந்தோட்ட நகர், செம்பூரணி ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூலிக்கும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த 100-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    • மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்.எஸ். வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மின்கம்பம் சேதம்

    இதில் மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாலையில் மின்கம்பம் விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    20 மணி நேர மின்தடை

    இதனிடையே மின் கம்பம் உடைந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.

    இதையடுத்து நேற்று காலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் மின்கம்பம் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    • ராமநாதபுரத்தில் புழுதி பறக்கும் பழைய பஸ் நிலையத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளி மாவட்டங்கள், உள் ளூர் பகுதிகளுக்கு தினமும் 300-க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகள் வந்து சென்றனர். தற்போது ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டா ண்ட் வாரச்சந்தை திடல் வரை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

    ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியால் தற்போது சந்தை திடல், பழைய பஸ் ஸ்டா ண்ட் ஆகிய இடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு குவிந்துள்ள மண லால் காற்றில் புழுதி பறந்து மூச்சுவிட முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்ற னர். இலவச கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணி கள் சிரமப்படுகின்றனர்.

    கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாகவும் புகார் எழுந் துள்ளது. இதையடுத்து சந்தை திடல் வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்விடங்களில் மண் அதி களவில் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக் கிறது.

    இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் டூவீலர்களை கண்டபடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்துவதால் பஸ்கள் வெளியே செல்வதில் சிக் கல் ஏற்படுகிறது.

    சந்தை திடல், பழை பஸ் ஸ்டாண்டில் புழுதி பறக்காத வகையில் தரைத்தளத்தை செப்பனிட வேண்டும். இலவச கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பிற வாகனங்கள் உள்ளே வந்து செல்வதற்கு தடை விதிக்கவும் நகராட்சி, போலீ சார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

    ×