search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி
    X

    சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

    • சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
    • சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மானாமதுரை

    மானாமதுரையில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலை, சிவகங்கை சாலை, காவல் நிலையம் எதிர்புறம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன. நகர் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மாடுகளின் உரிமை யாளர்கள் வீடுகளில் இந்த மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் இந்த மாடுகள் மூலம் இருசக்கர வாகனங்களில் செல்ப வர்கள் விபத்துக் குள்ளாகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மானாமதுரை நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    மானாமதுரை நகரில் சுற்றித் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அறிவிப்பை மீறி மாடுகள் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரிந்தால் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்படும் மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களி ளும், கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ளது. மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு உள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் மாடுகளை வைத்து பராமரிக்க வேண்டும். தெரு மற்றும் சாலையில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்றார்.

    Next Story
    ×