search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதி மாணவர்கள் தவிப்பு
    X

    அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதி மாணவர்கள் தவிப்பு

    • மீன்சுருட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • நிதி ஒதுக்கியும் புதிய கட்டிடம் கட்ட தாமதம் ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

    அரியலூர்,

    மீன்சுருட்டியில் 2 அரசு விடுதிகள் பழுதடைந்த தால் தனியார் விடுதிக்கு மாண வர்கள் மாற்றப்ப ட்டுள்ள னர்.

    அரியலூர் மீன்சுருட்டி யில் ஆதி திராவிடர் நல ஆண்கள் மாணவர்கள் விடுதி 1996 முதல் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படி ப்பை மேற்கொண்டு வருகி ன்றனர்.இந்நிலையில் விடுதி கட்டிடம் மிகவும் பழமை யாகி, பழுதடைந்த நிலைக்கு சென்றதால், விடுதியில் தங்கி இருந்த மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 2020 டிசம்பர் மாதம் மீன் சுருட்டியில் உள்ள தனியார் கட்டிடத்தில் தங்க வைக்கப்ப ட்டு உள்ளனர்.

    மாணவர் விடுதிக்காக இந்த தனியார் கட்டிடத்திற்கு மாதம், மாதம் ரூ.9 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தனியார் கட்டிடத்தில் 30 மாணவர்கள் மட்டுமே தங்கக்கூடிய அள விற்கு இட வசதி உள்ளது.ஆனால் 60 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள தா ல், பள்ளி மாணவ ர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே, இங்கே தங்கி உள்ளனர். இதனால் பலர் தங்களது வீடுகளுக்கு அடிக்கடி செல்லும் நிலை ஏற்படுகிறது. புதிய தங்கும் விடுதி கட்டுவதற்கு மாநில அரசு ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிக ளின் மெத்தன போக்கால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதே போல மீன்சுரு ட்டில்யில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிற்படுத்தப்ப ட்டோர் நலத் துறை சார்பில் மாணவர் விடுதி பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த விடுதியில் சுமார் 50 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படிப்பை தொடர்ந்து வந்தனர். பழைய கட்டிடம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி கடந்த 2023 மார்ச் மாதம் பஞ்சாயத்து கட்டிடத்திற்கு விடுதி மாற்றப்பட்டது.

    இரண்டு விடுதிகளிலும் உள்ள மாணவர்கள் அடிப்ப டை வசதிகள் இல்லாததால் சிரமங்களை எதிர்கொள்கி ன்றனர், சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மாணவர்களின் நலன் கருதி இரண்டு புதிய விடுதிகள் கட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை.

    போதிய வசதி இல்லாத காரணத்தால் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் குளியலறை மற்றும் கழி வறை செல்வதற்கு மாணவ ர்கள் நீண்ட நேரம் காத்திரு க்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு தாமத மாக செல்லுதல் உள்ளிட்ட தேவையற்ற சிரமங்கள் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால், இரவு நேரங்களில் மாணவர்க ளுக்கு நிம்மதியான தூக்க மும் கிடைப்பதில்லை.

    மேலும் தனியார் கட்டிடத்திற்கான வாடகையை ஏப்ரல் மாதம் முதல் அரசு செலுத்தாததால் கட்டிட உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த விடுதிகளுக்கு பதிலாக புதிய விடுதிகள் கட்ட உடனே நடவடிக்கை மேற்கெர்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×