கன மழையால் சாலையில் குளம்போல் தேங்கிய தண்ணீர்

பழூர் அருகே கன மழையால் சாலையில் குளம்போல் தண்ணீர தேங்கி நின்றது தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் கடும் அவதி
கன மழையால் சாலையில்  குளம்போல் தேங்கிய தண்ணீர்
Published on

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. விடிய விடி மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் சாலையில் குளம் போல் மழைநீர்தேங்கியது.

தேங்கிய மழைநீர் இருபுறமும் வடிகால் வசதி அமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. சாலையில் முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

சாலைகள் சேரும் சகதி அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர். சாலையை சரி செய்ய ஏற்கனவே அதிகாரியிடம் மனு பல முறை அளித்திருந்த நிலையில், தற்போது வரை சாலை அமைக்கப்படாததால் இரவு பெய்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

உடனடியாக தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்றி, சாலை அமைத்து நோய் தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com