search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து"

    • இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
    • திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து

    திருச்செங்கோட வட்டார

    போக்குவரத்து அலுவலர்

    (பொறுப்பு) சரவணன்

    ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
    • சொக்கப்பனை முக்கு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    இதனையொட்டி டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த ரத வீதிகளில் பந்தல் போடும் நிகழ்வுக்காக சொக்கப் பனை முக்கு பகுதியில் இருந்து பேரிகார்டு அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரதவீதி களில் சிறப்பு கவனம் செலுத்தி தூய்மை பணி களை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சாக்கடை கால்வாய் அடைப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக டவுன் போலீஸ் குடியிருப்பு பின்புறம் உள்ள அறிஞர் அண்ணா தெருவில் சிறப்பு துப்புரவு பணி இன்று நடைபெற்றது. அந்த வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த தூய்மை பணியில் சாக்கடை கழிவுகள் அப்புறப் படுத்தப்பட்டு தெரு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.

    • சுங்கசாவடிக்கு பணம் செலுத்த தவிர்த்து பெருந்துறை-காங்கேயம் ரோட்டில் செல்லும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ெரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த வழியே வாகனங்களில் செல்லும் அனைத்து மக்களும் ெரயில் செல்லும் வரை காத்திருந்த பின்பே செல்வார்கள்.

    ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் ெரயில்வே மேம்பாலத்திற்காக போராடினார்கள்.

    அதன்பிறகு ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்தது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மேம்பாலம் வழியாக எந்த வித தடங்களும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.

    தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட 3 இடங்களில் உள்ள சுங்க சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன.

    அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை -பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் செல்லும் ரோடு, மற்றும் குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி ஆகியவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.

    இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    நான்கு வழிச் சாலைகளில் செல்லும் கண்டெய்னர்கள் எல்லாம் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்க்க இந்த வழியில் செல்கின்றன. இதனால் இந்த ரோடு தாங்காமல் அடிக்கடி பெயர்ந்து போய்விடுகிறது. மேலும் ஒரே நேரம் 2, 3 லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் குறுகலான சாலையை கொண்ட சென்னிமலை பகுதியில் அடிக்கடி சென்னிமலை கிழக்கு ராஜா வீதி மற்றும் சென்னிமலைபாளையம் பிரிவு, மலை கணுவாய், பசுவபட்டி வெப்பிலி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் மாதம் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கோ அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்திற்கோ இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும்.

    சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லாமல் சுங்கச் சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் லாரிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    ஈங்கூர் மேம்பாலம் கட்டப்படாமல் இருந்திருந்தால் ெரயில் வரும் போது மட்டும் ஒரு பத்து நிமிடங்கள் தான் நாம் நின்று விட்டு சென்றிருப்போம். ஆனால் தற்போது இந்த லாரிகளால் ஒரே வழியாக சென்று விடும் நிலையில் உள்ளோம் என சென்னிமலை பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    சென்னிமலை டவுன் பகுதிக்குள் இந்த கனரக லாரிகள் நுழைய தடை விதித்தால் கூட போதும் என்கின்றனர். இதை தவிர்க்க சென்னிமலை நகரை சுற்றி ரிங்ரோடு பைபாஸ் அமைக்க வேண்டும் என சென்னிமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    • அருப்புக்கோட்டையில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    பாலையம்பட்டி

    திருப்பூரில் இருந்து பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கண்டெய்னர் லாரி தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று புறப்பட்டது. லாரியை சீதாராமன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக கன்டெய்னர் லாரி இன்று காலை வந்து கொண்டிருந்தது. சாய்பாபா கோவில் அருகே வந்தபோது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. இதில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தனர்.காலை வேளையில் ஏற்பட்ட விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×