search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு
    X

    விபத்துக்குள்ளான கண்டெயனர் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

    • அருப்புக்கோட்டையில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    பாலையம்பட்டி

    திருப்பூரில் இருந்து பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கண்டெய்னர் லாரி தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று புறப்பட்டது. லாரியை சீதாராமன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக கன்டெய்னர் லாரி இன்று காலை வந்து கொண்டிருந்தது. சாய்பாபா கோவில் அருகே வந்தபோது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. இதில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தனர்.காலை வேளையில் ஏற்பட்ட விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×