என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor"

    • கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
    • குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பனியும் குளிரும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கடும் குளிர் அதிகரித்து உள்ளது.

    அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக இயக்கப்படுகின்றன. இதேபோல மாலையிலும் பனி மூட்டம் வலுப்பெறுவதால் ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மேலும் பகலில் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ச்சியான சாரல்மழை காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், பூங்கா மற்றும் ஏரி பகுதிகளில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    உள்ளூர் மக்கள் கடும் குளிரால் காலை-மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்றனர். இதேபோல விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வெம்மை தரும் ஆடைகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றுடன் வலம் வருகின்றனர்.

    குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குன்னூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபயணம் மேற்கொள்வோர் வெளியே வர இயலாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

    மேலும் குன்னூரில் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் விரைவில் உறைபனியின் தாக்கமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
    • உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    * கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.

    * மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    * அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்

    * குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.

    • மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி பெறாமலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாடல் ஹவுஸ் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிட பணி நடைபெறுவது தெரியவந்தது.

    தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

    இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் வாடகை நிலுவைத்தொகை செலுத்தாத வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டன.ஆனாலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நிலுவை வாடகைத்தொகை செலுத்த முன்வரவில்லை.

    தொடர்ந்து குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள 15 கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.

    மேலும் சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது. பண்டிகை காலம் என்பதால் சாலையோர வியாபாரிகளுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.
    • 1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இது.

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசம் குன்னூர். ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.

    சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளது.

    1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இதுவாகும்.

    இந்நிலையில், குன்னூர் டால்பினோஸ் காட்சி முனை மேம்பாட்டு பணிகள் காரணமாக நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் நலன் கருதி சாலை, கழிவளை, வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
    • மனித-வனஉயிரின மோதலின் நெருக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில், கடந்த சில நாட்களாக குட்டியுடன் கூடிய காட்டு யானைகள் இரவிலும் பகலிலும் கூட்டம்-கூட்டமாக சாலையை கடந்து செல்லும் காட்சிகள், வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    நேற்று இரவு முதலில் ஒரு யானை வந்தது. பின்னர் 2-3 யானைகள் வரிசையாக வந்து சாலையை கடந்தன. இதனை பார்த்த நாங்கள் வாகனத்தை நிறுத்தி அதிர்ச்சியுடன் பார்த்தோம்" என்கிறார் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற பயணி.

    "ஒரு பக்கம் இதுஒரு அரிய காட்சி. ஆனால் இன்னொரு பக்கம், யானைகள் திடீரென சாலைமீது வரும்போது எதையும் கணிக்க முடியாது என்பதால் பயமாக உள்ளது" என்கிறார் பஸ் டிரைவர் ஒருவர்.

    மேலும் காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. வனத்துறையினரும் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    "யானைக் கூட்டங்கள். உணவு மற்றும் குடிநீரை தேடி இடம்பெயருவது சகஜம். பர்லியார் அருகே உள்ள காட்டுப் பகுதிகள் தற்போது பசுமையாக இருப்பதால் காட்டு யானைகள் அங்கு இடம்பெயர்ந்து வருகின்றன" என்று வனஅதிகாரி ஒருவர் கூறினார்.

    இதற்கிடையே வனவிலங்குகள் சாலைகளைக் கடப்பது அவர்களின் இயற்கை வாழ்விடங்கள் குறைந்துவிட்டதற்கான வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. யானைகளுக்கான இடைநிலைக்காடுகள் குறைந்தது, சாலைகள் விரிவாக்கம், வனப்பகுதியில் மனித நடமாட்டம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக யானைகள் தற்போது வேறுபட்ட பாதைகளை தேடத் தொடங்கி உள்ளன.

    பர்லியார் பகுதியில் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள், இயற்கையின் உண்மையான அசைவைக் காட்டும் அரிய தருணமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில், இது மனித-வனஉயிரின மோதலின் நெருக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

    வனவிலங்குகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், சாலைகளில் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியம். காட்டு உயிர்களுக்கு அவற்றின் வலசைப்பாதை என்பது மிகவும் அவசியம் என்று ஊட்டி வனஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமாக மவுண்ட்ரோடு பகுதியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    காய்கறி கடை, துணிக்கடை, எலெக்ட்ரிக் பொருட்கள் கடை, பெயிண்ட் என என பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இங்கு கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணியளவில், வழக்கம் போல வியாபாரிகள் கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடைகளை அடைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    சிறிது நேரத்தில் துணிக்கடையில் பற்றிய தீ அருகே உள்ள மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. அந்த கடைகளிலும் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    தீ விபத்து ஏற்பட்டதை பார்த்ததும், அங்கு இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    அவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியதால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    உடனடியாக குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் வாகனங்களில் வேகமாக வந்து, மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து ஊட்டி, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. ஓரளவு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தபோது, அங்குள்ள பெயிண்ட் கடையில் உள்ள பொருட்களில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, குன்னூர் சப்-கலெக்டர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம் பருதி, குன்னூர் டி.எஸ்.பி. ரவி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவை தாண்டி மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில், மார்க்கெட்டில் உள்ள துணி, பெயிண்ட், மளிகை கடை என 15-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்களும் எரிந்து தீக்கிரையானது.

    இன்று காலையும் அதிகளவு புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் தீயணைப்பு துறையினர் அங்கேயே முகாமிட்டு அதனை கண்காணித்து வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் பூட்டப்பட்டுள்ளதால் மார்க்கெட்டிற்கு வந்த சரக்கு லாரிகள் சாலைகளில் அணிவகுத்து நின்றது.

    இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

    • 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர்.
    • குன்னூர் வட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவாயிலாக பர்லியார் சோதனை சாவடி உள்ளது. குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் திடீரென்று இரவு முழுவதும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையக்கூடிய வாகனங்கள் குன்னூர் நகரம் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பர்லியார் சோதனை சாவடி வழியாகத்தான் மாவட்டத்திற்குள் நுழைய முடியும்.

    இதையடுத்து இந்த ேசாதனை சாவடியில் வருவாய்த்துறையினர் இரவில் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர். வாகனங்களில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதாவது எடுத்து வரப்படுகிறதா என வாகனங்களை ஆய்வு செய்தபின்னர் உள்ளே வர அனுமதித்தனர்.

    இதில் குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், வருவாய் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    • கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும், உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள தாய்சோலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது. நீண்ட நேரம் சாலையில் சுற்றித் திரிந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனா். சிலா் செல்போனில் கரடியை படம் பிடித்தனா். சிறிது நேரத்துக்குப் பின் கரடி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.
    • மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    ஊட்டி

    தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியை நகர மன்ற தலைவர் சீலா கேத்ரின் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜா தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வெலிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நகர செயலாளர் ராமசாமி பரிசு வழங்கினார். இரண்டாம் பரிசு கன்னி மாரியம்மன் கோவில் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன் வழங்கினார். அருகில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், செல்லின் ராஜ், சாதிக் பாட்சா, நகர துணை செயலாளர் முருகேசன் மற்றும் வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், கிளை செயலாளர் சிக்கந்தர் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்டம் மாணவர் அணி துணை அமைப்பாளர் விஜய், ராஜ், நந்தகுமார் சதீஷ்குமார், மதிவாணன், பாலச்சந்தர், மகாலி, சதீஷ் தினேஷ், வினோத்குமார், செல்வா, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா்.
    • போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா். வெற்றி திருநாளான இந்நாளை கொண்டாடும் வகையில் ராணுவம் சாா்பில் ஆண்டுதோறும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி 'ரன் வித் சோல்ஜா்' என்ற தலைப்பில் நடைபெற்றது. போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

    5 கி.மீ., 12.5. கி.மீ. என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் போா்டு, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 800க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது.
    • மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட

    ஊட்டி

    ஊட்டி, கூக்கல் பகுதியை சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது. இது பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தலைவா் அருள் ரத்தினம் தலைமையில் மாவட்டத் தலைவா் தீபக் முன்னிலையில் குன்னூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    • வருவாய்த்துறை அதிகாரிகள் கார்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்படி ஏதாவது இருந்தால், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். காருக்குள் சாக்குமூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் ஏறி சாக்குமூட்டையை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில், ஏராளமான 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு 2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார் டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரையும், பணத்தையும் குன்னூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில்,அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

    இவர் நீலகிரியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்களை பழனியில் இருந்து எடுத்து வந்ததும், அதற்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று ஒரே நாளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அந்த வழியாக வந்த 20 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×