என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporarily closes"

    • ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.
    • 1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இது.

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசம் குன்னூர். ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.

    சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளது.

    1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இதுவாகும்.

    இந்நிலையில், குன்னூர் டால்பினோஸ் காட்சி முனை மேம்பாட்டு பணிகள் காரணமாக நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் நலன் கருதி சாலை, கழிவளை, வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து திருமானூர் பொதுமக்கள், கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

    அப்போது பேசிய கலெக்டர் விஜயலட்சுமி, பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மணல் குவாரி அமைந்துள்ள இடத்தில் ஐகோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழுவினர் வந்து பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மணல் குவாரி நிலவரம் குறித்து முடிவு எடுக்கப் படவுள்ளதாக கூறியதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். 
    ×