search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குன்னூர்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு
    • ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கான்கிரீட் சாலைப்பணிகளையும் பார்வையிட்டா

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலை ப்பள்ளி மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை ப்பள்ளி ஆகியவற்றில் வாக்காளர் பட்டியல் சிற ப்பு முகாம் நடை பெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி யதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது அடுத்த மாதம் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

    மேலும் நேற்றும், இன்றும் (26-ந்தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்கள் மேற்கண்ட முகாம்க ளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமு கம் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சுடுகாட்டு தகன கொட்டகையை கலெக்டர் அருணா நேரில் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பேரட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் முதல் மேல் பாரத்நகர் சந்திப்பு வரை ரூ.22 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் வடிநீர் கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலைப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி னார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் குமார், குன்னூர் நகராட்சி பொறி யாளர் வேலுசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
    • தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

     அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான், விபின், மற்றும் பொறியாளர் ஜான்சன் ஆகியோர் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இன்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்து சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் இந்த மருத்துவமனையால் பயனடைவார்கள். இதனை கட்டிக் கொடுத்த தன்னார்வ லர்களுக்கு வாழ்த்துக்க ளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 450 மருத்துவர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், தாசில்தார் கனிசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகரமன்ற துணை தலைவர் பா.மு.வாசிம் ராஜா தொடங்கி வைத்தார்
    • நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி உள்ளிட்டோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வசம்பள்ளம் குப்பை சேமிப்பு கிடங்கில், திடக்கழிவு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் சேமிப்பு மற்றும் தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை குன்னூர் நகரமன்ற துணை தலைவரும், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளருமான பா.மு.வாசிம் ராஜா, நகர கழக செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான எம்.ராமசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தாசந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் சையதுமன்சூர், பாக்கியவதி, ராபர்ட், வசந்தி, செல்வி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சிக்கந்தர் மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்குவரத்து பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழையும், பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியாறு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குன்னூரில் இருந்து கோவைக்கு ஒரு சுற்றுலா காரில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் சாலையில் கிடந்த மண் குவியல், கற்களை அகற்றி சீர்படுத்தினர். இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி, குன்னூர் டி.எஸ்.பி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளை யம் தேசிய நெடுஞ்சாலை யில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஊட்டிக்கு 61 பேர் பஸ்சில் சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது, குன்னூர் மரப்பாலம் பகுதியில் வந்த போது சுற்றுலா பஸ் திடீரென பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பஸ் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குன்னூரை சேர்ந்த இந்து முஸ்லிம், கிறிஸ்டியன் அமைப்பினர் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத போதகர்கள் அவர்களது முறைப்படி பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. சவுந்தர்ராஜன், குன்னூர் டிஎஸ்பி குமார், குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முத்துசாமி மற்றும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாஷிம் ராஜா, சமுக ஆர்வலர் உஷாபிரங்களின், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர், மணிகண்டன், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விபத்து நடந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக கடையம் கொண்டுவரப்பட்டது.
    • உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    தென்காசி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன் தினம் சுற்றுலா வந்த பஸ், மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனைத்தொடர்ந்து, குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த ஊரான கடையம் கொண்டுவரப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர், கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக, இறுதிச்சடங்குகள் செய்து உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டன.
    • விபத்தில் லேசான காயமடைந்தவர்கள், பேருந்து மூலம் ஊருக்கு அழைத்து வரப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின், போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது. குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக கடையம் கொண்டுவரப்பட்டது.

    சுமார் 12 மணி நேர பயணத்திகு பிறகு சாலை மார்க்கமாக உடல்கள் தென்காசி மாவட்டம் கடையம் வந்தடைந்தது. உயிரிழந்தவர்களில் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தந்த பகுதிகளில் தகனம் அல்லது அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிரைவர் முத்துக்குட்டி சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின், போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் சுப்பிரமணி (வயது 63), டிரைவர்கள் முத்துக்குட்டி (65), கோபால் (32) மற்றும் சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் டிரைவர் முத்துக்குட்டி சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர். தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் மற்றும் டிரைவர் கோபால் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
    • விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு இரங்கள் தெரிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

    "நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.
    • பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது. இதன்படி 1077, 0423 2450034 மற்றும் 94437 63207 என்ற உதவி எண்களில் விபத்து குறித்த தகவல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.