என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து வசதி"

    • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
    • சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    தீபாவளி திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பாக பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்யும்படி முதலமைச்சர் உத்தரவிட்டபடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தும், கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்தும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    நேற்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். இன்று கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.

    தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
    • உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    * கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.

    * மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    * அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்

    * குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.

    • காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
    • பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காந்திகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

    காந்திகிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் பள்ளி அமைந்துள்ளது. வனத்துறையினர் தடை காரணமாக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். கரடு முரடான பாதை என்பதால் மோட்டார் சைக்கிள்களையும் இயக்க முடியாது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் 2 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த பகுதியில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ளது. எனவே பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட கூடும் என்பதால் பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளி வரை நடந்து சென்று வருகின்றனர். இதே போல பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதாலும் மாலையில் பள்ளி முடிந்து வரும்போது இருட்டி விடுவதாலும் குழந்தைகள் அச்சத்துடனே வரும் நிலை உள்ளது.

    பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தை மர்மநபர்கள் சிலர் சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமம் வரை முழுமையாக தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வயல்களின் நடுவில் சாலை வசதி ஏதும் இல்லாத நிலையில் இந்த கடம்பன்குடி கிராமம் உள்ளது.
    • கிராம பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருவதில் பயண தூரமும், நேர விரயமும் அதிகமாவதால் சிரமப்படுகிறார்கள்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தின் தென் எல்லையில் சுமார் 8 மீட்டர் அகல முடைய கோணக்கடுங்கால் ஆறு ஓடுகிறது. குழிமாத்தூரி லிருந்து இந்த ஆற்றின் தென் கரைக்கு நேர் எதிராக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடம்பன்குடி கிராமம் உள்ளது. 4 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் உள்ள வயல்களின் நடுவில் சாலை வசதி ஏதும் இல்லாத நிலையில் இந்த கடம்பன்குடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்திலிருந்து மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேற்படிப்புக்காக குழிமாத்தூர் வழியாக திருப்பூந்துருத்தி, திருவை யாறு மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலி லுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்கிறார்கள். இந்த ஆற்றில் தண்ணீர் வராத போது வயல் வரப்புகள் வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து குழிமாத்தூரிலிருந்தும், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அம்பதுமேல்நகரம் கிராமம் வரையில் நடந்து சென்று பஸ் மூலமாக குழிமாத்தூர் வழியாக சென்று வருகிறா ர்கள்.

    குழிமாத்தூர் மற்றும் கடம்பன்குடி பகுதி விவசாயம் மற்றும் கூலி வேலையாட்களும் இந்த இரண்டு கிராமப் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருவதில் பயண தூரமும், நேர விரயமும் அதிகமாவதால் சிரமப்படுகிறார்கள். மேலும், கடம்பன்குடி கிராம விவசாய நிலங்களிலிருந்து அறுவடையாகும் நெல் மற்றும் வைக்கோல்களை சாலை வசதி இல்லாததால் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குழிமாத்தூருக்கு 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு வருவது மிகவும் சிரமமாக உள்ளது.

    எனவே, சாலைப் போக்குவரத்துவசதி இல்லாமலும் அருகாமையி லுள்ள குழிமாத்தூர், அம்பது மேல்நகரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்க ளோடு தொடர்பில்லாமல் தனித்து விடப்பட்ட தீவு போல தத்தளிக்கும் கடம்பன்குடி கிராமம் மற்றும் குழிமாத்தூர் விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பயன்படுகிற வகையில் கோணக் கடுங்கால் ஆற்றில் சாலைப் போக்கு வரத்துக்கு உகந்த வகையில் பாலம் கட்ட வேண்டும்.

    கடம்பன்குடி கிராமத்திலி ருந்து அம்பதுமேல்நகரம் வரையிலும் மற்றும் கடம்பன்குடி கிராமத்தி லிருந்து குழிமாத்தூர் கிராமம் வரையிலும் தார்சாலை அமைத்தும் பஸ் போக்குவரத்தினை உருவாக்கியும், கடம்பன்குடி கிராம மக்கள் வெளி உலகத்தோடு இணைந்து பயணிக்க ஆவன செய்து உதவ சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடம்ப ன்குடி மற்றும் குழிமாத்தூர் ஆகிய கிராமங்க ளின் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×