search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transportation"

    • வழக்கமான மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.00 முதல் இயக்கப்படும்.
    • மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்த வேண்டுகோள்.

    சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ ரெயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

    வழக்கமான மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.00 முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகளவு பன்றிகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
    • 74 பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளில் அனேக வார்டுகளில் பன்றிகள் அதிகளவு சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறும், சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டது.

    பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட மக்கள் விடுத்த கோரிக்கையின்படி மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்க நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா மேற்பார்வையில், மது ரையை சேர்ந்த நிறுவனம் மூலம் 74பன்றிகள் வரை பிடிக்கப்பட்டு வாகன த்தில் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

    அப்போது இளநிலை உதவியாளர் பாபு, பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், நித்தியானந்தம், தமிழ்மணி உடனிருந்தனர்.

    • அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
    • பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்:, அக்.18-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 தேதிகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி சென்னையிலிருந்து அக்டோபர் 20-ம் தேதி 200 சிறபபுப் பஸ்கள், 21-ம் தேதி 250 சிறப்பு பஸ்கள், 22-ம் தேதி 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போன்று ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அக்டோபர் 24-ம் தேதி 200 சிறப்பு பஸ்களும், 25-ம் தேதி 150 சிறப்பு பஸ்களும், மேலும் பயணிகளின் தேவைக்கற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.
    • சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் நடப்பட்டது. அனுமதியின்றி நடப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால் இது நாள் வரை கொடிகம்பம் அகற்றா ததால் ஆத்திரமடைந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அகற்றினால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் எனக் கூறினர். சாலை மறியல் தொட ர்ந்து நடைபெறுவதால் சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    • பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர்.
    • சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக கடலூர், விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி கட்டண சீட்டுகளைப் பெற்று அவை சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த பஸ்சுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் அனைத்து பஸ் கண்டக்டர்களும் சரியான பயணச்சீட்டையே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    • லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் செம்மண் மற்றும் கிராவல் மண் கிடைக்கும். இதனை ஒரு சிலர் லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில் நடுக்குப்பத்திலிருந்து ஆலத்தூருக்கு செல்லும் வழியில் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த விவசாயி ஒருவர் இது குறித்து கிராம மக்களிடம் கூறினார்.

    உடனடியாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைக் கண்ட செம்மண் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செம்மண் மற்றும் கிராவல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்?, இந்த வாகனங்களின் உரிமையாளர் யார்? என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட்டார போக்குவரத்து அலுவலகம் விரைவில் செயல்படும்.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் தொகுதியில் புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்க தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது,

    அதனைத்தொடர்ந்து அலுவலுகம் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டு அமிழ் ஹோட்டல் அருகில் இடமும் தேர்வு செய்து அதற்கான அனுமதி பெற கோப்புகள் சென்னையி லுள்ள போக்கு வரத்து துறை ஆணையகரத்திற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1-ந்தேதி போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்து விரைவில் அனுமதி வழங்குமாறு மனு அளித்து வலியுறுத்தினேன், அதற்கு ஆணையர் உடனடியாக கோப்பை ஆய்வு செய்து உள்துறை செயலாளர் அமுதாவிற்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை வெளியிட்டு விரைவில் ராஜபாளையம் தொகுதியில் புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகத்தை தற்காலிகமாக வாடகை கட்டித்தில் தொடங்கப்படுமென என்னிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.

    ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்துதல் கட்டிடப்பணி எனது கண்காணிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறுமாத காலத்தில் கட்டி டப்பணி முழுமையடைய உள்ளது. ஆகவே மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் இருக்கும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், இருதய அடைப்பு ஏற்பட்டால் உயிர்காக்கும் மருந்து பொருட்கள், ஆஞ்சியோ கருவி உள்பட அனைத்து மருத்து வக்கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன், மருத்து வக்கருவிகளை கையாளும் மருத்துவப்பணியாளர்கள் என தலைமை மருத்துவ மனையி லுள்ள அனைத்து வசதிகளையும் ராஜபா ளையம் அரசு மருத்துவ மனையில் திறப்பு விழா விற்கு முன்னதாகவே ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அதற்கு அரசு முதன்மை செயலாளர் கண்டிப்பாக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நிலவிவரும் போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வெல்பேர் கமிட்டி சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் போக்கு வரத்து நெரிசல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் ஒரு பக்க பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை முனைப்பு காட்டுவதோடு நோ பார்க் கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தும் பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கையை ஏற்று கொண்ட போலீசார் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக் கும் வகையில் பிரச்சா ரம் செய்யுமாறு கேட்டு கொண்டனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    முக்குரோட்டிலிருந்து குயின் டிராவல்ஸ் அலுவல கம் வரை ரோட்டின் இரு பக்கமும் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு இனி எந்த காலத்திலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படு மென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.

    கூட்டத்தில் போலீஸ் ஆய்வாளர் சரவணன், சுகா தாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி நிர்வாகி கள், நகர்மன்ற உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கச்சிராயன்பட்டி ஊராட்சி. மாங்குளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சியில் முறையாக கண்மாய் பணிகள் நடை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதில் ஒரு சிலர் தொ டர்ந்து போலி அட்டையுடன் 100 நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வ தாகவும், அது குறித்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நட வடிக்கையும் மேற்கொள்ள வில்லை என தெரிகிறது.

    ஆகவே இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப்பகுதி பொதுமக்கள் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் இன்று திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட் டத்தில் பங்கேற்றனர்.

    இதுபற்றி தகவலறிந்த கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம், ஆண்டிச்சாமி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்தது.

    இதில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனடியாகசம்பவ இடத்திற்கு மின்சார வாரிய அதிகாரிகளும் மின் ஊழியர்களும் விரைந்து வந்து மின்சார விநியோகத்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    பின்னர் போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது .

    • தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
    • 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுவதாக இருந்தது.

    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது , காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களையே நியமிக்க வேண்டும், பஸ்களை தனியார் மயமாக்ககூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது.

    இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை (9-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பேச்சுவார்த்தை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதில் அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்கங்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அன்றையதினம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? என்பது தெரியவரும்.

    • சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து இடையூறாக இருந்தது.
    • நேற்று இரவில் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கே.எம்.எஸ். நகர் பூங்கா சாலை பகுதியில் நீண்ட நாட்களாக மின் விளக்குகள் எரியாமல் இருந்தன.

    இதனால் இரவு நேரங்களில் அந்த வழியை கடந்து வீட்டிற்கு செல்ல பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.

    இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் அரங்கேறி வந்தது.

    மேலும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து இடையூராக இருந்தது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பொதுமக்க ளின் புகாரை தீர்க்க உடனடி நடவடிக்கையில் இறங்கினார்.

    அதன்படி நேற்று இரவில் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், 46- வது வார்டு உறுப்பினரும் மண்டலகுழு தலைவருமான கலையரசன் ஆகியோரிடம் கோரிக்கை களை கேட்டறிந்தார்.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டவர்களை வரவழைத்து மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுத்தார்.

    ஆணையரின் உடனடி நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் மின்விளக்குகள் ஒளிர்ந்தன.

    இதனை தொடர்ந்து கே.எம்.எஸ் நகர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சரவணகுமார் உறுதி அளித்தார்.

    நீண்ட நாள் பிரச்சனையை ஒரே நாள் இரவில் தீர்த்து வைத்த ஆணையர் சரவணகுமாரை, பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    ×