திருத்துறைப்பூண்டியில், நாட்டியாஞ்சலி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்தை இயக்க வேண்டும்.
ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டம் நடந்தது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சிவராத்திாியை முன்னிட்டு 10-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலா் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் கவிதா பாண்டியன், வா்த்தக சங்க தலைவா் செந்தில்குமாா், முன்னாள் நகர்மன்ற தலைவா் பாண்டியன், நாட்டியாஞ்சலி விழாக்குழு செயலாளா் ராஜா, தலைவா் செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், பாரதமாதா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அருண் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாட்டி யாஞ்சலி விழாக்குழு அமைப்பு செயலாளா் எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவே ற்றார்.

கூட்டத்தில் நாட்டியா ஞ்சலி விழாவில் கலந்து கொள்ளும் பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

அண்ணாசிலையில் இருந்து போிக்காடு அமைத்து மேலவீதியில் போக்குவரத்து தடைசெய்து பக்தா்களுக்கும், நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து வாகனங்களையும் வடக்கு, கீழ, தெற்கு வீதி வழியாக போக்குவரத்தை இயக்க வேண்டும்.

சன்னதி தெருவில் உள்ள கடைகளை சிவராத்திாி அன்று மதியம் 2 மணியிலிருந்து இரவு முழுவதும் அடைத்து விழா நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் நாட்டியாஞ்சலி விழாக்குழு பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com