என் மலர்
நீங்கள் தேடியது "Shops sealed"
- மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி பெறாமலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாடல் ஹவுஸ் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிட பணி நடைபெறுவது தெரியவந்தது.
தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் வாடகை நிலுவைத்தொகை செலுத்தாத வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டன.ஆனாலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நிலுவை வாடகைத்தொகை செலுத்த முன்வரவில்லை.
தொடர்ந்து குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள 15 கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.
மேலும் சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது. பண்டிகை காலம் என்பதால் சாலையோர வியாபாரிகளுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- பல்வேறு கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் 4 வருடமாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
- வாடகை பாக்கியாக ரூ.90 லட்சம் நிலுவையில் உள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில முக்கிய வர்த்தக பிரமுகர்கள் லட்சக்கணக்கில் சொத்துவரி பாக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனாலும் அவர்கள் சொத்துவரியை செலுத்தவில்லை. இதையடுத்து மண்டலம் 10-க்குட்பட்ட தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள 2 கடைகளுக்கு இன்று காலை சீல் வைக்கப்பட்டது. டாக்டர் நாயர் ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்சில் 43 கடைகள் உள்ளன. டீ கடை, பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் 4 வருடமாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
வாடகை பாக்கியாக ரூ.90 லட்சம் நிலுவையில் உள்ளது. அதனை செலுத்த நோட்டீஸ் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் 43 கடைகளையும் இன்று பூட்டி சீல் வைத்தனர்.
இதே போல பனகல் பார்க் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளது. அதில் 57 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 2 கோடியே 25 லட்சம் வாடகை பாக்கி உள்ளது. அந்த கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் நோட்டீஸ் வினியோகித்தனர். அடுத்த வாரம் இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மரக்காணம் அருகே போதை பொருள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது போல் போதை ப்பொருட்கள்விற்பனை செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் அருகே அனுமந்தை பஸ் நிறுத்தம் மற்றும் செட்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு சிலகடைகளில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்க ள்விற்பனை செய்ய ப்படுவதாக மரக்காணம் போலீசார்க்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இதனால் அனுமந்தை கிராமம் மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த வள்ளி, செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களது கடைகளில் பான், குட்கா ஆகியதடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்துள்ளது. இதனால் போதைபொருட்களை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கும் போலீசார்சீல்வைத்தனர்.






