search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A bear strolled along the road"

    • கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும், உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள தாய்சோலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது. நீண்ட நேரம் சாலையில் சுற்றித் திரிந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனா். சிலா் செல்போனில் கரடியை படம் பிடித்தனா். சிறிது நேரத்துக்குப் பின் கரடி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர்.

    ×