search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbator"

    • யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.
    • வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை வனச்ச ரகத்திற்குட்பட்ட பகு தியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவார பகுதியாகும். இங்கு இரவு நேரத்தில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விளைநிலத்தில் நுழைந்த காட்டு யானை ஒன்று கடந்த 2 நாட்களாக அடிக்கடி நடமாடி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்து றையினருக்கு தகவல் அளித்த நிலையில் வனத்துறை யினர் வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பது. தெரியவந்தது.இதனால் யானை உணவு உட்கொள்ள முடியாமல் நேய்வாய் பட்டுள்ளது. பின்னர் யானையை வனத்து றையினர் அடர்ந்த வனப்ப குதிக்கு விரட்டி யடிக்க பட்டாசுகள் வெடித்து முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த யானை உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.

    அதே சமயத்தில் அந்த யானை அருகில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்து அதனை உட்கொன்ட போது யானையால் உட்கொள்ள முடியவில்லை. யானை வாயில் உணவு போட்டால் அது முழுவதுமாக வாயிவலியாகவே வெளியேறுகிறது. இதனால் வனத்துறையினர் தர்ப்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர் அதையும் யானை உட்கொள்ளவில்லை. இதனையடுத்து யானையை அருகில் உள்ள வனப்பகுதியினுள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். இதனால் கோபமடைந்த யானை அங்கு இருந்து விவசாய தோட்டத்தின் வேலியை காளால் மிதித்து சேதப்படுத்தியது.

    மேலும் அங்கிருந்தவர்களையும் துரத்தியது. இதனால் அனைவரும் ஓடி சென்று தப்பினர். தற்போது வரை விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் காயம் பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வனத்திற்குள் விரட்ட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை

    கோவையில் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் ரவுடி சத்திய பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் கோர்டில் சரணடந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் போலீசார் சஞ்சய் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தனர்.

    இந்த நிலையில் ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு தியேட்டர் விவகாரத்தில் ஆதரவாக செயல்பட்டு கட்டப்பஞ்சாயத் தில் ஈடுபட்டவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். இதில் 30 பேர் சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்ட தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ஜார்ஜ் (வயது 42), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜாபர் (43), தெலுங்குபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (59), கணுவாயை சேர்ந்த உதயகுமார் (58), போத்தனூரை சேர்ந்த கேசவன் (42), வடவள்ளியை சேர்ந்த சுப்ரமணியன் (60), இடையர்பாளையத்தை சேர்ந்த வாசன் (58), செல்வபுரத்தை சேர்ந்த சூரிய பிரசாத் (26), குனியமுத்தூரை சேர்ந்த சக்திவேல் (48), சபரிராஜ் (31), செல்வபுரத்தை சேர்ந்த சரவணன் (44), காந்திபார்கை சேர்ந்த பிரகாஷ் (43), சாய்பாபா காலனியை சேர்ந்த பிரதீப் குமார் (52) உடபட 13 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கோனியம்மன் கோவில் தேரோட்டம்
    • போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆணடுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    தேர் முகூர்த்தக்கால் நடும் விழா கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் திருவிழா தொடங்கியது.

    20-ந் தேதி கிராம சாந்தி, 21-ந் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீரூற்றி வழிபட்டு வருகின்றனர்.

    திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகன திருவீதி உலா நடந்தது.

    இன்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. பிற்பகல் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜ வீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். மார்ச் 3-ல் தெப்பத்திருவிழாவும், 4-ந் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.

    மார்ச் 6-ந் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் கோனியம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி.

    செட்டி வீதி, சலிவன் வீதிக ளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

    வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்து மாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம்.

    மருதமலை தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மருதமலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.

    கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப் பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை.

    இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், நான்கு சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

    • ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது41). இவர் புது சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 25 -ந் தேதி இரவு பாலகிருஷ்ணன் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்பதால் அவர் கடையை திறக்க வில்லை. அன்று இரவு அவரது கடையின் மேலே உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த பேண்ட், சட்டை உள்ளிட்ட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×