search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magna Elephant"

    • சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது.
    • தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 65), இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் தோட்ட வேலையை பார்த்து விட்டு, வீட்டுக்கு செல்வார். அப்போது தேவையான உணவு பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் இரவு தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு ராமு தோட்டத்திற்கு செல்வதற்காக, பண்ணைப்புரம் சங்கப்பன்குளம் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்து வந்த ஒற்றை மக்னா யானை ராமுவை பலமாக தாக்கியது. இதில் அவர் பக்கத்தில் உள்ள முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தார். வேலிக்குள் விழுத்து கிடந்ததால், மக்னா யானை அப்படியே விட்டுவிட்டு சென்றது. உயிர் தப்பிய ராமுவை இன்று அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

    தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள யானைகள் இடம்பெயர்ந்து தேனி விளை நிலங்களுக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மக்னா யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
    • யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் வனக்காப்பாளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் கடம்பூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், வன குழு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    இதன் முடிவில் தான் யானை எவ்வாறு இறந்தது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது.
    • ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    ஆனைமலை அருகே விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த யானை சரளப்பதி அருகே கடந்த சில மாதங்களாக முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும், அங்குள்ள மக்களை தாக்கவும் முற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். ஆனால் வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது. மேலும் வனத்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியது.

    தற்போது யானையை பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கும்கிகளான ராஜவர்தன், கபில்தேவ் ஆகிய யானைகள் சரளப்பதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், முரட்டுத்தனமான மக்னா யானைகளை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படும் கும்கி யானையான சின்னத்தம்பியும் களமிறக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிப்ரவரி மாதம் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்தது.
    • சின்னதம்பி, சுயம்பு என்ற 2கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    பொள்ளாச்சி,

    தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப் பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து கோவையை நோக்கிச் சென்றது.

    இங்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, மானாம்பள்ளியில் உள்ள மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. ரேடியோ காலர் கருவி பழுதாகி விட்டதால் யானையின் நகர்வை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில், மக்னா யானை சரளபதி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகளான சின்னதம்பி, சுயம்பு ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    யானையின் நடமாட்டம் உள்ள பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னாவை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.
    • வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை வனச்ச ரகத்திற்குட்பட்ட பகு தியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவார பகுதியாகும். இங்கு இரவு நேரத்தில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விளைநிலத்தில் நுழைந்த காட்டு யானை ஒன்று கடந்த 2 நாட்களாக அடிக்கடி நடமாடி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்து றையினருக்கு தகவல் அளித்த நிலையில் வனத்துறை யினர் வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பது. தெரியவந்தது.இதனால் யானை உணவு உட்கொள்ள முடியாமல் நேய்வாய் பட்டுள்ளது. பின்னர் யானையை வனத்து றையினர் அடர்ந்த வனப்ப குதிக்கு விரட்டி யடிக்க பட்டாசுகள் வெடித்து முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த யானை உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.

    அதே சமயத்தில் அந்த யானை அருகில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்து அதனை உட்கொன்ட போது யானையால் உட்கொள்ள முடியவில்லை. யானை வாயில் உணவு போட்டால் அது முழுவதுமாக வாயிவலியாகவே வெளியேறுகிறது. இதனால் வனத்துறையினர் தர்ப்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர் அதையும் யானை உட்கொள்ளவில்லை. இதனையடுத்து யானையை அருகில் உள்ள வனப்பகுதியினுள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். இதனால் கோபமடைந்த யானை அங்கு இருந்து விவசாய தோட்டத்தின் வேலியை காளால் மிதித்து சேதப்படுத்தியது.

    மேலும் அங்கிருந்தவர்களையும் துரத்தியது. இதனால் அனைவரும் ஓடி சென்று தப்பினர். தற்போது வரை விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் காயம் பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வனத்திற்குள் விரட்ட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வனத்தில் விடப்பட்ட மக்னா யானையானது ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ந்து சுற்றி திரிந்தது.
    • யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஈச்சம்பள்ளத்தில் மக்னா யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தது.

    யானையை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    பின்னர் யானை பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனத்தில் விடப்பட்டது. 2 குழுவினர் இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    வனத்தில் விடப்பட்ட மக்னா யானையானது ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ந்து சுற்றி திரிந்தது.

    இந்நிலையில் மக்னா யானை நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறி சேத்துமடை பகுதிக்கு வந்தது. தொடர்ந்து மாரப்ப கவுண்டன்புதூர், செம்மேடு, திம்பங்குத்து தப்பட்டை கிளவன்புதூர், ராம நாதபுரம், ராமபட்டினம், தேவம்பாடிவலசு உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.

    ஊருக்குள் யானை வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இருப்பினும் வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து வந்ததால் சற்று நிம்மதி அடைந்தனர். மக்னா யானை நேராக கோவிந்தபுரம் கிராமத்தை நோக்கி வந்தது. அப்போது அங்கு யானையை பார்க்க மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். அவர்கள் யானையை புகைப்படம் எடுத்தனர்.

    திடீரென யானை மக்களை நோக்கி சென்றது. இதனை பார்த்ததும் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை யாரையும் ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. பின்னர் யானை அங்கிருந்து பயணமாகியது.

    கோவிந்தாபுரத்தை தாண்டியதும் வரும் வழியில் இருந்த தடுப்பணையை கண்டதும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது.

    உடனே அங்கு ஓடிய யானை தடுப்பணைக்குள் இறங்கி தண்ணீரை குடித்தது.

    களத்தூர் பகுதிக்கு வந்த யானை அங்குள்ள புதருக்குள் சென்று சிறிது நேரம் படுத்து உறங்கியது. பின்னர் மீண்டும் எழுந்து கே.கே.புதூர், பொள்ளாச்சி, ஆத்து பொள்ளாச்சி, புரவி பாளையம் பகுதியை நோக்கி நடந்து வந்தது.

    யானை சில தூரங்கள் வனத்தின் வழியாகவும், சில தூரங்கள் சாலைகள் வழியாகவும் நடந்து வந்தது.

    இதன் காரணமாக யானையை பின் தொடர்ந்து 75 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் கண்காணித்து கொண்டே வந்தனர். அவர்களுக்கு உதவியாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 50 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் குடியிருப்பு பகுதி மற்றும் சாலை வழியாக வந்த போது மக்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி கூறினர்.

    பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை நடக்க தொடங்கிய மக்னா யானை பல கிராமங்களை கடந்து 40 கி.மீ தூரம் பயணித்து இன்று காலை கோவை மதுக்கரை வனப்பகுதிக்கு வந்துள்ளது.

    தற்போது யானை போடிபாளையம் பகுதியில் நிற்கிறது. தொடர்ந்து யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் யானையின் நட மாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 

    தேவாரம் அருகே மீண்டும் ஆட்கொல்லி யானையான மக்னா வயல்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் அச்சதடைந்துள்ளனர். #MagnaElephant

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக மக்னா எனும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோட்டங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன் காவலாளிகளையும் தாக்கியது.

    இதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். அதன் பிறகு ஒற்றை யானை நடமாட்டம் அடியோடு நின்றது.

    2 மாதங்களாக தேவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கும்கி யானைகள் மீண்டும் டாப் சிலிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இதனால் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளது.

    நேற்று மூனாண்டிப்பட்டி, தேவாரம் ஆகிய பகுதிகளில் புகுந்து சேதப்படுத்தியது. இன்று காலை தாழையூற்று பகுதியில் உள்ள மணி என்பவரது தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த 5 தென்னை மரங்களை முறித்தது. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கப்பைக்கிழங்கு செடிகளையும் சேதப்படுத்தியது.

    கும்கி யானைகள் இங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த போது ஒற்றை யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் இப்பகுதியில் நிரந்தரமாக அதனை விரட்டும் வரை கும்கி யானைகளை தங்க வைக்க வேண்டும்.

    இவ்வையெனில் யானையை விரட்டுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×