என் மலர்
நீங்கள் தேடியது "இறப்பு"
- பிரபல கொரியன் நடிகையாக இருந்தவர் Kang Seo Ha.
- இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பிரபல கொரியன் நடிகையாக இருந்தவர் Kang Seo Ha. இவர் நடித்த Schoolgirl Detectives, Assembly, First Love Again,Through the Waves, The Flower in Prison, and Heart Surgeons போன்ற இணையத்தொடர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்றில் புற்று நோய் பாதிkகப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 31 என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதி சடங்கு நாளை மாலை சியோல் ஊரில் நடைப்பெற இருக்கிறது. இவரது இறப்பிற்கு அவரது ரசிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவர்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
- தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவமாக இருப்பவர் எம்.எம் கீரவாணி.
- இயக்குநர் ராஜ மௌலியின் மாமா ஆவார் சிவ சக்தி தத்தா.
தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவமாக இருப்பவர் எம்.எம் கீரவாணி. இவரது தந்தை மற்றும் மிகச்சிறந்த பாடலாசிரயராவார் சிவ சக்தி தத்தா. இவர் இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 92 ஆகும்.
திரைக்கதை எழுத்தாளரான விஜயந்திர பிரசாத்தின் மூத்த சகோதரர் மற்றும் இயக்குநர் ராஜ மௌலியின் மாமா ஆவார் சிவ சக்தி தத்தா.
இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். பாகுபலி, RRR, மகதீரா, ராஜன்னா மற்றும் ஸ்ரீ ராமதாசு போன்ற படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு சந்திராஸ் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவரது பாடல் வரிகள் கலாச்சார செழுமை மற்றும் தத்துவ ஆழம் கொண்டுள்ளாத இருக்கும். இவரது இறப்பு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை சார்ந்தவர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
அவரது இறுதி சடங்கு இன்று மாலை ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது.
- .தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் கவுண்டமணி.
- கவுண்டமணியின் மனைவியின் பெயர் சாந்தி.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் கவுண்டமணி. இவரது காமெடி காட்சிக்காகவே பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளது. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியானது ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம் வெளியானது.
கவுண்டமணியின் மனைவியின் பெயர் சாந்தி. இவருக்கு வயது 67 ஆகிறது. இவர் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் இறுதி சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

- மகளுக்கு காதலனே விஷம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு
- நித்திரவிளை மாணவி சாவில் தாயார் பரபரப்பு புகார்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர். இவரது 3-வது மகள் அபிதா (வயது 19). களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவியது.
இதற்கிடையில் அபிதா காதல் விவகாரம் காரணமாக விஷம் அருந்தி இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அபிதாவுக்கு பழக்கம் இருந்ததும், அந்த வாலிபருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. தற்போது பெங்களூருவில் படித்து வரும் அந்த வாலிபர், அபிதாவுடன் பேசுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்துள்ளார்.
இதுபற்றி அபிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பழகி விட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசி உள்ளனர். அப்போது அபிதாவை திருமணம் செய்வதாக வாலிபர் உறுதி அளித்துள்ளார். அதன்படி வருகிற 13-ந் தேதி அவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிதா மர்மமாக இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அபிதாவின் தாயார் தங்கபாய், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவுக்கு அவளது காதலன் தான் காரணம் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகளை அவர் அழைத்துச் சென்றார். அவரை சந்தித்து விட்டு திரும்பியதில் இருந்து தான் அபிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவர் தான், அபிதாவுக்கு விஷம் கலந்த எதையோ கொடுத்துள்ளார் என்றும் புகாரில் அவர் கூறி உள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அபிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்கலை பள்ளி மாணவன் அஸ்வின் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்து வந்தவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தான்.
இதில் இன்னும் குளிர்பானம் கொடுத்தது யார்? என்பது தெரிய வில்லை. இதேபாணியில் குமரி மாவட்டம் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன்ராஜ், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் நித்திரவிளை மாணவி அபிதாவும், காதலனால் விஷம் கொடுத்ததில் இறந்துள்ளார் என அவரது தாயார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- துக்கம் தாழாமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார்.
- வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ள காற்றாடி மூடு பகுதியைச் சேர்ந்த வர் வேலம்மாள் (வயது 78), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்.
இவருக்கு பகவதி அம்மாள் (57) என்ற மகளும் 2 மகன்களும் உள்ளனர். தற்போது வேலம்மாள், மகள்-மருமகன் ராதா கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்த வேலம்மாள் நேற்று முன் தினம் இறந்தார். அவரது உடலை மறுநாள் (நேற்று) தகனம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். அப்போது தாயின் உடல் அருகே பகவதி அம்மாள் துக்கம் தாழா மல் அழுது கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடி யாக அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்ட ர்கள் பகவதி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
தாய் இறந்த சோகத்தில் மகளும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பகவதி அம்மாள் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த உறவினர்கள், ஏற்கனவே தகனத்திற்காக வைத்திருந்த வேலம்மாள் உடல் அருகே வைத்தனர்.
இறந்த பகவதி அம்மா ளுக்கு காயத்ரி (30) என்ற மகளும், அஜித் (27) என்ற மகனும் உள்ளனர்.
ஒரே நேரத்தில் தாய்-மகள் இறந்ததை எண்ணி அங்கு வந்திருந்த பலரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து வேலம்மாள் உடல் மட்டும் நேற்று தகனம் செய்யப்பட்டது.
பகவதி அம்மாளின் மகன் அஜித், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும் என உறவி னர்கள் தெரிவித்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். இறந்தி கிடந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் வெள்ளை நிற அரைக் கை சட்டையும், ஊதா நிறத்தில் கைலியும் அணிந்து இருந்தார். பரமத்திவேலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மாத்திரைகளுடன் பஸ் நிலையத்திற்கு வந்திருந்த அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
- சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு:
உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் இறந்து போன கணவன் மற்றும் தாயார் சடலங்களை ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சம்பவம், ஈரோடு அருகே நிகழ்ந்திருக்கிறது.
கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்த சாந்தி-மோகனசுந்தரம் தம்பதிக்கு, மன வளர்ச்சி குன்றிய சரவணக்குமார் என்ற மகனும், சசிரேகா என்ற மகளும் உள்ளனர். சசிரேகா இருந்த வரை கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவர் திருமணமாகி சென்ற பிறகு சாந்தி, தனது வயதான தாயார், கணவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகனுடன் வசித்து வந்தார்.
பல நாட்கள் பட்டினியாகவும், அக்கம் பக்கம் இருப்பவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய கூட பணமில்லாத நிலையில், இரு சடலங்களை வீட்டிற்குள்ளேயே வைத்து விட்டு இருந்துள்ளார். சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இருசடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து பின்னர் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
- மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.
- கவுன்சிலரால் வளர்க்கப்பட்ட மருது என்ற காளை பாம்பு கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது
- கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் காளையின் உடல் அடக்கம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட புதுக்கோ ட்டை விடுதி ஊராட்சியை சேர்ந்தவர் உஷா செல்வம். இவர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார்.இந்நிலையில் இவர் மருது என்ற ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வள ர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த காளை பல்வேறு ஜல்லிக்கட் டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடி வந்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு மருது என்ற காளையை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மருது காளை உயிரிழந்த து. இது காளை வளர்த்த உஷா செல்வம் மட்டுமின்றி அந்த கிராம ம க்கள் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு பெரு ம் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி பின்னர் உரிய மரியாதை உடன் அந்த ஜல்லிக்கட்டு காளை உஷா செல்வம் வீட்டருகே நல்லடக்கம் செய்யப்பட்டது
- விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
- சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தீர்வு காணப்படாத வழக்குகளுக்கு இருதரப்பினரிடமும் பேசி முடித்து வைக்கப்பட்டது.
அதன்படி சாலை விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் பேசி அந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட நீதிபதிகள் ராஜவேல், ரஜினி, மக்கள் நீதிமன்ற நீதிபதி தமிழரசன், சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.
- ரியல்எஸ்டேட் புரோக்கர் திடீரென இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தர் பாலமுருகன்(45). இவருக்கு திருமணமாகவில்லை. வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி புரோக்கர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் பேச்சு மூச்சில்லாமல் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகனின் சகோதரர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார்.
- சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
போரூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி சிவகன்னி. இவர்களுக்கு ரம்யா என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.
குழந்தை ரம்யாவிற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது குழந்தையின் 2 சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த சூர்யா கூலிவேலைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை ரம்யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
இதனை கண்ட தாய் சிவகன்னி கதறி துடித்தார். அவர் இறந்த தனது குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார். அங்கிருந்த அவரது கணவர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குழந்தை ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சூர்யா மற்றும் அவரது மனைவி சிவகன்னி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சென்னை வந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியமால் பஸ்நிலைய பிளாட்பாரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.