search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்"

    • கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
    • பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

    மேலும் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளில் இருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியபடி இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு 2014-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்ததது.

    இதனால் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவது போன்றே நடந்துள்ளனர். ஆனவே ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது மாமியார் துன்புறுத்தியதாக அந்த பெண், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று கருத்து தெரிவித்தார்.

    மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறந்த மருத்துவர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்படும்.
    • ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.3,100 வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருகிற 22-ந் தேதி ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    சிறந்த மருத்துவர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்படும். கத்தியின்றி, ரத்தமின்றி பக்க விளைவு இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.3,100 வழங்கப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிக்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.

    தாரமங்கலம் சந்தைபேட்டையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் சந்தை பேட்டை பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு பொதுமக்கள் தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுசீலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி சடலத்தை பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர் சுசீலா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார் .எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×