search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the man"

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவரா? எப்படி இறந்தார்? வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×