search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the corpse"

    • கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் இறந்து கிடந்த வாலிபர், வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதினர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், பீகார் மாநிலம், கிழக்கு சம்ரான், புபனர் பகுதியை சேர்ந்த கிசுன் மஜ்கி என்பவரது மகன் வீரேந்திர மஜ்சி (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவரா? எப்படி இறந்தார்? வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×