search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட வடமாநில வாலிபர் அடையாளம் தெரிந்தது
    X

    கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட வடமாநில வாலிபர் அடையாளம் தெரிந்தது

    • கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் இறந்து கிடந்த வாலிபர், வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதினர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், பீகார் மாநிலம், கிழக்கு சம்ரான், புபனர் பகுதியை சேர்ந்த கிசுன் மஜ்கி என்பவரது மகன் வீரேந்திர மஜ்சி (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×