search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "On the rails"

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஓமலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்றிரவு ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இவர் நேற்று முன்தினம் இரவு தருமபுரியில் இருந்து ஈரோட்டுக்கு டிக்கெட் எடுத்துக் ரெயிலில் சென்றுள்ளார்.

    ஓமலூர்:

    ஓமலூர் காமாண்டப் பட்டியில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது.

    இந்த தண்டவாளத்தில் நேற்றிரவு ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிணமாக கிடந்தவர் கர்நாடக மாநிலம் ஆணைக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பிரிவு பணியாளராக இருந்த நந்தகுமார் (வயது 29) என்பது தெரியவந்தது.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு தருமபுரியில் இருந்து ஈரோட்டுக்கு டிக்கெட் எடுத்துக் ரெயிலில் சென்றுள்ளார்.

    அப்போது அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொன்று அங்கு வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    இறந்து கிடந்த நந்தகுமார் உடல் தற்போது தருமபுரி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் அங்கு திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    ×