search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity"

    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் புதியதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்சமயம் அந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி நடைபெற்ற போது பணியாளர்கள் தங்குவதற்காக அங்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாடில்லாத அந்த தகர செட் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. கடந்த 27 ந் தேதி அந்த தகர செட் உள்ள பகுதிக்கு சிலர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர். மேலும் அந்த பெண்ணை கொன்ற கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அந்த பெண் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கவிதா (வயது 46) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஆண் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கவிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையின் புதிய அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திகழ்கிறது.
    • ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட்டுள்ளது.

    மதுரை

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணா–நிதி நினைவாக மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நூலகம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து மு.க.ஸ்டா–லின் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந்தேதி மதுரை நத்தம் சாலையில் ரூ.120.75 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தற் போது ரூ.134 கோடியில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    கலைஞர் நூலகம் கீழ் தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டி–டமாக 2 லட்சத்து 13 ஆயி–ரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. நூலகத் தின் கீழ்தளத்தில் வாகனங் கள் நிறுத்துமிடம், நாளிதழ் கள் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவும், தரைத்த–ளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் கலைஞ–ரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதை–கள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்த–கங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறு–கிறது.அத்துடன் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ் கள் பிரிவு உள்ளது.

    இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், 3-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளது. 4-வது தளத்தில் போட்டித் தேர்வுகள் தொடர்பான நூல்கள் இடம் பெறுகின்றன. 5-ம் தளத்தில் அரிய நூல்கள், மின் நூல–கம், ஒளி, ஒலி தொகுப்பு–கள் காட்சியகப்பிரிவு, பார்வை–யற்றோருக்கான மின் நூல் ஒலி நூல் ஸ்டுடியோ உள் ளது.

    6-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட் டுள்ளது. தற்போது அனைத்து தளங்களிலும் பணிகள் நிறைவடைந்து நூலகத்துறையிடம் ஒப்ப–டைக்கப்பட்டு உள்ளது.

    மின் விளக்குகள், குளி–ரூட்டப்பட்ட அறைகள், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள் ளன. கட்டிடத்தின் நடுப்பகு–தியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடி பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள் ளது. அலங்கார வடிவமைப் புடன், இண்டீரியர் டெகரே–ஷன் எனும் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது.

    வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் கலை–ஞரின் உருவச்சிலை அமைக் கும் பணி, மாடித் தோட்டத் துடன் நூல்களை படிப்பதற் கான வசதியும், கலைக்கூ–டமும் அமைக்கப்பட்டுள் ளது. நூலகத்தில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. தற்போது 3.50 லட்சம் புத்தகங்கள் அடுக்கும் பணிகளும்ந நிறைவடைந்துள்ளது. சுமார் 17 மாதங்களாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் 100 சதவீதம் முடிந்து விட் டது.

    இந்த கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிய–ளவில் பிரமாண்டாக நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைக்கிறார்.

    மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருப்ப–ரங் குன்றம், பழமுதிர்ச் சோலை முருகன் கோவில் கள், காந்தி மியூசியம், தெப் பக்குளம், திருமலை நாயக் கர் மகால் உள்ளிட்ட பல் வேறு சிறப்பு அம்சங்கள் மதுரைக்கு பெருமைமிக்க அடையாளங்களாக விளங் குகிறது.

    இதற்கெல்லாம் முத் தாய்ப்பாக தமிழகத்தில் சென்னை அண்ணா நூல–கத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய நூலகமாக மது–ரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் அடையாளங்க–ளில் ஒன்றாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல–கம் அமையும் என்பதில் ஐயமில்லை.

    • நடிகை திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதாவது, அகில் பால்-அனஸ்காஸ் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

    இதற்கு ரசிகர்கள் திரிஷா, டோவினோ தாமஸ்சைவிட 6 வயது பெரியவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    • இரட்டை கொலையில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்ததாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
    • தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய் மகளை கொலை செய்து 60 தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். பேரன் மூவரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டி.ஐ.ஜி. துரை சம்பவம் நடந்த நாளிலிருந்து தேவகோட்டை பகுதிகளில் முகாமிட்டு அவரது மேற்பார்வையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து சட்ட ஒழுங்கு குழு தலைவர் கேஆர். ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5000க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

    மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ், காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனி படை பிரிவினர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று டி.ஐ.ஜி. துரை சிவகங்கையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கண்ணங்கோட்டையில் இரட்டை கொலை சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்து. தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
    • இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர் வெள்ளை, காபி கலரில் கோடு ேபாட்ட ரெடிமேட அரைகை சட்டை, பச்சை, கருப்பு நிற பாக்கெட் வைத்த டிரவுசர் அணிந்திருந்தார். இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து மோகனூர் ரெயில் நிலையத்தின் அதிகாரி சேலம் ரெயில்வே போலீ சாருக்கு த கவல் தெரிவி த்தார். அதன்பேரில் போலீசார், அங்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவர் உடல் ஆஸ்பத்திரி பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி ஏேதனும் தகவல் கிடைத்தால் பொது மக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி ரெயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் கஞ்சமலை கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கடந்த 20-ந்தேதி இதை பார்த்த பொதுமக்கள், சேலம் இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலி பர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

    அவர் பெயர் மற்றும் முகவரி தெரியாததால் போலீசாருக்கு மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்த வாலிபர் புளூ நிற பேண்ட், புளூ, ரோஸ்கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
    • ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பினார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி(வயது 52)என்பதும் ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் கோகுல் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×