தாரமங்கலம் சந்தைபேட்டையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு

தாரமங்கலம் சந்தைபேட்டையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டனர்.
தாரமங்கலம் சந்தைபேட்டையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் சந்தை பேட்டை பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு பொதுமக்கள் தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுசீலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சடலத்தை பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர் சுசீலா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார் .எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com