என் மலர்
நீங்கள் தேடியது "Govt Hospital"
- வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
- சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் டாக்டராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் புது மனைவி கணவரை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சித்திக் தனது மனைவியை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வார்டில் இருந்த நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு தனது சட்டை, பேண்டை கழட்டினார்.
பின்னர் புது மனைவியை கட்டிப்பிடித்த படியும், கட்டிலுக்கு அடியில் முன்னும், பின்னும் உருண்டு புரண்டார். இதே போல் நீண்ட நேரம் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர்.
இதனை ஆஸ்பத்திரி நோயாளிகள் தங்களது செல்போன்களில் வீடியோ, போட்டோவாக பதிவு செய்தனர்.
இந்த வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து சித்திக்கிடம் விளக்கம் கேட்டனர். சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் நோயாளிகளை காப்பாற்றும் புனிதமான பணியில் உள்ள டாக்டர் ஒருவர் இது போன்ற செயலில் ஈடுபட்டது ஏற்புடையதல்ல.
இனி இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
- கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது.
ஹாவேரி:
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தை சேர்ந்தவர் ரூபா(வயது 30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ரூபாவை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவ அறையில் படுக்கை வசதி பற்றாக்குறையாக இருந்ததால், ரூபா பிரசவ அறையின் வெளியில் நடைபாதையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடுமையான வலியால் துடித்த ரூபா இருக்கையில் அமர முடியாமல் எழுந்து அங்கும் இங்கும் வலியில் துடித்தப்படி நடந்து கொண்டிருந்தார். அவர் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது. பின்னர் தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததால் அந்த குழந்தை உடனே இறந்துவிட்டது.
ரூபா கடுமையான பிரசவ வலியில் அலறி துடித்த போதிலும் டாக்டர்கள் அனைவரும் அலட்சியமாக செயல்பட்டதாகவும், அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததும் தான் குழந்தை இறப்புக்கு காரணம் எனவும் ரூபாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
பின்னர் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.
- மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் விழாக்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கி குறை தீர்க்கும் சேவைகளையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 10 நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த 2 விழாக்களில் பங்கேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் வளாகத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை 400 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனை திறப்பு விழா இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளது.
விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் காமராஜ், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி, பல்லாவரம் சேர்மன், இ.ஜோசப் அண்ணாதுரை, த.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி பாலத்தில் இருந்து தாம்பரம் அரசு மருத்துவமனை வரை வழியெங்கும் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
இதே போல் பல்லாவரம் மேடைக்கு வரும் போது கண்டோன்மெண்ட் குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் பழைய டிரங்க் சாலை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
- மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குளித்தலை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஸ்ருதி(27)-யை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன.
- பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காகவும், பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிரசவத்திற்காக வரும் பெண்கள், குழந்தை பெற்றதும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போல் பச்சிளம் குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அவ்வாறு பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
இந்த வார்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருப்பதற்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து படுக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் படுக்கைகள் கிழிந்து சேதமாகி இருப்பதும், பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் தரையில் படுத்து படுக்க வைத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைபார்த்ததும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனைகளில் இதுபோன்று சேதமாகி காணப்படும் படுக்கை மற்றும் மெத்தைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.
- வீடியோவில், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.
அந்த வீடியோவில் பச்சிளங் குழந்தைகள் தரையில் படுக்க வைத்துள்ள படியும், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.
இதற்கு, கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " சம்பந்தப்பட்ட 2 பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு அருகே கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மெத்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சேதமடைந்த மெத்தையை அப்புறப்படுத்தப்படுத்தி உள்ளோம். தற்போது நோயாளிகளுக்கு தேவையான மெத்தைகள் இருப்பு உள்ளன" என்றார்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த இருதரப்பினர் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வழக்கறிஞர் ஒருவரை மருத்துவர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி வழக்கறிஞருடன் மோதலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவரை மருத்துவர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி வழக்கறிஞருடன் மோதலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. மருத்துவரை கைது செய்ய கோரி மருத்துவமனையை முற்றுக்கையிட்டு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
- காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
- மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் ரெயில் மூலம் காட்பாடி வந்தார்.
அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்றார்.
அங்கு ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லெண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.1.20 கோடி மதிப்பில் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பிலான திருவலம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.60 லட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சி லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் பேரணாம்பட்டு நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு மகமதுபுரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன். எஸ்.எம். நாசர், கலெக்டர் சுப்புலெட்சுமி, எம். எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.
- சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.
அங்கு கடந்த 20-ந்தேதி, காலில் ஆபரேஷன் செய்து கொள்வதற்காக, ஒரு 15 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளை கவனித்துக் கொள்ள தாயார் வந்திருந்தார். அதே வார்டில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மோஹித் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள அவருடைய சகோதரர் ரோஹித் (வயது 20) வந்திருந்தார்.
20-ந்தேதி இரவு, 15 வயது சிறுமி, ஆஸ்பத்திரி கழிவறைக்கு சென்றாள். அப்போது, வாலிபர் ரோஹித்தும் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்தார். கழிவறையில் வைத்து சிறுமியை கற்பழித்தார். எதிர்ப்பு தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, அவர் இந்த பாதக செயலை செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.
நேற்று முன்தினம் மாலை, தன் தாயாரிடம் இந்த கொடூரத்தை தெரிவித்தாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், வாலிபர் ரோஹித்தை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கடுகுநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி பிரீத்தா, இவர்களுக்கு 4 வயதில் பிரசாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், கடந்த 30-ந் தேதி வீட்டின் படியிலிருந்து பிரசாந்த் தவறி கீழே விழுந்ததாக அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு காலில் அடிப்பட்டுள்ளதாக கூறி கட்டு போட்டு அனுப்பி உள்ளனர். பின்னர் மீண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் ரண ஜன்னியால் பாதிக்கப்பட்டு குழந்தை பிரசாந்த் உயிரிழந்தது.
அதனால் மருத்துவர்கள் தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக குழந்தையின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி வட்டாட்சியர் கோகுல், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்ய கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
- பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை 8 மணி அளவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது கணினி மூலமாக டோக்கன் பதிவு செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த ஊழியர் கணினி பழுதில் இருப்பதால் சீட்டு எடுக்க முடியவில்லை என்று கூறினார். உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, டாக்டர்கள் எத்தனை மணிக்கு வருகிறார்கள்? எத்தனை மணிக்கு பணியை முடித்து செல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை அந்த பெண் ஊழியரிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பணியில் இருந்த டாக்டர்களிடம், நாள் ஒன்றுக்கு நோயாளிகள் வரும் எண்ணிக்கை, எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது? பொதுவான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் அமைச்சர் விசாரித்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகம், கட்டுப்போடும் இடம், எக்ஸ்ரே உள்ளிட்டவைகள் எடுக்கும் அறைகளில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்குள்ள பொது நோயாளிகள் பிரிவுக்கு சென்றார்.
அங்கே சிகிச்சையில் இருந்த மூதாட்டி உள்பட நோயாளிகளிடம் சிகிச்சைகள் தரமாக வழங்கப்படுகிறதா? உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனை வளாகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த கூடன்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு பதிலளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.






