என் மலர்
நீங்கள் தேடியது "Kallakuruchi"
- குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.
- வீடியோவில், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.
அந்த வீடியோவில் பச்சிளங் குழந்தைகள் தரையில் படுக்க வைத்துள்ள படியும், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.
இதற்கு, கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " சம்பந்தப்பட்ட 2 பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு அருகே கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மெத்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சேதமடைந்த மெத்தையை அப்புறப்படுத்தப்படுத்தி உள்ளோம். தற்போது நோயாளிகளுக்கு தேவையான மெத்தைகள் இருப்பு உள்ளன" என்றார்.
- பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
- மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா?
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு
திமுக அரசு வெட்கப்பட வேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு.
- அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் என இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 16 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கி வருகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அவ்வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் உட்கட்சி அமைப்புத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வட்டாரத் தலைவர் இளவரசன், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் குமார் வரவேற்றார். கூட்த்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 10 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் 40 ஆயிரம் உறுப்பினர்களை டிஜிட்டல்முறையில் காங்கிரஸ்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் பூத் கமிட்டி தேர்தலை நடத்தி முடித்த பின்னர்வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் படிப்படியாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் முடிவுகளை மாநிலத் தலைமைதான் அறிவிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அமைப்பு தேர்தல் நடத்துவதற்கான பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், வழக்கறிஞர் இளையராஜா, வழக்கறிஞர் ராஜ்மோகன், ஆகியோர் கலந்து கொண்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினர். இதில் வட்டார தலைவர்கள் கிருபானந்தம், சின்னையன், கணேசன், அப்துல்கலாம், பெரியசாமி, கொளஞ்சி யப்பன், நகர தலைவர்கள் ஏழுமலை, கபீர் பாஷா, செந்தமிழ்ச்செல்வன் சோசியல் மீடியா கார்த்தி, சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






