என் மலர்
நீங்கள் தேடியது "Child kidnap"
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்மநபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக கூறிக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை துறையூர் அருகில் போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
நட்பாக பழகி குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக்கூறி பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்ற குழந்தையை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
- நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை :
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
- இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இம்மனுக்களை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் அலட்சியமாகக் கையாண்டது, இதனால் பல குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இந்த குற்றவாளிகள் சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளனர். ஜாமின் வழங்கும்போது உயர் நீதிமன்றம் குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஒரு மருத்துவமனையில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை கடத்தப்பட்டால், முதல் படியாக அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், குழந்தை கடத்தல் வழக்குகளில் ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் ஏதேனும் மெத்தனம் காட்டினால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
இதனிடையே, குழந்தை கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு ஜாமின் வழங்கியதற்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தையும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
- சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது சிறுமிக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ேதாட்டத்தில் வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமி வீட்டிற்கு வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் இது குறித்து நெகமம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமியை தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த டிரைவர் சிறுமியை சங்கம்பாளையத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் அவரை பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.
- செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைபட்டி சேசன்சாவடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செந்தில் குமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் மகள், 7 மற்றும் 2 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை திடீரென மாயமானான். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் லட்சுமி என்பவருடன் தங்கியிருந்த வெள்ளாள குண்டம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி பழனியம்மாள் (32) என்பவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வெள்ளாளகுண்டம் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டனர்.
இதையடுத்து பழனியம்மாைள கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், பகீர் தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு:-
எனக்கு 17 வயதில் மகள், 14 வயதில் மகன் உள்ளனர். இங்குள்ள தனியார் பால் கம்பெனியில் வேலை செய்தபோது லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தேன்.
நான் வெள்ளாள குண்டத்தில் புதிதாக வீடு கட்டியுள்னேன். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் நான் 3 நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டிற்கு வந்தேன். இந்த வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.
அந்த கடனை அடைக்க முடியாத நெருக்கடியில் இருந்த எனக்கு, செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.
அதன்படி சம்பவத்தன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றேன். ஆனால் போலீசார், துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு பழனியம்மாள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- கணவன், மனைவி ஆசைப்பட்டு குழந்தையை கடத்தினர்
- போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி பேட்டி
வேலூர்:
குழந்தை கடத்தல் குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனிப்படை
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி, ஏ.எஸ்.பி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பத்மா விட்டு சென்ற பொருளிலிருந்து அவரது பெயர் மற்றும் முகவரியை கண்டறிந்தோம். அவர் குழந்தையின் தாயுடன் 2 நாட்கள் சகஜமாக பழகி வந்துள்ளார்.
பத்மாவின் புகைப்படத்தை வைத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இரவு ரோந்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டு அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினோம்.
அப்போது காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பெண் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்த பிறகு குழந்தையை கடத்தி சென்ற பத்மா மற்றும் அவரது கணவனை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டோம். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பத்மாவுடன் பிடிபட்டவர் 2-வது கணவர் என்றும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் குழந்தையை பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- பல மாதங்களாக பயனற்று கிடக்கிறது
- பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
கருத்தடை செய்து கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர், சூரியகலாவின் ஆண் குழந்தையை கடத்திச் சென்றார்.
இதனையடுத்து போலீசார் 8 மணி நேரத்தில் குழந்தையை காஞ்சிபுரத்தில் மீட்டு, பத்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தற்போது 2 கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் சித்தூர் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.
இங்கு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரே பதிவில் கொண்ட டேக் பொருத்தப்படும்.
இந்த டேக் மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்.எப்.டி. சென்சார் கருவி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஆர்.எப்.டி. (ரேடியோ ஃப்ரீகுவன்சி டெக்னாலஜி மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடென்டிபை) டேக் பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது தாய் கட்டிடத்தை விட்டு வெளியேரினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன் மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ? அல்லது குழந்தையை கடத்தி செல்லவோ முடியாது.
இந்நிலையில் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆர்.எப்.டி. என்ற தொழில் நுட்ப கருவி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பழைய மகப்பேறு கட்டிடத்தில் மட்டுமே இந்த ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை. மேலும் பழைய கட்டிடத்தில் உள்ள ஸ்கேனர் கருவியும் பல மாதங்களாக பழுதாகி பயனற்று கிடக்கிறது.
இதனால்தான் குழந்தை கடத்தப்பட்ட போது, அதனை தடுக்க முடியவில்லை. எனவே உடனடியாக ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவியை பழுது பார்ப்பதோடு, புதிய கட்டிடத்திலும் ஆர்.எப்.டி. கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார்.
- உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல மறுத்து 2 வயது குழந்தை கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. சுமார் 14 மாதங்களாக குழந்தை கடத்தியவருடன் வளர்ந்த நிலையில், தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்தது. பின் குற்றவாளியும் அழுதார்.
ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிருத்வி என்ற 11 மாத குழந்தை கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தையை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த புதன்கிழமை அன்று குழந்தையையும், கடத்தியவரையும் கண்டுபிடித்தனர்.
கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்தியதாக கூறப்படுகிறது. கைதான தனுஜ் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். அவர் உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். ஆனால் தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனுஜ் முன்பு உ.பி காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் இருந்தவர் என்பதால் போலீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த அவர், தலைமறைவாக இருந்த காலத்தில் மொபைல் போனை பயன்படுத்தவில்லை.
பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இருப்பினும் காவல்துறையினரின் தீவிர தேடலுக்குப் பிறகு தனுஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
- உறுதி மொழி ஏற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை வளாகத்தில் மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் திருநாவுக்கரசு, ஜெய் கமல் தலைமை தாங்கினார்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், ரெயில்வே காவல் நிலைய முதுநிலை காவலர் பெல்ஜியா, கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து எளிதில் விடுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார், ெரயில்வே பாதுகாப்பு படையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், ஆட்டோ டிரைவர்கள், ரயில்வே துப்புரவு பணி யாளர்கள், விற்ப னையாளர்கள், ெரயில்வே மருத்துவ ஊழியர்கள் மற்றும் இதர ரெயில்வே பணியா ளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ரெயில்வே பிளாட்பாரங்களில் கலை நிகழ்ச்சி மூலம் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியாக வந்தனர். இறுதியில் மனித மற்றும் குழந்தை கடத்தல் எதிர்ப்புக்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
- குழந்தையை கடத்தியதாக 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூரைச் சேர்ந்தவர் ஜோதிபாசு (வயது 30). இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து இவர்களது மகளான நிலவரசி (7) என்பவர் யாரிடம் இருக்க வேண்டும் என்பது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மகளை தந்தையுடன் இருக்குமாறு கூறி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலவரசி கடந்த சில நாட்களாக அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நிலவரசியை அழைத்துச் சென்று விட்டனர். இது குறித்து ஜோதிபாசுக்கு தகவல் கிடைக்கவே அவர்களது வீட்டுக்கு சென்று நிலவரசியை அனுப்புமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் சரியான பதில் சொல்லாமல் இருந்து விட்டனர். இதனால் தனது மகளை கடத்திச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் செல்வி, கருப்பசாமி, கிருஷ்ணம்மாள், சிவக்குமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவரது 2-வது மகள் பிரித்தீகா (4). இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் (24) என்பவர் குழந்தையை கடத்தும் நோக்கத்தோடு தூக்கி சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து துரத்தி உள்ளனர். இதனால் பயந்த அங்குகுமார் குழந்தையை அங்குள்ள புதர் பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட குழந்தைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை சிவக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அங்குகுமாரை தாக்கியதாக கோடியக்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் என்பவர் தன்னிடம் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது பிரிதீகா என்ற குழந்தை தூக்கி வைத்துக்கொண்டு விபரம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
ஆனால் அவர் குழந்தை கடத்த வந்துள்ளார் என கருதி கோடியக்கரையை சேர்ந்த ரெங்கசாமி, பரமானந்தம், சசிக்குமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்குகுமாரை தரகுறைவாக பேசி கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
தலையில் படுகாயம் அடைந்த அங்குகுமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாகவும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பதினெட்டாங்குடி கிராமம். இங்கு இன்று காலை நைட்டி அணிந்த 2 பேர் சுற்றி திரிந்தனர். பார்ப்பதற்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் காணப்பட்டனர்.
ஊரில் உள்ள மந்தை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற 2 பேரும் யாரும் இல்லாத நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி பிஸ்கட் கொடுத்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் 2 பேரும் அந்த குழந்தையை அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் சந்தேகப்பட்டு உடனே அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேரில் ஒருவன் தப்பி விட்டான். மற்றொருவனை பிடித்த இளைஞர்கள், மேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தலைமை மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் ஜெயந்த் ஆகியோர் அந்த நபரை பரிசோதனை செய்தனர். பிடிபட்ட நபர் உண்மையில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






