search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child kidnap"

    • பல மாதங்களாக பயனற்று கிடக்கிறது
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    கருத்தடை செய்து கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர், சூரியகலாவின் ஆண் குழந்தையை கடத்திச் சென்றார்.

    இதனையடுத்து போலீசார் 8 மணி நேரத்தில் குழந்தையை காஞ்சிபுரத்தில் மீட்டு, பத்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தற்போது 2 கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் சித்தூர் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

    இங்கு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரே பதிவில் கொண்ட டேக் பொருத்தப்படும்.

    இந்த டேக் மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்.எப்.டி. சென்சார் கருவி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஆர்.எப்.டி. (ரேடியோ ஃப்ரீகுவன்சி டெக்னாலஜி மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடென்டிபை) டேக் பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது தாய் கட்டிடத்தை விட்டு வெளியேரினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன் மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ? அல்லது குழந்தையை கடத்தி செல்லவோ முடியாது.

    இந்நிலையில் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆர்.எப்.டி. என்ற தொழில் நுட்ப கருவி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பழைய மகப்பேறு கட்டிடத்தில் மட்டுமே இந்த ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை. மேலும் பழைய கட்டிடத்தில் உள்ள ஸ்கேனர் கருவியும் பல மாதங்களாக பழுதாகி பயனற்று கிடக்கிறது.

    இதனால்தான் குழந்தை கடத்தப்பட்ட போது, அதனை தடுக்க முடியவில்லை. எனவே உடனடியாக ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவியை பழுது பார்ப்பதோடு, புதிய கட்டிடத்திலும் ஆர்.எப்.டி. கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கணவன், மனைவி ஆசைப்பட்டு குழந்தையை கடத்தினர்
    • போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி பேட்டி

    வேலூர்:

    குழந்தை கடத்தல் குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தனிப்படை

    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி, ஏ.எஸ்.பி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பத்மா விட்டு சென்ற பொருளிலிருந்து அவரது பெயர் மற்றும் முகவரியை கண்டறிந்தோம். அவர் குழந்தையின் தாயுடன் 2 நாட்கள் சகஜமாக பழகி வந்துள்ளார்.

    பத்மாவின் புகைப்படத்தை வைத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இரவு ரோந்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டு அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினோம்.

    அப்போது காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பெண் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்த பிறகு குழந்தையை கடத்தி சென்ற பத்மா மற்றும் அவரது கணவனை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டோம். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பத்மாவுடன் பிடிபட்டவர் 2-வது கணவர் என்றும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் குழந்தையை பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.
    • செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைபட்டி சேசன்சாவடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செந்தில் குமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் மகள், 7 மற்றும் 2 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை திடீரென மாயமானான். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் லட்சுமி என்பவருடன் தங்கியிருந்த வெள்ளாள குண்டம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி பழனியம்மாள் (32) என்பவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வெள்ளாளகுண்டம் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டனர்.

    இதையடுத்து பழனியம்மாைள கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், பகீர் தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு:-

    எனக்கு 17 வயதில் மகள், 14 வயதில் மகன் உள்ளனர். இங்குள்ள தனியார் பால் கம்பெனியில் வேலை செய்தபோது லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தேன்.

    நான் வெள்ளாள குண்டத்தில் புதிதாக வீடு கட்டியுள்னேன். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் நான் 3 நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டிற்கு வந்தேன். இந்த வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி இருந்தேன்.

    அந்த கடனை அடைக்க முடியாத நெருக்கடியில் இருந்த எனக்கு, செந்தில்குமாரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்து, அந்த பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்தேன்.

    அதன்படி சம்பவத்தன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்றேன். ஆனால் போலீசார், துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு பழனியம்மாள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது சிறுமிக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். சிறுமியை அவரது காதலன் கரூருக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ேதாட்டத்தில் வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி வீட்டிற்கு வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் இது குறித்து நெகமம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமியை தேடி வந்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த டிரைவர் சிறுமியை சங்கம்பாளையத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் அவரை பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • உறுதி மொழி ஏற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை வளாகத்தில் மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் திருநாவுக்கரசு, ஜெய் கமல் தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், ரெயில்வே காவல் நிலைய முதுநிலை காவலர் பெல்ஜியா, கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து எளிதில் விடுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார், ெரயில்வே பாதுகாப்பு படையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், ஆட்டோ டிரைவர்கள், ரயில்வே துப்புரவு பணி யாளர்கள், விற்ப னையாளர்கள், ெரயில்வே மருத்துவ ஊழியர்கள் மற்றும் இதர ரெயில்வே பணியா ளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ரெயில்வே பிளாட்பாரங்களில் கலை நிகழ்ச்சி மூலம் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியாக வந்தனர். இறுதியில் மனித மற்றும் குழந்தை கடத்தல் எதிர்ப்புக்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • குழந்தையை கடத்தியதாக 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூரைச் சேர்ந்தவர் ஜோதிபாசு (வயது 30). இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து இவர்களது மகளான நிலவரசி (7) என்பவர் யாரிடம் இருக்க வேண்டும் என்பது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மகளை தந்தையுடன் இருக்குமாறு கூறி உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலவரசி கடந்த சில நாட்களாக அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நிலவரசியை அழைத்துச் சென்று விட்டனர். இது குறித்து ஜோதிபாசுக்கு தகவல் கிடைக்கவே அவர்களது வீட்டுக்கு சென்று நிலவரசியை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் அவர்கள் சரியான பதில் சொல்லாமல் இருந்து விட்டனர். இதனால் தனது மகளை கடத்திச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் செல்வி, கருப்பசாமி, கிருஷ்ணம்மாள், சிவக்குமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே குழந்தையை கடத்த முயன்றதாக வாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவரது 2-வது மகள் பிரித்தீகா (4). இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் (24) என்பவர் குழந்தையை கடத்தும் நோக்கத்தோடு தூக்கி சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து துரத்தி உள்ளனர். இதனால் பயந்த அங்குகுமார் குழந்தையை அங்குள்ள புதர் பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட குழந்தைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதுகுறித்து குழந்தையின் தந்தை சிவக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அங்குகுமாரை தாக்கியதாக கோடியக்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் என்பவர் தன்னிடம் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது பிரிதீகா என்ற குழந்தை தூக்கி வைத்துக்கொண்டு விபரம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

    ஆனால் அவர் குழந்தை கடத்த வந்துள்ளார் என கருதி கோடியக்கரையை சேர்ந்த ரெங்கசாமி, பரமானந்தம், சசிக்குமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்குகுமாரை தரகுறைவாக பேசி கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

    தலையில் படுகாயம் அடைந்த அங்குகுமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாகவும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    மேலூர் அருகே பெண் வேடமிட்டு குழந்தையை கடத்த முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பதினெட்டாங்குடி கிராமம். இங்கு இன்று காலை நைட்டி அணிந்த 2 பேர் சுற்றி திரிந்தனர். பார்ப்பதற்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் காணப்பட்டனர்.

    ஊரில் உள்ள மந்தை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற 2 பேரும் யாரும் இல்லாத நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி பிஸ்கட் கொடுத்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் 2 பேரும் அந்த குழந்தையை அழைத்துச் செல்ல முயன்றனர்.

    இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் சந்தேகப்பட்டு உடனே அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேரில் ஒருவன் தப்பி விட்டான். மற்றொருவனை பிடித்த இளைஞர்கள், மேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தலைமை மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் ஜெயந்த் ஆகியோர் அந்த நபரை பரிசோதனை செய்தனர். பிடிபட்ட நபர் உண்மையில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
    குழந்தை கடத்தல் பீதியில் மனநோயாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:     

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது.

    இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த 9-ந் தேதி பழவேற்காடு பகுதியில் குழந்தை கடத்தல் பீதியால் மனநோயாளி ஒருவர் பொது மக்களால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட் டார். பின்னர் அவரது உடல் பாலத்தில் தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பழவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், மணிகண்டன், கோதண்டன் உள்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் மன நோயாளி கொலை தொடர்பாக கரிமணல் பகுதியை சேர்ந்த மோகன். செந்தில் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கொலையில் மேலும் சிலரை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். மனநோயாளியை தாக்கும் வீடியோவை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.#tamilnews
    குழந்தை கடத்தல் சம்பவத்தில் சட்டம்- ஒழுங்கை போலீசார் சரியான முறையில் கையாளவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதற்காக தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது. யூகத்தின் பேரில் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்துவதும் சரியானது அல்ல.

    சட்டத்தை யாரும் தன் கையில் எடுக்க கூடாது அது தவறு. எதனால் இது நடைபெறுகிறது என்றால் போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சட்டத்தை கையில் எடுப்பதாக கருத வேண்டி உள்ளது.

    மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும் அளவுக்கு போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.

    வட மாநிலத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம். அவர்களுக்கு மொழி பிரச்சனை இருக்கலாம். அதனால் காரணம் இன்றி தாக்கக் கூடாது.

    காவல் துறை மீதும், அரசு மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கின்றனர். இதை தவிர்க்க வட மாநிலத்தவர் விவகாரத்தில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இந்த பிரச்சனையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது. அதை முறையாக கையாளவில்லை.

    குழந்தை கடத்தல் பீதியில் படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி

    வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி இருப்பவர்கள் பற்றிய முழு விவரமும் போலீசாரிடம் இருக்க வேண்டும். என்ன வேலைக்காக வந்துள்ளனர். எங்கு தங்கி உள்ளனர். அவர்களது பின்னணி போன்ற முழுமையான தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் கையாள முடியும்.

    ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டதையொட்டி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதாக கூறினாலும் அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுக்க கூடாது.

    எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வெளிமாநிலத்தில் சென்று தேர்வு எழுதிய பிரச்சனை குறித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேட்டில் மத்திய அரசை சாடி கடுமையான விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசுக்கு உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் ஏற்படும் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். #KamalHaasan #Childkidnap
    திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது.

    இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் அப்பாவிகள் பலியாகி வருவதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

    இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் தீவிர நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து கமல் தெரிவித்திருப்பதாவது,



    `வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்'

    இவ்வாறு கூறியிருக்கிறார். #KamalHaasan #Childkidnap 

    பழவேற்காட்டில் மனநோயாளி கொலை தொடர்பாக அரங்கம் குப்பம், லைட்அவுஸ்குப்பம், செம்பாசி பள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி 15 பேரை கைது செய்தனர். #Childkidnap #TNPolice
    சென்னை:

    திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்- அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது.

    இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி தாக்குதல் நடத்துகிறார்கள்.

    நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் செல்லும் வழியில் குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றவர்களை கிராம மக்கள் தாக்கியதில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் பலியானார். அவருடன் சென்ற மேலும் 5 பேர் கிராம மக்களால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குழந்தை கடத்தல்காரன் என்று கருதி கிராம மக்கள் அடித்து கொலை செய்து பழவேற்காடு ஏரி மேம்பாலத்தின் சுவரில் கட்டித் தொங்கவிட்டனர்.

    இந்த இரு சம்பவங்களிலும் அப்பாவிகள் பலியானதால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவங்களை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பிலும் பரவ விட்டுள்ளனர். இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வட மாவட்டங்களில் போலீசார் வாகனங்களில் ரோந்து சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் யாராவது நடமாடினாலோ, பிடிபட்டாலோ அவர்களை போலீசில் ஒப்படையுங்கள், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்கிறார்கள்.

    போலீசாரின் விழிப்புணர்வு பிரசாரம் ‘வாட்ஸ்- அப்’களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வேலூரை அடுத்த சங்கிரி கோவில் என்ற இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் குழந்தை கடத்தல்காரன் என்று கருதி தாக்கப்பட்டார். போலீசார் வந்து மீட்டதால் அவர் உயிர் தப்பினார்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காட்டு மயிலூர் கிராமத்தில் வடமாநில பெண் ஒருவர் கிராம மக்களிடம் சிக்கினார். அவரை போலீசார் மீட்டனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்த பின்பும் கிராம மக்கள் இரவில் உருட்டு கட்டையுடன் காவல் காத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்னை பெண் ருக்மணி அம்மாள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ காட்சிகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடினார்கள். முதல் கட்டமாக 67 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் 23 பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மீது கொலை முயற்சி, கொலை உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பழவேற்காட்டில் மனநோயாளி கொலை தொடர்பாக வெளியான வாட்ஸ்அப் வீடியோ மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். அரங்கம் குப்பம், லைட்அவுஸ்குப்பம், செம்பாசி பள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி 15 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருப்பதால் பகலில் கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் மட்டுமே வீடுகளில் தங்கியுள்ளனர். ஆண்கள் உறவினர்களது வீடுகளுக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புகிறார்கள்.

    பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். தெருக்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட போலீஸ் அதிகாரிகள் பழவேற்காட்டில் முகாமிட்டுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி பகுதியில் துணை சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆரம்பாக்கம் பகுதியில் கிராம மக்களிடையே போலீசார் விழிப்புணர்வு  பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.

    அவர்கள் அந்தந்த போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரிடையாக சென்று விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடத்தி உண்மை நிலையை கிராம மக்களுக்கு எடுத்து கூறி வருகின்றனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜனின் கருத்துக்கள், வாட்ஸ்அப் மூலம் உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்புகளில் போலீசாரால் பதிவிடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி பெரும்பேடு லட்சுமிபுரம் கிராமத்தில் கிளி ஜோசியர் ஒருவர் வந்தார். அவரைப் பற்றி கிராம மக்கள் விசாரித்தபோது பதில் சொல்ல முடியாமல் திணறினார். சிலர் அவரை அடிக்க பாய்ந்ததால் கிளி ஜோசியர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பூண்டி ஏரியில் சிறுவர்கள் குளித்துக் கொண்டு இருந்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் வந்து நைசாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் அவரை தாக்கினார்கள்.

    இது தொடர்பாக பூண்டி இருளர் காலனியைச் சேர்ந்த குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Childkidnap #TNPolice
    ×