search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சென்சார் கருவி பழுதால் குழந்தை கடத்தலை தடுக்க முடியவில்லை
    X

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சென்சார் கருவி பழுதால் குழந்தை கடத்தலை தடுக்க முடியவில்லை

    • பல மாதங்களாக பயனற்று கிடக்கிறது
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    கருத்தடை செய்து கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர், சூரியகலாவின் ஆண் குழந்தையை கடத்திச் சென்றார்.

    இதனையடுத்து போலீசார் 8 மணி நேரத்தில் குழந்தையை காஞ்சிபுரத்தில் மீட்டு, பத்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தற்போது 2 கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் சித்தூர் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

    இங்கு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரே பதிவில் கொண்ட டேக் பொருத்தப்படும்.

    இந்த டேக் மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்.எப்.டி. சென்சார் கருவி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஆர்.எப்.டி. (ரேடியோ ஃப்ரீகுவன்சி டெக்னாலஜி மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடென்டிபை) டேக் பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது தாய் கட்டிடத்தை விட்டு வெளியேரினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன் மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ? அல்லது குழந்தையை கடத்தி செல்லவோ முடியாது.

    இந்நிலையில் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆர்.எப்.டி. என்ற தொழில் நுட்ப கருவி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பழைய மகப்பேறு கட்டிடத்தில் மட்டுமே இந்த ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை. மேலும் பழைய கட்டிடத்தில் உள்ள ஸ்கேனர் கருவியும் பல மாதங்களாக பழுதாகி பயனற்று கிடக்கிறது.

    இதனால்தான் குழந்தை கடத்தப்பட்ட போது, அதனை தடுக்க முடியவில்லை. எனவே உடனடியாக ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவியை பழுது பார்ப்பதோடு, புதிய கட்டிடத்திலும் ஆர்.எப்.டி. கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×