என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழந்தை கடத்தல் குறித்து விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை வளாகத்தில் மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் திருநாவுக்கரசு, ஜெய் கமல் தலைமை தாங்கினார்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், ரெயில்வே காவல் நிலைய முதுநிலை காவலர் பெல்ஜியா, கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து எளிதில் விடுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார், ெரயில்வே பாதுகாப்பு படையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், ஆட்டோ டிரைவர்கள், ரயில்வே துப்புரவு பணி யாளர்கள், விற்ப னையாளர்கள், ெரயில்வே மருத்துவ ஊழியர்கள் மற்றும் இதர ரெயில்வே பணியா ளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ரெயில்வே பிளாட்பாரங்களில் கலை நிகழ்ச்சி மூலம் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தி குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியாக வந்தனர். இறுதியில் மனித மற்றும் குழந்தை கடத்தல் எதிர்ப்புக்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்