search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையை கடத்த முயன்றதாக வாலிபர் மீது தாக்குதல் - 4 பேர் மீது போலீசில் புகார்
    X

    குழந்தையை கடத்த முயன்றதாக வாலிபர் மீது தாக்குதல் - 4 பேர் மீது போலீசில் புகார்

    வேதாரண்யம் அருகே குழந்தையை கடத்த முயன்றதாக வாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவரது 2-வது மகள் பிரித்தீகா (4). இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் (24) என்பவர் குழந்தையை கடத்தும் நோக்கத்தோடு தூக்கி சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து துரத்தி உள்ளனர். இதனால் பயந்த அங்குகுமார் குழந்தையை அங்குள்ள புதர் பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட குழந்தைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதுகுறித்து குழந்தையின் தந்தை சிவக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அங்குகுமாரை தாக்கியதாக கோடியக்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் என்பவர் தன்னிடம் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது பிரிதீகா என்ற குழந்தை தூக்கி வைத்துக்கொண்டு விபரம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

    ஆனால் அவர் குழந்தை கடத்த வந்துள்ளார் என கருதி கோடியக்கரையை சேர்ந்த ரெங்கசாமி, பரமானந்தம், சசிக்குமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்குகுமாரை தரகுறைவாக பேசி கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

    தலையில் படுகாயம் அடைந்த அங்குகுமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாகவும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×