என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt doctors"

    • மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கும் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கொல்கத்தா ஆர்.ஜி. கெர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சையை தவிர்த்த மற்ற சிகிக்சைகள் அளிக்க மறுத்துவிட்டனர்.

    பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் போரட்டம் நடத்திய மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் டாக்டர்கள் கலைந்த செல்ல மறுத்துவிட்டர்.

    13 கோரிக்கைகளை வலிறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவ சங்கத்தினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை 4 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, துறை செயலாளர் சுப்ரியா சாகு, மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மேலும், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து மருத்துவ சங்கங்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • அரசு மருத்துவமனை டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அரசின் இந்த உத்தரவுக்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

    தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, டாக்டர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் சப்-கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், பணிக்கு வந்தாலும் சீக்கிரமாக திரும்பி சென்று விடுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவின்பேரில் சப் கலெக்டர் ரத்னா நேற்று மாலை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்தியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரே ஒரு செவலியர் மட்டும் பணியில் இருந்தார்.

    டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். உள் நோயாளிகளிடம் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் செவிலியரிடம் டாக்டர் எங்கே என கேட்டார். அதற்கு செவிலியர் டாக்டர் ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார் என்று கூறினார். இதனால் சப்-கலெக்டர் ரத்னா ஆஸ்பத்திரி முகப்பில் டாக்ருக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார்.

    அப்போதும் டாக்டர் வராததால் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இது குறித்து சப்-கலெக்டர் ரத்னா மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும், அதன் பின் டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×