search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர், ஊழியர்கள் இல்லாததால் சப்-கலெக்டர் அதிர்ச்சி
    X

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர், ஊழியர்கள் இல்லாததால் சப்-கலெக்டர் அதிர்ச்சி

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் சப்-கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், பணிக்கு வந்தாலும் சீக்கிரமாக திரும்பி சென்று விடுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவின்பேரில் சப் கலெக்டர் ரத்னா நேற்று மாலை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்தியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரே ஒரு செவலியர் மட்டும் பணியில் இருந்தார்.

    டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். உள் நோயாளிகளிடம் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் செவிலியரிடம் டாக்டர் எங்கே என கேட்டார். அதற்கு செவிலியர் டாக்டர் ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார் என்று கூறினார். இதனால் சப்-கலெக்டர் ரத்னா ஆஸ்பத்திரி முகப்பில் டாக்ருக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார்.

    அப்போதும் டாக்டர் வராததால் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இது குறித்து சப்-கலெக்டர் ரத்னா மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும், அதன் பின் டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×