search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து-ஆ.ராசா எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் புகார்
    X

    இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து-ஆ.ராசா எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் புகார்

    • 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
    • 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும்

    அன்னூர்

    கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெயபால் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா, சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும், இந்த பேச்சு இந்து மதத்தையும், இந்து மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.


    அப்போது,பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் நாகம்மாள், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி,ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி,ரத்தினசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஜெயபால் கூறுகையில் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் உள்ள 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என்றார்.

    Next Story
    ×