என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து-ஆ.ராசா எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் புகார்
- 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
- 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும்
அன்னூர்
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெயபால் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா, சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும், இந்த பேச்சு இந்து மதத்தையும், இந்து மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.
அப்போது,பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் நாகம்மாள், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி,ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி,ரத்தினசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஜெயபால் கூறுகையில் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் உள்ள 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்