search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்புகளை அகற்ற பா.ஜ.க. கவுன்சிலர் மனு
    X

    பொதுமக்களுடன் பா.ஜ.க. கவுன்சிலர் மனு அளித்த காட்சி.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற பா.ஜ.க. கவுன்சிலர் மனு

    • பேருந்து நிறுத்தமும், ஊரின் நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது.
    • கழிவுநீர் அடைக்காமல் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் திருப்பூர் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    56-வது வார்டுக்கு உட்பட்ட சந்திராபுரம் மெயின் ரோட்டில், அம்மா உணவகம் எதிர்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சாக்கடைகால்வாயை ஆக்கிரமித்தும் நல்ல தண்ணீர் வரும் தொட்டிகளை அடைத்தும்ஒரு மிகப்பெரிய அளவில் செட் ஒன்றை உணவகம் நடத்துவதற்காக, ஒருவர் அமைத்துள்ளார். அந்த இடத்தில் பேருந்து நிறுத்தமும், ஊரின்நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது. பொதுமக்கள் பயன்பாட்டில்உள்ள அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் விநியோகம் சீராகநடைபெறவும் வடிகாலில் கழிவுநீர் அடைக்காமல் செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×