search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோபி அருகே போராட்டத்தில் பங்கேற்க சென்ற அர்ஜூன் சம்பத் திடீர் கைது
    X

    கோபி அருகே போராட்டத்தில் பங்கேற்க சென்ற அர்ஜூன் சம்பத் திடீர் கைது

    • கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவை:

    கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    தடையையும் மீறி இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கோவையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை போலீசார் பீளமேடு பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×