என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "maha vishnu"
- பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
- கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாரண்யம்’ என்றும் பெயர் பெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம்.
இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது.
இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது.
அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.
இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர்.
போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள்.
அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.
அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார்.
அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார்.
அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார்.
அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார்.
இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.
வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது. இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணாரண்யம்' என்றும் பெயர் பெற்றது.
தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.
காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது.
பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள்.
இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.
தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக் கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சி யாய் இன்பம் அளிக்கிறது.
- ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
- ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.
1. ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.
2. ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
3. ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களிடம் இந்த ஆலயத்தின் சிறப்புகளை அர்ச்சகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பது சிறப்பாகும்.
4. ஆதிதிருவரங்கம் ஆலயம் திராவிட கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் திராவிட கலையின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
5. ஆதி திருவரங்கம் ஆலயத்தை மிகப்பெரிய ஆலயம் என்றும் சொல்ல முடியாது. மிகச்சிறிய ஆலயம் என்றும் குறித்துவிடமுடியாது.
2 பிரகாரங்களுடன் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
6. ஆதி திருவரங்கத்தின் ஆலய சுற்றுச்சுவர்கள் மிக மிக உயரமானவை. வைணவ தலங்களில் சில ஆலயங்களில் மட்டுமே இத்தகைய உயரமான சுற்றுச்சுவரை காண முடியும்.
7. இந்த ஆலயத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகிய இரண்டும் மகா மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
8. இந்த ஆலயம் முதல் யுகத்தில் திருமாலின் முதல் அவதாரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எனவேதான் இந்த ஆலயத்தை ஆதி திருவரங்கம் என்று சொல்லுகிறார்கள்.
9. சிறப்பான வைணவ தலங்கள் 108 திவ்ய தேசம் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த தலம் திவ்ய தேச பட்டியலில் இல்லாமல் தனித்துவமாக திகழ்கிறது.
10. ஆதி திருவரங்கம் ஆலயம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும்.
- பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
- இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.
ஆதி திருவரங்கம் திருத்தலத்துக்கு செல்பவர்கள் திட்டமிட்டு யாத்திரை பயணத்தை அமைத்துக் கொண்டால் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பல ஆலயங்களை பார்த்துவிட்டு வர முடியும்.
ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் இருந்து 10 கி.மீட்டர் சுற்றளவில் மிகப்பழமையான சைவ, வைணவ தலங்கள் உள்ளன.
இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.
பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்பவர்கள் அவசியம் திருக்கோவிலூர் ஆலயத்துக்கும் சென்று வாருங்கள்.
இதில் திட்டமிடல்தான் முக்கியமானது.
ஏனெனில் பெரும்பாலான ஆலயங்கள் மதியம் நடை மூடப்பட்டுவிடும்.
ஆனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் பகல் நேரத்தில் நடை மூடப்படுவதே கிடையாது.
அதிகாலை 6 மணிக்கு திறந்தால் இரவு 8 மணிவரை அந்த ஆலயம் திறந்தே இருக்கும்.
எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்.
மற்ற ஆலயங்களுக்கு முன்னதாக சென்றுவிட்டு மதியம் நேரத்தில் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் தரிசனம் செய்யும் வகையில் உங்கள் ஆன்மிக பயணத்தை வைத்துக்கொண்டால் கூடுதலாக சில ஆலயங்களை தரிசனம் செய்யமுடியும்.
சென்னையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள பழமையான ஆலயங்களை தரிசிக்க செல்பவர்களுக்கு ஆலயம் நடை மூடப்படும் நேரம் மற்றும் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் முக்கியமானதாகும்.
ஆதிதிருவரங்கத்துக்கு செல்பவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. எப்போதும் வழிபட முடியும்.
- ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
- இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆதி திருவரங்கம் ஆலயத் தில் தினமும் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.
காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் முதல் பூஜை நடத்தப்படும்.
பிறகு மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் 2&வது பூஜை நடைபெறும்.
மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட மாட்டாது.
மூலவர் சிலை மூலிகை மற்றும் சுதையால் செய்யப்பட்டு இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
அதற்கு பதில் சந்தனகாப்பு செய்யப்படுகிறது.
உற்சவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும்.
சனிக்கிழமை தோறும் சிறப்பாக அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.
அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.
பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.
ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.
- இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.
பொதுவாக பெருமாள் 8 விதமான சயன கோலத்தில் காட்சி அளிப்பார்.
உத்தான சயனம், தர்ப்ப சயனம், தல சயனம், புஜங்க சயனம், யோக சயனம், மாணிக்க சயனம், வடபத்ர சயனம், வீர சயனம் என்று 8 விதமான கோலத்தில் ரங்கநாதரின் சயன கோலங்களை பல்வேறு ஆலயங்களில் காணலாம்.
திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.
இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.முதல் யுகம் பாற்கடலில் பள்ளிக்கொண்டதை குறிக்கும். அதற்கு வெண்மை உகந்தது.
எனவே ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாளை வெண்மை நிற பூக்களால் வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
முதல் யுகத்தில் பெருமாளின் முதல் அவதாரமாக நடந்தது மச்ச அவதாரம் ஆகும்.
மச்ச அவதாரத்திற்கு உரிய திதியாக நவமி திதி உள்ளது.
ஆகையால் நவமி திதி நாட்களில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பு.
ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று வழிபட்டால் மேலும் பலன் கிடைக்கும்.
- ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.
- அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.
நாம் மேலே குறிப்பிட்ட ரங்கநாதர் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் பெருமாள் விதவிதமான சயன கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆலயங்களில் உள்ள பெருமாள்கள் சுமார் 15 அடி முதல் 21 அடி வரை சயன கோலத்தில் உள்ளனர்.
ஆனால் இந்த சயன கோல பெருமாள்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் திருக்கோவிலூர் அருகே
ஆதிதிருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் மிக பிரமாண்டமான சயன கோலத்தில் இருக்கிறார்.
23 அடி நீளத்தில் அங்கு ரங்கநாதர் புஜங்க சயனத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய சயன கோல பெருமாள் இவர்தான். ஸ்ரீரங்கம் பெருமாளையும் விட பெரியவர்.
ஸ்ரீரங்கம் தலம் தோன்றும் முன்பே உதித்து விட்டவர். எனவே இவரை பெரிய பெருமாள் என்று சொல்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் 7&வது அவதாரத்தில்தான் வந்தார்.
ஆனால் ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதல் அவதாரத்திலேயே வந்து விட்டவர்.
இதில் இருந்தே ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதன்மையானவர் என்பது புரியும்.
ஆனால் தமிழகத்தில் நிறைய பேர் இந்த உண்மையை இன்னமும் உணராமலேயே இருக்கிறார்கள்
ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.
அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.
- இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
- பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும்.
இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
பவுர்ணமி அன்று சத்ய நாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது.
பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது.
ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறை வேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம்.
இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது? பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம்.
அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம்.
இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.
திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம்.
பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம்
அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.
இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக் கொள்ளலாம்
அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.
அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.
மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள்.
மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.
இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.
இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம்.
நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம்.
உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள்.
அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.
ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள்.
சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள்.
சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள்.
கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள்.
அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள்.
பிறகு விநாயகரை மனதாற வணங்கி விட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.
சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள்.
அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம்.
பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.
சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிட வேண்டும்.
- ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது.
- வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும்.
பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர், தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை உலகில் இருக்கும் அனைவரும் பெறவேண்டும் என விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்குவாசல் வழியாக தாங்கள்அர்ச்சாவதாரத்தில் வெளியே வரும்போது தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின் தொடர்ந்து வருபவர் களுக்கும் அவர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி தந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பெருமாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். எனவே தான் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கபட்டு சாமி பவனிவரும் நிகழ்ச்சி உருவானது.
பகல்பத்து - இராபத்து
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் தலங் களில் 21 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்கள் இராபத்து என்றும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று செய்யக்கூடாதது
ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வான்.
ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
கோவிலில் வழிபடுவது எப்படி?
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும். அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.
வீட்டில் வழிபடுவது எப்படி?
திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் திருமாலின் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும். பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.
அன்று, பசுக்களுக்கு அகத்திக்கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கி செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
- கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார்.
- சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார்.
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன.
கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.
சிவன் கோவில்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.
“நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மகா விஷ்ணு.
புன்னகையுடன் வினவிய பெருமாளைப் பார்த்த சனி “உமக்குத் தெரியாததைப் போன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா? இருந்தாலும் கூறுகிறேன். உம்முடைய தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணன் எனும் ஆலயத்திருப்பணி செய்யும் மனிதரைப் பிடிக்கும் காலம் இது. அதற்காகவே செல்கிறேன்” என்று பதிலளித்தார்.
உடனே பெருமாள், “அதைப்பற்றி பேசவே உன்னைத் தடுத்து நிறுத்தினேன். அவன் மனிதரில் மாணிக்கம். என் மேல் உள்ள பக்தியால் பார்ப்பவரிடம் எல்லாம், என் பெருமைகளை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தை வளர்த்து வருகிறான். மேலும் நான் குடியிருக்கும் பழுதடைந்த ஆலயங்களை எல்லாம் பிறரிடம் கையேந்தி கொடைகள் பெற்று, புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறான். நீ அவனைத் துன்பப்படுத்துவதை எப்படி என் மனம் பொறுக்கும்?” என்றார்.
ஆனால் சனி கடமையில் சுத்தமானவன் அல்லவா? “பெருமாளே! அந்த ஈசனே சொன்னாலும் என் கடமைதான் எனக்கு முக்கியம். ஆனாலும் உங்கள் மனம் கவர்ந்த பக்தனுக்காக நீங்கள் கவலைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே ஏழரை வருடங்களுக்குப் பதில் ஏழரை மாதங்கள் அவனைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
பெருமாளோ, “இல்லை.. இல்லை.. அவ்வளவு கஷ்டங்களை அவன் தாங்க மாட்டான். ஒரு ஏழரை நாழிகை மட்டும் அவனைப்பிடித்து உன் கடமையை ஆற்று” என கேட்க, சனிக்கு பெரும் மகிழ்ச்சி “நல்லது.. ஏழரை நாழிகையில் அவனைப்படுத்தும் பாட்டைக் காண தயாராக இருங்கள். வருகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் சனி.
பெருமூச்சு விட்ட பெருமாளும், நடப்பதைக் காணும் ஆவலில் பூலோகம் வந்தார்.
அங்கு கடமையே என்று விஷ்ணு சுலோகங்கள் சொல்லி, காலை வழிபாட்டை முடித்த ராதாகிருஷ்ணன் புதியதாக கட்டத் தொடங்கி இருக்கும் ஆலயத்தின் கணக்குகளை பார்க்கத் தொடங்கினார். இதுதான் சமயமென்று அவரைப் பிடித்தார் சனீஸ்வரன்.
அப்போது அங்கு வந்த இருவர் நன்கொடை என்று சொல்லி ஒரு மூட்டையை அவரிடம் தந்து வணங்கி விட்டு அவசரமாக சென்றனர். அதை அப்புறம் பிரிக்கலாம் என்றெண்ணி, மீண்டும் கணக்குகளை பார்க்கத் தொடங்கியவரை மீண்டும் அழைத்தது ஒரு குரல்.
நிமிர்ந்து பார்த்தவரை என்னவென்று கேள்வி எழுப்பக்கூட அனுமதிக்காமல், அடித்து துவைத்து அரசவைக்கு இழுத்துச்சென்று, அரசன் முன் நிறுத்தினான் ஒரு காவலாளி.
அங்கு இருந்த பணக்கார சீமாட்டி, “இதோ.. இவர்தான் கடைசியாக கோவிலுக்கு நன்கொடை என்று என் இல்லத்திற்கு வந்தவர். இவர்தான் அந்த நகைகளை எடுத்திருக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினாள்.
ராதாகிருஷ்ணன் பதறினார். “ஐயோ! என்ன இது. நான் எதற்கு உங்கள் நகைகளை எடுக்கிறேன். பகவான் புண்ணியத்தில் மூன்று வேளை உணவுடன், இருக்க ஆலயம், உடுக்க காவித் துணி உள்ளது. எனக்கு எதற்கு உங்கள் நகை. நான் குற்றமற்றவன்.”
ஆனால் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்தில் இருந்து, காவலாளி கொண்டு வந்திருந்த மூட்டை, அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணியின் நகைகள் இருந்தன.
சனீஸ்வரனின் விளையாட்டு தொடங்கி விட்டது..
நகைகளைத் திருடிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு சவுக்கடிகளும் சாணிக்கரைசலும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்கள் அவரைத் தூற்றினர்.
மனம் ஒடிந்த அந்த விஷ்ணு பக்தர்கள் ஆலய திருக்குளம் முன்பாக நின்றார். “பெருமாளே! என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்னைத்தவிர வேறொன்றும் என் சிந்தையில் நிறுத்தியதில்லை. இந்தப் பழியையும் நீ எனக்குத் தந்த பரிசாகவே நினைக்கிறன். ஆனாலும் பழியோடு வாழ்வதை விட உன் காலடியில் சேர்கிறேன்” என்றபடி குளத்தில் மூழ்கி இறக்கப் போனார்.
அப்போது ஒரு அசரீரி அவரை தடுத்து நிறுத்தியது. ‘நான் சனீஸ்வரன்! உங்களின் இந்த துயரத்துக்கு நானே காரணம். பெருமாள் மீதான உங்களின் பக்தியால் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று வெறும் ஏழரை நாழிகை மட்டுமே, இத்துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது. இனி உங்கள் மேல் உள்ள பழிச்சொல் நீங்கும்.”
அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர், அரசரும், பணக்கார பெண்மணியும். சற்று முன்புதான் நகையைத் திருடிய உண்மையான திருடர்கள் பிடிப்பட்டதாகவும், அவர்கள் தான் நகையை வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என ரதாகிருஷ்ணனிடம் நன்கொடையாக அளித்ததை ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். இருவரும் அந்த பக்தரிடம் மன்னிப்பும் கோரினர். ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் விஷ்ணு பக்தரை மரியாதையோடு வரவேற்றனர்.
நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது.
இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்