search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikunda ekadasi"

    • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
    • திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

    இதேபோல் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

    இலவச தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலையுடன் தீர்ந்தது.

    இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கோவிலில் நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் திரும்பி வருகின்றனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டு களை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.

    திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள்.
    • பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை யொட்டி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    இதன்படி இந்த ஆண்டும் பார்த்தசாரதி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 2½ மணி அளவில் உபயதாரர்கள், கட்டணதாரர்கள் என 1,500 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதன் பின்னர் நாளை காலை 6 மணியில் இருந்து பொது தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை இரவு கோவில் நடை சாத்தப்படும் வரையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். இந்த ஆண்டு அதைவிட கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் நாளை பார்த்தசாரதி கோவிலில் திரள்வார்கள் என்று எதிர் பார்ப்பதால் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரது மேற்பார்வை யில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். இவர்களோடு 6 துணை கமிஷனர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

     நாளை காலை 6 மணி தரிசனத்துக்கு இன்று இரவில் இருந்தே பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக 2 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதியில் இருந்து ஒரு வரிசையும், கிழக்கு கோபுரத்தின் எதிர் திசையில் இருந்து ஒரு வரிசையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு சிறப்பு தரிசனம் கிடையாது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருப்பதால் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசை வழியாகவே அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ள னர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதையொட்டி திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று பிற்பகலில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட உள்ளனர். இன்று இரவு முதல் நாளை இரவு வரை தொடர்ச்சியாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    கோவிலை சுற்றிலும் 10 இடங்களில் தீயணைப்பு கருவிகளுடன் 3 வாகனங்களில் 60 தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெயில் மற்றும் மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகரத்திலான தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் தெப்பக்குளத்தில் ரப்பர் படகுகளுடன் 10 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர் விநி யோகம், தற்காலிக கழிப்பிட வசதி, தாய்மார்கள் பாலூட் டும் தற்காலிக அறை என மற்றும் கோவிலுக்கு உள்ளேயும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. திருச்செந்தூர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் நெல்லையில் இருந்து மூலைகரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, மெஞ்ஞானபுரம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது. இதனால் கோவில் வளாகத்தில் தங்கியுள்ள பக்தர்கள், உள்ளூர் பக் தர்கள் சுவாமியை எளிதாக தரிசனம் செய்து வரு கின்றனர்.

    இன்று காலையில் சங்கரன்கோவில் பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
    • நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. இதற்காக ஏற்கனவே ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது.

    மேலும் பக்தர்களுக்கு 4 லட்சம் இலவச தரிசன டோக்கன் வழங்க விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

    திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்களில் இன்று மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

    இதன் காரணமாக நாளை முதல் திருப்பதியில் நேரடி இலவச தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இதற்காக மலை அடிவாரத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களின் ஆதார் அட்டை மற்றும் தரிசன டோக்கன்களை சரி பார்த்து மலைக்கு அனுப்பி வைப்பார்கள்.

    9 மையங்களிலும் தரிசன டோக்கன் தீரும் வரை பக்கர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.

    அந்த டோக்கனில் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

    தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. இதனால் பக்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக திருப்பதிக்கு வருவார்கள் .

    டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி உள்ளதால் கீழ் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

    டோக்கன் வழங்கப்படும் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.

    இன்று வழக்கம் போல நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நாளை முதல் டோக்கன் இல்லாத பக்தர்கள் அனுமதிக்க படமாட்டார்கள். நேரடி இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் 9 மையங்களில் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். அந்த இடங்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை பெறலாம்.

    பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்சில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உள்ளன.

    நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.

    • அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும்.
    • நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    முன்னதாக 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சொர்க்கவாசல் திறப்புடன் நாளை ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.

    இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

    முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்ட ருள்வார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதிப்பார்.

    அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார்.

     வைகுண்ட ஏகாதசிவிழா வின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகினி அலங்காரம் வைபவம் இன்று (22-ந் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்குமேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார், இரவு 8 மணிக்குமேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதை யான பின் 9 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலு வலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங் கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.

     வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழா கோலம் பூண்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட, 21 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலிக் கின்றன. மேலும், கோவில் வளாகத்திற்குள் மூலவர் ரங்கநாதர், சங்கு, சக்கரம், நாமம் போன்ற உருவங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக திருக்கோவில் ரெங்க விலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

    • இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
    • ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

    சிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.

    மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக்கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.

    முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

    இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை `பாரணை' என்கிறார்கள்.

    உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

    • விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.
    • இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவிகிடைக்கும்.

    இந்துக்களின் மிக முக்கிய விஷேசங்கள், பண்டிகைகளில் ஒன்றுதான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம். இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், `வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது. பகல் பத்து, ராபத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி எப்படி பிறந்தது?

    தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார். வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப்பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

    முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    • சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ந்தேதி அதிகாலை.
    • திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ராத்திரி பத்து என்று தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும். அப்போது திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாளாக திருநெடுந்தண்டகத்துடன் தொடங்கும். நான்முகனுக்கு உண்டான அகங்காரத்தை ஒடுக்க நினைத்த திருமால், தன் காதுகளில் இருந்து மது, கைடபர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த திருமால், பிரம்மாவை காப்பாற்றி, அசுரர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகக் கூறினார்.

    அப்போது அந்த அசுரர்கள் திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக ஆணவத்துடன் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அவ்வாறே அசுரர்களை வதமும் செய்தார். அப்போது ``பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்ற வரத்தை அசுரர்கள் கேட்டனர்.

    அதன்படி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலாம் சொர்க்கவாசல் திறந்து, அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார் திருமால். அசுரர்கள் பெற்ற முக்தியை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ``பெருமாளே! தங்களது அர்ச்சாவதாரம் விளங்கும் சகல ஆலயங்களிலும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும்.

    அப்போது அந்த வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் பரமபத மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர் அசுரர். தீனகருணாகரனான திருமாலும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுவே வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் ஐதீகத்தின் திருக்கதை.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாள்.
    • வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளல்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லட்சுமி பதக்கம், மகர கர்ண பத்ரம், புஜகீர்த்தி, ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, காசு மாலை, 2 வட முத்து மாலை, ஒட்டியாணம், அடுக்கு பதக்கங்கள்உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.
    • 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் தூய்மைப் பணி தொடங்கி 10 மணி வரை 4 மணி நேரம் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அதிகாலையில் சுவாமிக்கு திருப்பாவை நிவேதனம் செய்த பின், சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.

    அதன்பின் ஆனந்த நிலையத்தில் தொடங்கி, தங்க வாசல் வரை மற்றும் உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை உபகரணங்கள் உள்ளிட்டவை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    பிறகு, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி, மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அர்ச்சகர்கள், சுவாமி சிலையை மறைத்திருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்ற 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி இதுகுறித்து கூறுகையில் பல நூறு ஆண்டுகளாக ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கருவறை மற்றும் உபகோவில்களின் சுவர்களில் எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் வாசனை திரவியங்கள் தூவப்பட்டுள்ளன என்றார்.

    • பக்தர்கள் சிரமமின்றி ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக ஏற்கனவே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடபட்டுள்ளது.
    • 10 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் வருகிற 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக ஏற்கனவே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடபட்டுள்ளது.

    10 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினங்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பரிந்துரை கடிதங்கள் ஏற்க்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 61,499 பேர் தரிசனம் செய்தனர். 24,789 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இலவச நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • `டைம் ஸ்லாட்’ தரிசன டோக்கன்கள் ரத்து.
    • டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானத்தின் பல்வேறு துறை தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதன் பிறகு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு `சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. இந்தச் சொர்க்கவாசல் தரிசனம் ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.

    22-ந்தேதி மதியம் 2 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்ட்டர்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் திருமலையில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் வழங்குவோம்.

    திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், ஜீவகோணா உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமாநாயுடு உயர்நிலைப் பள்ளி வளாகம், பைராகிப்பட்டிகை ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், எம்.ஆர்.பள்ளி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    22-ந்தேதி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட `டைம் ஸ்லாட்' தரிசன (எஸ்.எஸ்.டி.டோக்கன்கள்) டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தரிசன டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் குறைந்த எண்ணிக்கையிலான அறைகள் மட்டுமே இருப்பதால், இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் வி.ஐ.பி.பக்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டோக்கன் இல்லாதவர்கள் திருமலையை சுற்றி பார்க்கலாம்

    வைகுண்ட துவார தரிசனத்தின் பலன் 10 நாட்கள் நீடிக்கும். எனவே வி.ஐ.பி. பக்தர்கள் மற்றும் பிற பக்தர்கள் 10 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னால் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம். ஆனால், சாமி தரிசனம் செய்ய முடியாது. அவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தலாம். மேலும் திருமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சாமி தரிசனத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×