search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free darshan"

    • 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.
    • 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.

    மலையில் உள்ள ஓட்டல்களில் பக்தர்களுக்கு அதிக விலையில் உணவு வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.

    பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க அன்னமைய்யா மாளிகை மற்றும் நாராயணகிரி பகுதியில் ஓட்டல்கள் அமைக்க சுற்றுலாத் துறைக்கு கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும்.

    வரும் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழாவை பிரமாண்ட முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    கருட சேவை நடைபெறும் 19-ந் தேதி மலை பாதையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு அறை வாடகை விடுவது நிறுத்தப்படும். வரும் 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    மறுநாள் அதிகாலை 3 .15 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏழுமலையான் கோவிலில் 3-வது சனிக்கிழமையை யொட்டி நேற்று முதலே ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். 30 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 72, 104 பேர் தரிசனம் செய்தனர். 25,044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    கடந்த மாதம் ஏழுமலையான் கோவிலில் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ரூ 110 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    • 10 நாள்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில்குமார் சிங்கால் திருமலையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது: வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜனவரி 1ந் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். 10 நாட்களுக்கு தொடர்ந்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் எதிரே விஷ்ணுநிவாசம், ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சத்திரங்கள், பேருந்து நிலையம் எதிரே சீனிவாசம் வளாகம், இந்திரா மைதானம், ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி, பைராகிப்பட்டேடாவில் ராமநாயுடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ராமச்சந்திர புஷ்கரணி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    திருப்பதியில் மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கான இலவச தரிசனங்களை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது.

    எனினும், மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது. அதனால் இந்த இரு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

    இந்நிலையில், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதால், மீண்டும் இம்மாதம் முதல் அந்த தரிசனத்தை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

    அதன் படி வரும் 10 மற்றும் 24-ந் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர் மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வீதம் இரு நாட்களில் 8 ஆயிரம் பேர் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.

    அதேபோல் இம்மாதம் 11 மற்றும் 25-ந் தேதி ஆகிய இரு நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.

    தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
    ×